சென்னை : சென்னையில் ஓட்டல் முன்பு பெட்ரோல் வெடிகுண்டு வீசி தாக்குதல் நடத்திய நபரை போலீசார் கைது செய்தனர்.
கடந்த 26 ம் தேதி சென்னை சாலிகிராமம், கங்கப்பா தெருவிலுள்ள M.R.M. ரெசிடென்சி என்ற ஹோட்டல் முன்புற கதவு மீது மர்ம நபர்கள் பெட்ரோல் நிரப்பிய பாட்டிலை கொளுத்தி வீசிச் சென்றதில், பெட்ரோல் நிரப்பப்பட்ட பாட்டில் கதவு மீது பட்டு வெடித்து சிதறி, கண்ணாடி கதவு உடைந்தது. இச்சம்பவத்தில் யாருக்கும் காயமில்லை.
இது தொடர்பாக மேற்படி ஹோட்டல் உரிமையாளர் தமீம் அன்சாரி என்பவர் கொடுத்த புகாரின்பேரில், R-5 விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததின்பேரில், வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
R-5 விருகம்பாக்கம் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் சம்பவ இடத்தினருகில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை தீவிரமாக ஆய்வு செய்ததில், 2 நபர்கள் இருசக்கர வாகனத்தில் வந்து பெட்ரோல் நிரப்பிய பாட்டில்களை கொளுத்தி வீசியது தெரியவந்தது. அதன்பேரில், காவல் குழுவினர் தீவிர விசாரணை மற்றும் தேடுதலில் ஈடுபட்டு, மேற்படி குற்ற சம்பவத்தில் ஈடுபட்ட வினோத் (எ) வினோத்குமார் என்ற நபரை கைது செய்தனர்.
விசாரணையில், எதிரி வினோத்குமாருக்கும், ஹோட்டல் நிர்வாகத்திற்கும் இடையே பணம் கொடுக்கல், வாங்கல் தகராறு காரணமாக, வினோத்குமார் அவரது கூட்டாளி கலை (எ) கலைச்செல்வன் என்பவருடன் சேர்ந்து மேற்படி குற்ற சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.
மேலும் விசாரணையில் எதிரி வினோத்குமார் மீது T-4 மதுரவாயல் மற்றும் S-15 சேலையூர் காவல் நிலையங்களில் தலா 1 கொலை வழக்கு என 2 கொலை வழக்குகள் உள்பட பல குற்ற வழக்குகள் உள்ள நிலையில், ஏற்கனவே பல தடவை குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டவர் என்பது தெரியவந்தது.
கைது செய்யப்பட்ட எதிரி வினோத்குமார் விசாரணைக்குப் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார். தலைமறைவாக உள்ள கலை (எ) கலையரசனை பிடிக்க காவல் குழுவினர் தேடுதலில் ஈடுபட்டுள்ளனர்.
படுதோல்வியடைந்த படம் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சல்மான் கான் நடிப்பில் உருவான “சிக்கந்தர்” திரைப்படம் கடந்த மார்ச் மாதம் 30 ஆம்…
நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை தமிழக அரசு அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டியுள்ளது. அனைத்து கட்சிகளும் பங்கேற்று ஒரு…
பிரம்மாண்ட படைப்பு அட்லீ அல்லு அர்ஜுனை வைத்து இயக்கவுள்ள திரைப்படத்தின் அதிகாரப்பூர்வை அறிவிப்பு வீடியோ ஒன்றைல் இன்று சன் பிக்சர்ஸ்…
தடை செய் தடை செய்… தமிழ் சினிமா உலகில் பல திரைப்படங்களுக்கு பல காரணங்களுக்காக தடை விதிக்க வேண்டும் என…
தமிழக அரசு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை ஆளுநர் கிடப்பில் போட்டு வந்தார். இதனால் தமிழக அரசு - ஆளுநருக்கும் மோதல்…
This website uses cookies.