பல்லடம் காவல் நிலையத்தில் தமிழ்நாடு காவல்துறை இயக்குனர் சைலேந்திரபாபு ஐபிஎஸ் திடீர் விசிட்!!
திருப்பூர் மாவட்டம் பல்லடம் கோவை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பல்லடம் காவல் நிலையம் உள்ளது. இந்த நிலையில் நேற்று இரவு சுமார் ஒன்பதே கால் மணி அளவில் பல்லடம் காவல் நிலையத்திற்கு தமிழ்நாடு காவல்துறை இயக்குனர் சைலேந்திரபாபு ஐபிஎஸ் திடீரென வருகை தந்தார்.
முன்னதாக சென்னையில் இருந்து கோவை சென்ற அவர் கடந்த சில நாட்களுக்கு முன் கோவையில் நிகழ்ந்த கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக ஆய்வு செய்த அவர் கோவையிலிருந்து போலீஸ் வாகனம் மூலமாக மதுரை செல்லும் வழியில் பல்லடம் காவல் நிலையத்திற்கு திடீர் வருகை தந்த தமிழ்நாடு காவல்துறை இயக்குனர் சைலேந்திரபாபு ஐபிஎஸ் அவர்களை பல்லடம் துணை போலீஸ் சூப்பிரண்டு சௌமியா, பல்லடம் காவல் நிலைய ஆய்வாளர் மணிகண்டன், உதவியாளர் மற்றும் போலீசார் வரவேற்றனர்.
அதனைத் தொடர்ந்து டிஜிபி சைலேந்திரபாபு உடன் போலீசார் அனைவரும் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். அதனைத் தொடர்ந்து அவர் போலீஸ் வாகனத்தில் மதுரைக்கு புறப்பட்டு சென்றார்.
பல்லடம் காவல் நிலையத்தில் தமிழக காவல்துறை இயக்குனர் சைலேந்திரபாபு ஐபிஎஸ் திடீர் வருகையால் பல்லடம் போலீசார் இன்ப அதிர்ச்சியில் ஆழ்ந்தனர்.
பெண் உடையுடன் குடியிருப்பில் பிக்பாஸ் விக்ரமன் ஓடிய வீடியோ வைரலான நிலையில், இதுகுறித்து அவரது மனைவி விளக்கம் அளித்துள்ளார். சென்னை:…
ஏழை எளிய மாணவர்களின் கல்வியில் அரசியல் செய்வது யார் என்று தமிழக மக்களுக்கு நன்கு தெரியும் என அண்ணாமலை முதல்வர்…
தூத்துக்குடி, ஸ்ரீவைகுண்டம் அருகே பேருந்தில் சென்று கொண்டிருந்த பள்ளி மாணவரை அரிவாளால் வெட்டிய கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். தூத்துக்குடி:…
சல்மான் கான் - ராஷ்மிகா நடிப்பில் உருவாகியுள்ள சிக்கந்தர் படம் சர்கார் படத்தின் ரீமேக் அல்ல என இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ்…
ராணிப்பேட்டையில் பாஜக நிர்வாகி, தனது வயல்வெளியில் மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.…
கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த போக்சோ வழக்கு கைது மயங்கி விழுந்த நிலையில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.…
This website uses cookies.