Categories: தமிழகம்

எந்த வசதியும் இல்லாமல் தவிக்கும் மலை கிராமம்… இரவில் மக்களுடன் தங்கி ஆய்வு : இருளில் இருந்து மீட்க போராடும் பா.ம.க எம்எல்ஏ!

எந்த வசதியும் இல்லாமல் தவிக்கும் மலை கிராமம்… இரவில் மக்களுடன் தங்கி ஆய்வு : இருளில் இருந்து மீட்க போராடும் பா.ம.க எம்எல்ஏ!

தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அடுத்த, மிட்டாரெட்ஹள்ளி ஊராசிக்கு உட்பட்ட கோம்பேரி கிராமம் உள்ளது. இதன் அருகே, 2.5 கிலோ மீட்டர் தொலைவில் மலைப்பகுதிகளுக்கு நடுவே, பையன்குட்டை, கஜமான் குட்டை, ஒட்டன்கொள்ளை, மன்னன் கொள்ளை, வாழைமரத்து கொட்டாய் உள்ளிட்ட, 5 கிராமங்கள் உள்ளது. இங்கு, 100 குடும்பங்களில், 300- க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். மேலும், 400 ஏக்கர் பரப்பளவில் பட்டா நிலத்தில் விவசாயம் செய்து வருகின்றனர்.

ஆனால், அப்பகுதிக்கு இதுவரை சாலை, மின்விளக்கு, குடிநீர் உள்ளிட்ட அத்தியாவசிய வசதிகள் எதுவும் இல்லாம் இருளில் தவித்து வந்தனர். இந்நிலையில் நேற்று இரவு தர்மபுரி எம்.எல்.ஏ., எஸ்.பி.வெங்கடேஸ்வரன், அப்பகுதி பொதுமக்களின் குறைகளை கேட்டறிய சென்றார்.

அதில் முதற்கட்டமாக, எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதியின் மூலம், 15 லட்சம் மதிப்பில், 20 இடங்களில் அமைக்கபட்ட சோலார் மின்விளக்குகளை பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தார். அதன்பின், அங்குள்ள வீடுகளுக்கு சென்று, பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்தார்.

இதில் குடிநீர் வசதி இல்லாமல் தவிக்கிறோம், அதனை ஏற்பாடு செய்து கொடுங்கள் என அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து, இன்று காலை, கோம்பேரி பகுதியில் இருந்து, பொம்மிடி அருகே உள்ள காளிகரம்பு பகுதிக்கு வனப்பகுதி வழியாக சென்று ஆய்வு செய்தார்.

இது குறித்து, செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: கொம்பேரி மற்றும் காளிகரம்பு பகுதிக்கு, இடையிலுள்ள வனப்பகுதியில், 3 கிலோ மீட்டர் தொலைவிற்கு சாலை அமைத்தால், மணலூர், கொப்பகரை, பொம்மிடி மற்றும் அதனை சுற்றியுள்ள மக்கள், 12 கிலோ மீட்டர் பயணத்தில் தர்மபுரிக்கு வர முடியும். இதனால், 50 கிலோ மீட்டர் சுற்றி வரும் அவலநிலை இருக்காது.

மேலும், நல்லம்பள்ளி, மிட்டாரெட்டிஹள்ளி, நார்த்தம்பட்டி, பகுதி பொதுமக்கள், இந்த சாலை மூலம், பொம்மிடி ரயில் நிலையத்திற்கு எளிதில் சென்றடைந்து, அங்கிருந்து கோவை, சென்னை, உள்ளிட்ட பகுதிகளுக்கு பயணம் செய்யலாம்.

இது குறித்து, வனத்துறை அமைச்சரிடம் கோரிக்கை வைத்துள்ளேன். விரைவில் இப்பகுதிக்கு, சாலை அமைக்கப்படும் எனவே, இப்பகுதி மக்களுக்கு கூடுதலாக தேவைப்படும் உதவிகள் குறித்து, இரவு முழுவதும் இங்கேயே தங்கி, அவர்களின் வீடுகளுக்கு சென்று குறைகளை கேட்டறிந்தேன் என, கூறினார்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

இனி ஒரு வருஷத்துக்கு நடிக்க கூடாது- பிரபல சீரீயல் நடிகைக்கு ரெட் கார்டு? அதிர்ச்சியில் ரசிகர்கள்…

ரவீனா தாஹா 2009 ஆம் ஆண்டு சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மிகவும் பிரபலமான சீரீயலான “தங்கம்” தொடரில் குழந்தை நட்சத்திரமாக…

14 hours ago

பயங்கரவாதிகளை தேடி தேடி ஒழிக்க வேண்டும் : துணை முதலமைச்சர் பரபரப்பு பேச்சு..!!

ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் இறந்த நெல்லூர் மாவட்டம் காவலியை சேர்ந்த மதுசூதன் ராவ் சோமிசெட்டியின் உடலுக்கு துணை…

15 hours ago

கமல்ஹாசன் செய்த திடீர் புரட்சி! ஓடிடி விநியோகத்தையே தலைகீழாக புரட்டிப்போட்ட சம்பவம்?

புதுமைனா கமல்ஹாசன்தான்! சினிமாத்துறையை பொறுத்தவரை கமல்ஹாசன் பல நவீன தொழில்நுட்பங்களை அறிமுகம் செய்துள்ளார். இது பலருக்கும் தெரிந்த செய்திதான். ஆனால்…

15 hours ago

கட்டுனா மாமனை மட்டும் தான் கட்டுவேன் : ஒரே மேடையில் இரு பெண்களுடன் இளைஞர் திருமணம்..(வீடியோ)!

தெலங்கானா மாநிலம் குமுரம்பீம் ஆசிபாபாத் மாவட்டம் ஜெய்னூர் மண்டலம், அடேசரா பழங்குடியினர் கிராமத்தைச் சேர்ந்த ரம்பாபாய் - பத்ருஷாவ் தம்பதியினரின்…

16 hours ago

அய்யோ; இது சுத்த பொய்- பதறிப்போய் ஓடி வந்த அஜித்தின் மேனேஜர்? அப்படி என்ன நடந்திருக்கும்?

அடுத்த படத்துக்கு யார் இயக்குனர்? அஜித்குமார் நடிப்பில் வெளியான “குட் பேட் அக்லி” திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை…

16 hours ago

திருமாவுடன் கைக்கோர்க்கும் ராமதாஸ்.. 14 ஆண்டுகளுக்கு பின் மனமாற்றம் : ஸ்டாலின் போட்ட ஸ்கெட்ச்!

தமிழகத்துக்கு அடுத்த வருடம் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் அரசியல் கட்சிகளிடையே கூட்டணி, தேர்தல் வியூகம் என அடுத்தடுத்து…

16 hours ago

This website uses cookies.