போலீஸ் வசம் சிக்கிய பாமக பிரமுகர்.. கவுன்சிலர் மனைவி எஸ்கேப் : நில அபகரிப்பு வழக்கில் அதிரடி!
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி பாட்டாளி மக்கள் கட்சியின் நகரச் செயலாளராக பொறுப்பு வகித்து வருபவர் இளஞ்செல்வம் (48). இவரது மனைவி ஜோதி (45) நடந்து முடிந்த பேரூராட்சி கவுன்சிலர் தேர்தலில் 11 ஆவது வார்டில் பாமக கட்சியின் வேட்பாளராக மாம்பழம் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்.
இந்த நிலையில் கும்மிடிப்பூண்டி பாமக நகர செயலாளர் இளஞ்செல்வத்தின் வீட்டின் அருகே முருகன் என்பவருக்கு சொந்தமான சுமார் 1 கோடி ரூபாய் மதிப்பிலான 10 சென்ட் நிலத்தை, இளஞ்செல்வம் தனது மனைவி ஜோதி மற்றும் ஜோதியின் சிறிய தகப்பனார் இராக்கம் பாளையத்தை சேர்ந்த பிரதாபன் என்பவரின் உதவியுடன் அபகரிக்க திட்டமிட்டுள்ளார்.
அதன்படி பிரதாபனின் பெயரை ஆதார் கார்டில் முருகன் என தத்ருபமாக மாற்றி கும்மிடிப்பூண்டி பத்திரப்பதிவு அலுவலகத்தில் போலியாக தயார் செய்யப்பட்ட ஆவணங்களுடன் பத்திரப்பதிவு அலுவலரின் உதவியுடன் கடந்த ஜனவரி 19ஆம் தேதி பத்திரப்பதிவு செய்துள்ளனர்.
இதை அறிந்த நில உரிமையாளர் முருகனின் உறவினர் ஏழுமலை அப்போதைய திருவள்ளூர் மாவட்ட கண்காணிப்பாளர் ஷீபாஸ் கல்யாணிடம் புகார் தெரிவித்துள்ளார்.
அதனடிப்படையில் நான்காம் தேதி நடைபெற்ற கடைசி விசாரணையில் போலி ஆதார் அட்டை தயார் செய்து நிலத்தை மோசடி செய்தது உறுதியானது.
மேலும் படிக்க: கோழிக்கோட்டில் இறங்க வேண்டிய விமானங்கள்.. அசாதரண சூழல்…கோவையில் தரையிறங்கியது!
அதன் அடிப்படையில் கும்மிடிப்பூண்டி பாமக நகர செயலாளர் இளஞ்செல்வத்தை அதிரடியாக கைது செய்த திருவள்ளூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கும்மிடிப்பூண்டி நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர்.
மேலும் இதற்கு உடந்தையாக இருந்த இளஞ்செல்வத்தின் மனைவி ஜோதி மற்றும் ஆள் மாறட்டும் செய்த பிரதாபன் ஆகியோரை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.
கடந்த 21ஆம் தேதி பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் வெளியான டிராகன் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.…
கோவை மாவட்டம் சூலூர் அடுத்த நீலாம்பூர் பகுதியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் தமிழ் மாநில முஸ்லிம் லீக் அமைப்பின்…
ஈஷாவில் நடைபெறும் மஹாசிவராத்திரியை முன்னிட்டு தமிழ்நாடு, தெலுங்கானா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்து ஆதியோகி மற்றும் அறுபத்து மூவர் தேர்களுடன்…
திண்டுக்கல், செம்பட்டி சேடப்பட்டியை சேர்ந்த கூலித்தொழிலாளி சக்திவேல் இவரது மனைவி கவுசல்யா, 2001ல் இவர்களது பக்கத்து விட்டில் நகை திருடுபோனது,…
இயக்குநர் வினாயக் சந்திரசேகரன் 'குட் நைட்' படத்தின் மூலம் தனது சினிமா பயணத்தை வலுவாகத் தொடங்கினார். குட் நைட் திரைப்படம்…
கடலூரில் மாயமான இரண்டு இளைஞர்களை சக நண்பர்களே அடித்துக் கொன்று புதைத்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது. கடலூர்: கடலூர் மாவட்டம்,…
This website uses cookies.