கோவை: நஞ்சுண்டாபுரம் கிராமத்தில் தோட்ட வேலியில் மின்சாரம் பாய்ச்சி ஆண் யானை கொலை செய்யப்பட்ட வழக்கில் தலைமறைவாக இருந்த தோட்ட உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கோவை மாவட்டம் கோவை வனச்சரகத்திற்கு உட்பட்ட நஞ்சுண்டாபுரம் கிராமம் வரப்பாளையம் பகுதியில் மனோகரன் நிலத்தில் கடந்த பிப்ரவரி 12ம் தேதிதோட்டத்தை சுற்றி போடப்பட்டிருந்த கம்பி வேலியில் மின்சாரத்தை பாயச்சி ஆண் காட்டு யானை கொல்லப்பட்டது.
இதுகுறித்து, வன உயிரின குற்ற வழக்கு பதிவு செய்யப்பட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இவ்வழக்கில் தொடர்புடைய தோட்ட உரிமையாளர் மனோகரன் மற்றும் அவரது மகன் நரேஷ் ஆகியோர் தலைமறைவான நிலையில் வனத்துறை சிறப்பு தனிப்படைகள் அமைக்கப்பட்டு தேடும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன.
இந்நிலையில் பல்வேறு பகுதிகளில் தலைமறைவாக பதுங்கியிருந்து நீதிமன்றங்களில் பலமுறை முன் பிணை கோரியும், நீதிமன்றங்களால் அவைகள் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், தற்சமயம் கர்நாடகா மாநிலத்திலிருந்து கோவை வந்த மனோகரன் இன்று காலை சுமார் 6.30 மணியளவில் பன்னிமடை பேருந்து நிறுத்தம் அருகில் வைத்து வனத்துறை தனிப்படை குழுவினரால் கைது செய்யப்பட்டார்.தொடர்ந்து விசாரணை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…
மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…
This website uses cookies.