Categories: தமிழகம்

கடவுள் எனக்கு ஒரு வரம் கொடுத்தால்… ஒரு சொட்டு மது கூட இருக்கக் கூடாது எனக் கேட்பேன் ; பிரச்சாரத்தில் ராமதாஸ் பேச்சு!!

அதிக குடிசை வீடுகள் உள்ள மாவட்டம் விழுப்புரம் மாவட்டம் என்றும், குடிசை இல்லாத வீடாக மாற்ற வேண்டும் என்று பாமக நிறுவனத் தலைவர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

விழுப்புரம் மக்களவை தேர்தலுக்கான பரப்புரையை கோவடி கிராமத்தில் பாமக நிறுவனத் தலைவர் ராமதாஸ் வேட்பாளர் முரளி சங்கர் அவர்களை ஆதரித்து பரப்புரை மேற்கொண்டார். பிரச்சாரத்தில் அவர் பேசியதாவது :- தேசிய ஜனநாயகக் கூட்டணியில் 10 தொகுதி பெற்றுள்ள பாட்டாளி மக்கள் கட்சி, பிரச்சாரத்தை முதன் முதலாக கிராமத்திலிருந்து தான் தொடங்க வேண்டும் என்பது என்னுடைய ஆசை, அதன் காரணமாகத்தான் தாய் கிராமமான கோவடி கிராமத்தில் தொடங்குகிறேன். என்னுடைய முதலாவது பரப்புரையை எளிமையான முறையில் தற்போது தொடங்கி இருக்கிறேன்.

நேரு மூன்று முறை பிரதமராக இருந்தார். அவருடைய மகள் இந்திரா காந்தி மூன்று முறை பிரதமராக இருந்தார். இப்பொழுது, நம்முடைய பிரதமர் நரேந்திர மோடி இரண்டு முறை பிரதமராக இருந்தார். மூன்றாவது முறையாக பிரதமராக போகிறார். தேசிய ஜனநாயக கூட்டணி இந்திய அளவில் 400 இடங்களிலும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வெற்றி பெறுவோம். அதில் பாட்டாளி மக்கள் கட்சியின் 10 வேட்பாளர்கள் வெற்றி பெறுவார்கள் மற்றும் கூட்டணி சேர்ந்த அனைவரும் வெற்றி பெறுவார்கள்.

உங்களின் வறுமையை ஒழிக்க வேண்டும். மூன்று வேளை உணவு கிடைக்க வேண்டும். அதிக குடிசை வீடுகள் உள்ள மாவட்டம் விழுப்புரம் மாவட்டம். குடிசை இல்லாத வீடாக மாற்ற வேண்டும். படித்தவர்களுக்கு வேலை உறுதி செய்யப்பட வேண்டும்.
அதேபோல் பெண்களுக்கு பாதுகாப்பு, பெண்கள் எல்லாம் கண்கள். தாயில்லாமல் நானில்லை. தனியாக ஒரு பெண் நகைகளை அணிந்து கொண்டு சுதந்திரமாக நடந்து செல்லும் போது தான் நாடு சுதந்திரம் அடைகிறது. ஆனால், தற்போது நடந்து சென்றால் காதோடு இருப்பதை அறுத்து சென்று விடுவார்கள். குடிப்பதற்கு தான் இதை செய்கிறார்கள்.

ஒரு சொட்டு சாராயம் இல்லாத நாடு வேண்டும். இந்த கூட்டணியின் கொள்கை பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும். கல்வியில் பின் தங்கிய மாவட்ட விழுப்புரம் மாவட்டம், இதனை மாற்ற வேட்பாளர் முரளி சங்கருக்கு வாக்களியுங்கள். பல்வேறு கட்சிகளில் பரப்புரை ஆடம்பர மேடை அமைத்து பெரிய பொருள் செலவில் கோடிகணக்கில் செலவு செய்வார்கள். ஆனால் நான் தரையில் நாற்காலி போடு நான் வந்து வாக்கு கேட்கிறேன்.

