Categories: தமிழகம்

“தமிழகத்தைப் பார்த்து சந்தி சிரிக்குது,அவமானமா இல்ல?!”-பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆவேசம்!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தற்போது நிலவரப்படி கள்ளச்சாராயம் குடித்து இறந்தவர்களின் எண்ணிக்கை 52 ஆக உயர்ந்துள்ளது. பல்வேறு அரசியல் கட்சியினரும் நேரில் வந்து ஆறுதல் கூறிய வண்ணம் உள்ளனர்.தற்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து நலம் விசாரித்து வருகிறார்.இதனிடையே செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர் கூறியதாவது,

இத்தனை உயிர் பலி நடந்தேறும் வரை அரசாங்கம் என்ன செய்து கொண்டிருந்தது? ஆட்சியா நடக்குது இங்க? திமுக அரசுக்கு உயிர் முக்கியம் இல்லையா கள்ளச்சாராயத்தால் வரும் பணம் தான் முக்கியமா? நடந்தேறிய நிகழ்வுக்கு சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகளை எடுத்திருக்க வேண்டும்.ஆனால் ஐஏஎஸ் அதிகாரியை தற்போது வரை சஸ்பெண்ட் செய்யவில்லை. கலெக்டர் மற்றும் காவல் துறையின் அலட்சியப் போக்கினால் தான் இப்படிப்பட்ட சம்பவம் நடந்துள்ளது.சிபிசிஐடி மட்டும் இந்த வழக்கில் விசாரிக்க போதுமானதாக இருக்காது ஏனென்றால் ஆளும் கட்சி தான் இதில் மிகப்பெரிய முக்கிய புள்ளி. எனவே சிபிஐ விசாரணை தான் இந்த சம்பவத்திற்கு தேவை. அரசாங்கம் அதனை உடனடியாக செய்ய வேண்டும் 1971 இல் மதுவை மறந்து இருந்த தமிழகம் மீண்டும் குடிகார மக்களாக மாறியதற்கு கலைஞர் தான் முதலில் காரணம். மது அருந்துவதால் ஒரு வருடத்தில் இரண்டு லட்சம் மரணங்கள் ஏற்படுகிறது அரசின் வருமான இலக்கை மது விற்பனையில் நிர்ணயிபது?கல்வி, விவசாயத்தில் இலக்கை நிர்ணயித்தால் நம் தமிழ்நாடு எங்கு போயிருக்கும். நாமக்கல்,கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டம் தான் தமிழகத்தில் பின்தங்கிய மாவட்டம் ஆனால் டாஸ்மார்க் கடைகள் மற்றும் மது விற்பனையில் இந்த மாவட்டங்கள் தான் முதலிடம்.

தமிழகத்தை பார்த்து சந்தி சிரிக்கிறது!. இந்த அவமானம் திமுக அரசுக்கு புரிகிறதா இல்லையா?.காவல் நிலையத்திற்கு அருகிலும் அரசு அலுவலகங்களுக்கு அருகிலும் தான் மது விற்பனை நடந்துள்ளது.ஆனால் முதல் தகவல் அறிக்கையில் சுடுகாடு பக்கத்தில் நடந்துள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது அதிர்ச்சி அளிக்கிறது. இதில் எங்கு நேர்மையான விசாரணை உள்ளது? இது சம்பந்தமான அமைச்சர்கள் உடனடியாக பதவி விலக வேண்டும்.எ.வ.வேலுவின் சொந்த ஊரான திருவண்ணாமலை தற்போது கஞ்சா வியாபாரத்தில் முதலிடமாக மாறி உள்ளது.தற்போது இருக்கும் திமுக நிர்வாகிகள் அனைவரும் நிர்வாகிகள் அல்ல வியாபாரிகள் என்று தான் சொல்ல வேண்டும்.ஸ்டாலினின் மதுவிலக்கு அறிவிப்பு என்ன ஆனது? அவர் சொல்லுக்கும் செயலுக்கும் சம்பந்தமே இல்லை. இது குறித்து நாங்கள் மிகப்பெரிய போராட்டத்தை நடத்த போகிறோம்.தமிழகத்தில் சமூக நீதி, வாழ்வாதார பிரச்சனைகள் தான் ஏராளம்.அதனை முதலில் சரி செய்ய வேண்டும்.மெத்தனாலின் பாதிப்பு ஒரு வாரத்திற்கு பிறகு கூட உயிர் இழப்பை ஏற்படுத்தும்.மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிறகு முதலில் ஆன்டிடோஸ் கொடுக்க வேண்டும். ஆனால் அது தமிழகத்தில் பற்றாக்குறையாக உள்ளது ஆகவே திமுக அரசை வன்மையாக கண்டிக்கிறேன் என்று ஆவேசமாக பேட்டி அளித்தார்.

Sangavi D

Recent Posts

விவேக் படத்தை பார்க்கவே மாட்டேன், பார்த்தால் அவ்வளவுதான்- மனம் நொந்த ராம்கி

மனதில் வாழும் கலைஞன் சின்ன கலைவாணர் என்று புகழப்படும் விவேக் இந்த உலகத்தை விட்டுச் சென்றிருந்தாலும் அவரது நினைவுகள் தமிழ்…

1 day ago

உண்மையிலே அதிமுகவை பாராட்டியே ஆகணும்… திருமாவளவன் திடீர் டுவிஸ்ட்!

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த விசிக லைவர் தொல் திருமாவளவன், அதிமுகவை வெகுவாக பாராட்டியுள்ளார். இதையும் படியுங்க: வக்பு மசோதாவுக்கு கனிமொழி,…

1 day ago

டிராகன் படத்துக்கு போனேன், கடுப்பேத்திட்டாங்க- ஆதங்கத்தை கொட்டிய நடிகர் ஸ்ரீகாந்த்…

மெகா வசூல் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் கடந்த பிப்ரவரி மாதம் வெளியான “டிராகன்” திரைப்படம் வேற…

1 day ago

உடலுறவு என்பது மகிழ்ச்சிக்காக.. குழந்தை பெற்றுக்கொள்ள அல்ல : பிரபல நடிகை அதிரடி கருத்து!

அவ்வப்போது பிரபலங்கள் ஏதாவது ஒரு கருத்தை செல்லி சர்ச்சையில் சிக்கிக்கொள்வது வழக்கம். அந்த வரிசையில் தற்போது சின்னத்திரை நடிகை சிக்கியுள்ளார்.…

1 day ago

வக்பு மசோதாவுக்கு கனிமொழி, திருச்சி சிவா மறைமுக ஆதரவு? தம்பிதுரை எம்பி பரபரப்பு குற்றச்சாட்டு!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே உள்ள தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அதிமுக மாநிலங்களவை எம்பி மு.தம்பிதுரை அவர்கள் பத்திரிகையாளர்களை சந்தித்து…

2 days ago

பழைய மதுரையை உண்மையில் உருவாக்கி வரும் சிவகார்த்திகேயன் படக்குழு? அடேங்கப்பா!

பராசக்தி ஹீரோ சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் “பராசக்தி” திரைப்படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. இத்திரைப்படத்தின்…

2 days ago

This website uses cookies.