தஞ்சை : மஞ்சப்பைத் திட்டத்தால் தமிழகத்தில் பிளாஸ்டிக் பயன்பாடு 20 சதவீதம் வரை குறைந்துள்ளதாக அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்துள்ளார்.
தஞ்சை பெரியார் மணியம்மை பல்கலைகழகத்தில் 34வது ஆண்டு விழா பல்கலைக்கழக வேந்தர், திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி தலைமையில் நேற்று நடைபெற்றது. பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய பேராசிரியர்கள், மாணவர்களுக்கு விருதுகள் வழங்கும் இந்நிகழ்ச்சியில் சுற்றுச்சூழல் மற்றும் இளைஞர் நலன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சிவ. மெய்யநாதன் கலந்து கொண்டார்.
பின்னர், செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது :- சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் தினமும் பல டன் காய்கறி கழிவுகள் கொட்டப்படுகின்றன. காய்கறி கழிவுகளில் இருந்து மின்சாரம் மற்றும் இயற்கை உரம் தயாரிக்க 25 கோடி ரூபாய் நிதியை முதல்வர் ஒதுக்கியிருக்கிறார்.
44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி மாமல்லபுரத்தில் இம்மாதம் 28ம் தேதி உலகமே வியக்கும் வகையில் பிரம்மாண்டமாக துவங்க உள்ளது. அதற்க்காக 52 ஆயிரம் சதுர அடி பரப்பில் உலகத்தரத்தில் அரங்கம் அமைக்கப்பட்டு வருகிறது. ஆகஸ்ட் 1ம் தேதி நடைபெற உள்ள நிறைவு விழாவில் முதல்வர் பங்கேற்று பதக்கக்கங்கள், பரிசுகளை வழங்க உள்ளார்.
மேலும், தமிழகத்தில் இதுவரை 1,175 டன் பிளாஸ்டிக் பறிமுதல் செய்யப்பட்டு 177 கம்பெனிகள் மூடப்பட்டுள்ளது. 105 கோடி ரூபாய் வரை அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. மஞ்சப்பைத் திட்டம் உள்ளிட்ட விழிப்புணர்வால் தமிழகத்தில் பிளாஸ்டிக் பயன்பாடு 20% வரை குறைந்துள்ளது.
வெளி மாநிலங்களில் இருந்து பிளாஸ்டிக் வருவதால் செயல்பாட்டை குறைக்க முடியவில்லை. 1.7.22 முதல் இந்தியா முழுவதும் பிளாஸ்டிக் தடை அமலுக்கு வந்துள்ளது. 14 வகையான பிளாஸ்டிக்கு கடை விதிக்கப்பட்டு அதற்கான மாற்றுப் பொருட்களை அரசு அறிவித்துள்ளது. மக்கள் மனங்களில் ஏற்படும் மாற்றத்தை பொறுத்து முழு வெற்றி இருக்கும், என தெரிவித்தார்
தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…
மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…
This website uses cookies.