பல்லடம் காவல் நிலையத்தில் தமிழ்நாடு காவல்துறை இயக்குனர் சைலேந்திரபாபு ஐபிஎஸ் திடீர் விசிட்!!
திருப்பூர் மாவட்டம் பல்லடம் கோவை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பல்லடம் காவல் நிலையம் உள்ளது. இந்த நிலையில் நேற்று இரவு சுமார் ஒன்பதே கால் மணி அளவில் பல்லடம் காவல் நிலையத்திற்கு தமிழ்நாடு காவல்துறை இயக்குனர் சைலேந்திரபாபு ஐபிஎஸ் திடீரென வருகை தந்தார்.
முன்னதாக சென்னையில் இருந்து கோவை சென்ற அவர் கடந்த சில நாட்களுக்கு முன் கோவையில் நிகழ்ந்த கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக ஆய்வு செய்த அவர் கோவையிலிருந்து போலீஸ் வாகனம் மூலமாக மதுரை செல்லும் வழியில் பல்லடம் காவல் நிலையத்திற்கு திடீர் வருகை தந்த தமிழ்நாடு காவல்துறை இயக்குனர் சைலேந்திரபாபு ஐபிஎஸ் அவர்களை பல்லடம் துணை போலீஸ் சூப்பிரண்டு சௌமியா, பல்லடம் காவல் நிலைய ஆய்வாளர் மணிகண்டன், உதவியாளர் மற்றும் போலீசார் வரவேற்றனர்.
அதனைத் தொடர்ந்து டிஜிபி சைலேந்திரபாபு உடன் போலீசார் அனைவரும் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். அதனைத் தொடர்ந்து அவர் போலீஸ் வாகனத்தில் மதுரைக்கு புறப்பட்டு சென்றார்.
பல்லடம் காவல் நிலையத்தில் தமிழக காவல்துறை இயக்குனர் சைலேந்திரபாபு ஐபிஎஸ் திடீர் வருகையால் பல்லடம் போலீசார் இன்ப அதிர்ச்சியில் ஆழ்ந்தனர்.
5 கோடி இழப்பீடு ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமாரின் நடிப்பில் கடந்த வாரம் வெளிவந்த “குட் பேட் அக்லி” திரைப்படம்…
பாரதிய ஜனதா கட்சியின் சிறுபான்மை அணி தேசிய செயலாளர் வேலூர் இப்ராகிம் திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் நடைபெறும் வக்பு திருத்தச்…
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் காந்தி கலையரங்கத்தில் சட்ட மாமேதை அம்பேத்கரின் பிறந்த நாள் விழா, வக்ஃபு வாரிய சட்ட திருத்தம்…
வைகைப்புயல் மீது பிராது வைகைப்புயல் என்று அழைக்கப்படும் காமெடி நடிகர் வடிவேலு கோலிவுட்டின் டாப் காமெடி நடிகராக வலம் வந்த…
கரூர், பஞ்சமாதேவி பகுதியில் பொன்னுச்சாமி என்பவர் புதியதாக கட்டி வரும் வீட்டிற்கு சுற்றுச்சுவர் கட்டுவதற்காக சிவாஜி, ராஜேந்திரன், மாயவன் ஆகிய…
This website uses cookies.