Categories: தமிழகம்

பெரியப்பாவின் சொத்துக்களை ஆட்டையை போட மதுவில் விஷம்.. பங்காளி மகனால் பறி போன உயிர்.. முடிவுக்கு வந்த நாடகம்!

காஞ்சிபுரம் அடுத்த நீர்வள்ளூர் பகுதியை சேர்ந்தவர் கோவிந்தன். வயது 72. இவருக்கு மூன்று மகள்கள் ஒரு மகன் உள்ளனர். தனது மகன் கிருஷ்ணனுடன் வசித்து வருகிறார். கிருஷ்ணன் கட்டுமான பணி செய்து வருகிறார்.

கிருஷ்ணனுக்கும்,அவரது மனைவிக்குமிடையே கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து சென்று விட்டார் என கூறப்படுகிறது . இதனால் கோவிந்தனும் மகன் கிருஷ்ணனும் நீர்வல்லூர் கிராமத்தில் உள்ள வீட்டில் வசித்து வருகின்றனர்.

நேற்று கிருஷ்ணன் வெளியில் சென்றிருந்த நிலையில் 100 நாள் வேலை திட்டத்தில் பணி செய்துவிட்டு முதியவர் கோவிந்தன் மாலை வீடு திரும்பி உறங்கியுள்ளார்.

இந்த நிலையில் வெளியில் சென்று விட்டு வீடு திரும்பிய கிருஷ்ணன் வீட்டின் கதவினை திறந்து பார்த்தபோது தந்தை எந்தவித அசைவுமின்றி இறந்த நிலையில் இருந்துள்ளார்.

இதனையெடுத்து கிருஷ்ணன் கதறி அழுது கோவிந்தனின் இறப்பு இயற்கை இறப்பாக இருக்கக்கூடும் என எண்ணி இறுதி சடங்கிற்கான ஏற்பாடுகளை செய்து வந்துள்ளார்.

இதனையெடுத்து செலவிற்க்காக பீரோவிலிருக்கும் பணத்தை எடுக்க முற்பட்ட போது பூட்டு உடைக்கப்பட்டு பீரோ திறந்த நிலையில் அதிலிருந்த 15 சவரன் தங்க நகை மற்றும் 5 லட்ச ரூபாய் பணம் கொள்ளையடிக்கப்பட்டிருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தார்.

இதையடுத்து இச்சம்பவம் குறித்து தாலுகா காவல்நிலையத்திற்கு தகவல் கொடுத்தார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் இது குறித்து சோதனை நடத்தி,தடவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு கைரேகை தடயங்கள் சேகரிக்கப்பட்டு தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

இதனையெடுத்து சம்பவ இடத்தில் காஞ்சிபுரம் மாவட்ட கூடுதல் கண்காணிப்பாளர் வினோத் சாந்தாராம் ஆய்வு மேற்கொண்டார்.

இதனையெடுத்து காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுதாகர் உத்தரவின் பெயரில் மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டு குற்றவாளியை விரைந்து பிடிக்க உத்தரவிட்டப்பட்டது.

இந்த நிலையில் கிருஷ்ணன் வீட்டின் அருகாமையிலிருந்த சிசிடிவி காட்சியினை சோதனை செய்த போது அதில் முதியவர் கோவிந்தன் பின்புறம் அவரது தம்பி வெங்கடேசனின் மகனான பாட்ஷா என்கிற பாஸ்கர் சென்றது கண்டறியபட்டது.

இதனையெடுத்து சந்தேகமடைந்த காவல்துறையினர் தாமல் பகுதியில் உள்ள பாட்ஷா வீட்டிற்கு சென்று அவரிடம் கிடுக்குபிடி விசாரணை மேற்கொண்டதில் தனது பெரியப்பாவிற்கு மதுபானத்தில் கொக்கு மருந்து கலக்கி கொடுத்து கொலை செய்ததையும், அவரிடம் இருந்த சாவியை எடுத்து சென்று அறையை திறந்து பீரோவில் இருந்த பணத்தை கொள்ளை அடித்ததையும் ஒப்புக்கொண்டார்.

அதனை அடுத்து உறவினர் வீட்டில் மறைத்து வைத்திருந்த இருந்த தங்க நகைகளையும், பணத்தையும் கைப்பற்றி , பாட்ஷா என்ற பாஸ்கரிடம் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

விசாரணையின் முடிவில் பாட்ஷாவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி ஜெயிலுக்கு அனுப்பப் போவதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

60 வயது நடிகருடன் நடித்தேன்..சினிமா வாழ்க்கையை போச்சு..புலம்பும் சர்ச்சை நடிகை.!

60 வயது நடிகருடன் நான் இருந்தனா-கஸ்தூரி அதிர்ச்சி தகவல் தமிழ்,தெலுங்கு,மலையாள என பல திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம்…

6 hours ago

கேமியோ ரோலில் பிரபல தெலுங்கு நடிகர்..”ஜெயிலர் 2″ சம்பவம் லோடிங்.!

நந்தமூரி பாலகிருஷ்ணாவின் அதிரடி என்ட்ரி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாக உள்ள ஜெயிலர் 2 திரைப்படத்தில் பிரபல தெலுங்கு…

7 hours ago

“WHAT BRO”நான் குல்லா போடுற ஆள் இல்லை..மேடையில் விஜயை தாக்கிய பிரபலம்.!

வாட் ப்ரோ..? கூல் சுரேஷின் சர்ச்சைக்குரிய உரை தமிழில் சில படங்களில் நடித்திருப்பவர் கூல் சுரேஷ்,இவர் நடித்து ஃபேமஸ் ஆனதைவிட…

7 hours ago

மருமகள், பேத்தியையும் விட்டுவைக்கவில்லை.. மாமியாருடன் சேர்ந்து செய்த பகீர் காரியம்!

கடலூரில், மருமகள் மற்றும் பேத்திகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக மாமனாரை மாமியாருடன் சேர்ந்து தீயிட்டது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு…

8 hours ago

சர்ப்ரைஸ்.! ‘குட் பேட் அக்லி’ பட ரிலீஸில் ட்விஸ்ட்…தமிழில் இதுவே முதல்முறை.!

தமிழ் சினிமாவில் புதிய முயற்சி அஜித் நடிப்பில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்திய "குட் பேட் அக்லி" படம் வருகிற ஏப்ரல்…

9 hours ago

எங்களுக்கு எந்த நிலத்தகராறும் இல்லை.. பரபரப்புக்கு முற்றுப்புள்ளி வைத்த செளந்தர்யா கணவர்!

சொத்து குறித்து மோகன் பாபு மற்றும் சௌந்தர்யா தொடர்பாக ஒரு தவறான செய்தி பரவி வருகிறது என நடிகையின் கணவர்…

9 hours ago

This website uses cookies.