வெற்றி, தோல்வியை தீர்மானிப்பது பெண்கள். முக்கனிகளில் முதல் கனி மாம்பழம். அதற்கு வாக்களியுங்கள். மும்மூர்த்தி கடவுள்கள் சிவன், விஷ்ணு, பிரம்மர் என்னிடம் வரம் வந்து கேட்டால் ஒரு சொட்டு மது சாராயம் கூட இந்த நாட்டில் இருக்கக் கூடாது என வரம் கேட்பேன். ஒரு சொட்டு நீர் கூட கடலில் கலக்கக்கூடாது எனவும் கடவுளிடம் வரம் கேட்பேன். இலவச கல்வி அதுதான் நமது கொள்கை, என பேசினார்.

இதில் பாட்டாளி மக்கள் கட்சியின் கௌரவத் தலைவர் ஜிகே மணி தலைமை நிலைய செயலாளர் அன்பழகன் உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Babu Lakshmanan

Babu Lakshmanan, is Sub Editor at Updatenews360.com. With a keen eye for detail and a commitment to journalistic integrity, Babu serves as the Sub Editor at Updatenews360.com. Bringing years of experience in the media industry, he specializes in refining news stories to ensure clarity, accuracy, and engagement. Babu's passion for unearthing the truth and presenting it in an accessible manner drives his daily editorial decisions. His background in journalism, coupled with a deep interest in social issues and technological advancements, contributes to his unique editorial perspective. Off the clock, Babu is an avid reader and a cultural enthusiast, constantly exploring new horizons that enrich his professional and personal life. His dedication to impactful journalism makes him a vital part of the Updatenews360 team, where he continues to uphold the standards of reliable and responsible news reporting.

Recent Posts

விஜய் நடத்திய ரோடு ஷோ… கேரவன் மீது ஏறிய தொண்டர்கள் : ஸ்தம்பித்த கோவை விமான நிலையம்!

கோவை விமான நிலையத்துக்கு வந்த தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்க்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதையும் படியுங்க:…

5 minutes ago

அங்க Focus பண்ணுங்க: மைதானத்தில் திடீரென தோன்றிய அஜித்-சிவகார்த்திகேயன்; நம்பவே முடியலையே!

சோகத்தில் சென்னை ரசிகர்கள் நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியும் ஹைதராபாத் அணியும் மோதின. 43…

38 minutes ago

கொஞ்சம் கூட யோசிக்கல.. மனைவியை கிணற்றில் தள்ளிய கணவன்… எதிர்பாரா டுவிஸ்ட்!

திருச்சி மாவட்டம், முசிறி தாலுகா, தா.பேட்டை அடுத்த வாளசிராமணி கிராமத்தை சேர்ந்தவர் சக்திவேல் (43) டிப்ளமோ டெக்ஸ்டைல் இன்ஜினியரிங் படித்துவிட்டு…

2 hours ago

இனி ஒரு வருஷத்துக்கு நடிக்க கூடாது- பிரபல சீரீயல் நடிகைக்கு ரெட் கார்டு? அதிர்ச்சியில் ரசிகர்கள்…

ரவீனா தாஹா 2009 ஆம் ஆண்டு சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மிகவும் பிரபலமான சீரீயலான “தங்கம்” தொடரில் குழந்தை நட்சத்திரமாக…

17 hours ago

பயங்கரவாதிகளை தேடி தேடி ஒழிக்க வேண்டும் : துணை முதலமைச்சர் பரபரப்பு பேச்சு..!!

ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் இறந்த நெல்லூர் மாவட்டம் காவலியை சேர்ந்த மதுசூதன் ராவ் சோமிசெட்டியின் உடலுக்கு துணை…

18 hours ago

கமல்ஹாசன் செய்த திடீர் புரட்சி! ஓடிடி விநியோகத்தையே தலைகீழாக புரட்டிப்போட்ட சம்பவம்?

புதுமைனா கமல்ஹாசன்தான்! சினிமாத்துறையை பொறுத்தவரை கமல்ஹாசன் பல நவீன தொழில்நுட்பங்களை அறிமுகம் செய்துள்ளார். இது பலருக்கும் தெரிந்த செய்திதான். ஆனால்…

18 hours ago

This website uses cookies.