ரேஷன் கடையில் பிளாஸ்டிக் அரிசி விநியோகிகப்படுவதாக ஆதாரத்துடன் பாஜகவினர் ஆட்சியரிடம் புகார் அளித்துள்ளளனர்.
மதுரை : விலையில்லா அரிசி வழங்கும் திட்டத்தின் மூலம் நாடு முழுவதும் மாதந்தோறும் நியாய விலை கடைகளின் மூலம் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், மதுரை மாவட்டம் சக்கிமங்கலத்தில் உள்ள சமத்துவபுரத்தில் நியாய விலை கடைகளில் சமீபத்தில் வழங்கப்பட்ட விலையில்லா அரிசி மிகவும் தரம் குறைந்ததாகவும், தண்ணீரில் மிதக்கும் வகையிலும் பிளாஸ்டிக் அரிசி போன்றும் உள்ளதாகவும் பொது மக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர் என பாஜக மதுரை மாவட்ட தலைவர் மகாசுசீந்திரன் தலைமையில் அரிசியுடன் வந்து மதுரை மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளிக்கப்பட்டது.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த பாஜக மாவட்ட தலைவர் மகா சுசீந்திரன் பேசும்போது, மழை காலங்களில் தொற்று நோய் பரவி வரும் இந்த வேளையில் இத்தகைய தரமற்ற அரிசிகளை சமைத்து உண்டால் வயிற்று கோளாறு மற்றும் உயிரிழப்பு ஏற்படக்கூடிய அபாய நிலை உள்ளது என்பதால் ரேஷன் அரிசியில் தொடர்ந்து கலப்படம் செய்யப்பட்டுள்ளது குறித்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…
சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…
ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…
எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…
தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…
பழனியில் தமிழக முன்னாள் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:-…
This website uses cookies.