வேலூரில் வீட்டில் தனியாக இருந்த பிளஸ் 1 மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட வாலிபர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.
வேலூர் மாவட்டம் காட்பாடியைச் சேர்ந்தவர் 16 வயது சிறுமி. இவர் அங்குள்ள தனியார் பள்ளியில் பிளஸ் 1 படித்து வருகிறார். இவர்களது உறவினர்கள் சேண்பாக்கத்தில் வசிக்கின்றனர். உறவினர் மகனான சங்கர் (23) என்பவர் கடந்த மே மாதம் மாணவியின் வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது, வீட்டில் தனியாக இருந்த மாணவியிடம், சங்கர் பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.
மேலும், இதை யாரிடமும் சொல்லக்கூடாது என மிரட்டி உள்ளார். இந்நிலையில் மன அழுத்தத்தில் இருந்த மாணவியை மருத்துவரிடம் அழைத்துச் சென்றுள்ளனர். அப்பொழுது மாணவி நடந்தது அனைத்தையும் கூறியுள்ளார்.
இதனை அடுத்து, காட்பாடி காவல் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், சங்கரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.
20 வருடங்களாக முன்னணி நடிகையாக உள்ளார் நடிகை தமன்னா. வாய்ப்பு இல்லாமல் வாய்ப்பை உருவாக்கி வருகிறார். காரணம் ஒரு படத்திற்கு…
நடிகர் ரகுவரன் தமிழ் சினிமாவின் சிறந்த வில்லன் என பெயர் பெற்றவர், எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் கச்சிதமாக செய்து முடிப்பவர்.…
உதவி கேட்டதால் படுக்கைக்கு நண்பர்களே அழைத்த அவலம் தமிழ் சினிமா நடிகைக்கு ஏற்பட்டுள்ளது. ஜெமினி படம் மூலம் தமிழ் சினிமாவில்…
நீலகிரி, ஊட்டியில் 15 வயது சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த சித்தப்பா, உறவுக்கார அண்ணன் ஆகியோரை போலீசார் கைது…
அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ஏஜிஎஸ் தயாரிப்பில் வெளியானது திரைப்படம் டிராகன். பிரதீப் ரங்கநாதன், காயடு லோகர், அனுபமா உட்பட பலர்…
தேமுதிகவுக்கு ராஜ்ய சபா சீட் குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை என கூட்டணியில் உள்ள அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி…
This website uses cookies.