மதுரை: மேலூர் அருகே திருவாசகம் அருளிய மாணிக்கவாசகர் அவதரித்த திருக்கோவிலில் உண்டியல் உடைக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மதுரை மாவட்டம் மேலூர் அருகே திருவாதவூரில் திருவாசகம் அருளிய மாணிக்கவாசகர் பிறந்த இடத்தில் அமைக்கப்பட்டுள்ள திருக்கோயிலில் நேற்று இரவு சுற்றுச்சுவர் வழியாக உள்ளே நுழைந்த மர்மநபர்கள் அங்கே இருந்த உண்டியல் மற்றும் பீரோ ஆகியவற்றை உடைத்து கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த கொள்ளை சம்பவத்தில் உண்டியலில் இருந்த ரூபாய் 10 ஆயிரம் வரையிலான பணம், மற்றும் பீரோவில் இருந்த திருக்கோவில் புத்தகம் உள்ளிட்ட பொருட்கள் திருடப்பட்டிருப்பதாக திருக்கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்திருக்கும் நிலையில், இதுதொடர்பாக மேலூர் காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் தடவியல்துறையினர் கொள்ளை தொடர்பாக தடங்களை சேகரித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதுதொடர்பாக திருக்கோயில் நிர்வாக டிரஸ்டி முருகன் அளித்த புகாரின் பேரில் சம்பவ இடத்தில் தடயங்களை சேகரித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சீமான் மீது அளித்த புகாரின் மீது இனி எந்தப் போராட்டம் நடத்தப்போவதில்லை என நடிகை விஜயலட்சுமி தான் வெளியிட்ட வீடியோ…
நடிகை மீனாட்சி செளத்ரியை மாநில பெண்கள் அதிகாரமளித்தல் பிராண்ட் அம்பாசிடராக ஆந்திர அரசு நியமித்ததாக வரும் தகவலில் உண்மையில்லை என…
கொரோனா பேரிடரின்போது உயிரிழந்த மருத்துவரின் மனைவிக்கு வேலை மற்றும் நிவாரணம் வழங்க வேண்டும் என அரசு மருத்துவர்களுக்கான சட்டப் போராட்டக்…
விஜய் அரசியல் கட்சி துவங்கியதும் பலரும் பலவிதமாக விமர்சித்து வரும் நிலையில், இயக்குநர் பேரரசு கூறியுள்ளது யோசிக்க வைத்ததுள்ளது. இயக்குநர்…
விடாமுயற்சி தோல்விக்க பிறகு அஜித் நடித்துள்ள குட் பேட் அக்லி. திரிஷா, அர்ஜூன் தாஸ் பிரசன்னா உட்பட பலர் நடிக்கும்…
This website uses cookies.