Categories: தமிழகம்

திட்டமிட்டு நாடாளுமன்றத்தில் தாக்குதல்.. 5 மாதங்களுக்கு முன்னே முகநூல் மூலம் பழகி சதி செய்துள்ளனர் : ப.சிதம்பரம் பகீர்!!

திட்டமிட்டு நாடாளுமன்றத்தில் தாக்குதல்.. 5 மாதங்களுக்கு முன்னே முகநூல் மூலம் பழகி சதி செய்துள்ளனர் : ப.சிதம்பரம் பகீர்!!

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் மாநிலத் தலைவர் சோ‌. பாலகிருஷ்ணன் இல்ல திருமண விழா ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் நடைபெற்றது. முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம், தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன், எம்எல்ஏக்கள் முருகேசன், மாங்குடி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் செய்தியாளர்களிடம் பேசுகையில், நாடாளுமன்றத்தில் மக்களவையில் நடந்த தாக்குதல் மத்திய அரசின் கவனக்குறைவை காட்டுகிறது. 22 ஆண்டுகளுக்கு முன்னர் இதே நாளில் டிசம்பர் மாதம் 13 ஆம் தேதி பயங்கரவாதிகளின் தாக்குதல் நடத்தப்பட்டது.

இதில் ஒன்பது பேர் உயிரிழந்தனர். மீண்டும் டிசம்பர் 13 ஆம் தேதி தாக்குதல் நடத்துவோம் என எச்சரித்தனர். இது பயங்கரவாத தாக்குதல் அல்ல. இருந்தாலும் இது ஒரு தாக்குதல் தான். ஐந்து முதல் ஆறு நபர்கள் வெல்வேறு மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் மகாராஷ்டிரா, பீகார், கர்நாடகா என வெல்வேறு மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் ஒரே இடத்தில் ஒன்றுகூடி தங்கி யாருடைய தூண்டுதலின் பேரில் தாக்குதல் செய்திருக்கிறார்கள் என்றால் உளவுத்துறை என்ன செய்கிறது?.

மூன்றடுக்கு பாதுகாப்பு, நான்கடுக்கு பாதுகாப்பு என்று சொல்கிறார்களே தவிர எந்த அடுக்கு பாதுகாப்போம் இந்த தாக்குதலை தடுக்க முடியவில்லையே. உளவுத்துறையை தாண்டி, மத்திய ரிசர்வ் போலீசை தாண்டி, டெல்லி காவல் துறையை தாண்டி, நாடாளுமன்ற பாதுகாப்பு துறையை தாண்டி நாடாளுமன்றத்திற்குள் நுழைந்து பார்வையாளர்கள் அரங்கம் வரை சென்று அங்கிருந்த பாதுகாவலர்களை மீறி அறைக்குள் குதித்து கண்ணீர் புகை வெடியை வெடிக்கிறார்கள் என்றால் இது முழுக்க முழுக்க அரசினுடைய, அரசின் அங்கங்களுடைய கவனக்குறைவை காட்டுகிறது.

வெல்வேறு மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் முகநூலில் நண்பர்களாகி தாக்குதலை நடத்தி இருக்கிறார்கள் என்றால் இது நான்கு, ஐந்து மாதங்களாக திட்டமிடப்பட்டிருக்கும். 15 அடி குதிப்பது என்பது எளிதல்ல.

கை, கால்களை உடைத்துக் கொள்ளாமல் பயிற்சி பெற்றவர்கள் தான் 15 அடி குதிக்க முடியும். நான்கு, ஐந்து மாதங்கள் பயிற்சி இல்லாமல், திட்டமில்லாமல் இந்த தாக்குதல் நடத்தி இருக்க முடியாது இது பயங்கரவாத தாக்குதல் அல்ல.

அரசியல் ரீதியாக எதிர்ப்பை தெரிவிப்பதற்காக தாக்குதல் செய்து இருக்கிறார்கள். ஐந்து, ஆறு மாதங்கள் முகநூலில் நண்பர்களாகி பயிற்சி பெற்றதை உளவுத்துறை கண்டுபிடிக்கவில்லை என்பது வியப்பாக உள்ளது என பேட்டியளித்தார்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

கருவைக் கலைத்துவிடு.. காசு தாரோம்.. ஜிம் ஓனரின் தாய் டீல்.. பெண் விபரீத முடிவு!

தஞ்சையில், நெருங்கிப் பழகி தனிமையில் இருந்ததால் உருவான கருவைக் கலைக்கச் சொல்லி கொலை மிரட்டல் விடுத்த ஜிம் உரிமையாளர் கைது…

14 seconds ago

‘கூலி’ அடிபோலி…1000 கோடி உறுதி…சவால் விட்ட இளம் நடிகர்.!

அடித்து சொல்லும் சந்தீப் கிஷன் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் கூலி திரைப்படம் 2025 ஆம் ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்படும்…

8 minutes ago

பங்கேற்க முடியாது.. போலீசார் மீதே நடவடிக்கை? – அண்ணாமலை முக்கிய முடிவு!

அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெறும் நாளில், கையெழுத்து இயக்கத்தை நடத்த உள்ளதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். திருப்பூர்:…

1 hour ago

குழந்தைகளை பார்க்கவே பயமாக உள்ளது…நடிகர் மாதவன் வேதனை.!

நடிகர் மாதவனின் புதிய செயலி நடிகர் மாதவன் பங்குதாரராக இருக்கும் ‘Parent Army (Parent Geenee)’ செயலி சென்னையில் உள்ள…

1 hour ago

இட்லி கடையை அடித்து நொறுக்கிய அஜித் ரசிகர்கள்… தனுஷின் நிலைமை என்ன?

தனுஷ் இயக்கத்தில் உருவாகும் 4வது படம்தான் இட்லி கடை. ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியாகும் இந்த படத்திற்கு ரசிகர்கள்…

2 hours ago

ஆதிக் ரவிச்சந்திரனுக்கு தங்க மோதிரம்…சென்னைக்கு படையெடுத்த மதுரை ரசிகர்கள்.!

உச்சகட்ட வைப்பில் அஜித் ரசிகர்கள் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள குட் பேட் அக்லி படத்தின் டீசர் நேற்று இரவு வெளியாகி…

2 hours ago

This website uses cookies.