கமுதி அருகே இளம்பெண்ணை காதலித்து, திருமணம் செய்ய மறுத்த தனி ஆயுதப்படை காவலர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அடுத்துள்ள வலையபூக்குளம் கிராமத்தை சேர்ந்தவர் தமிழ்ச்செல்வன் மகன் இளையராஜா. இவர் கமுதி தனி ஆயுதப்படை பிரிவில் காவலராக பணியாயற்றி வருகிறார். இவரும், அதே ஊரைச் சேர்ந்த வெட்டுப்பெருமாள் மகள் ரத்தினா தேவியும் (25)கடந்த ஒரு ஆண்டு காலமாக காதலித்து வந்துள்ளனர். திருமண ஆசைக் கூறி ரத்தினா தேவியுடன் இளையராஜா பலமுறை உல்லாசமாக இருந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு இளையராஜாவிடம் ரத்தினாதேவி பலமுறை வற்புறுத்தியுள்ளார். ஆனால் இளையராஜா திருமணம் செய்து கொள்ள முடியாது, என மறுத்து கொலை மிரட்டல் கொடுத்ததாக ரத்தினாதேவி கமுதி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் கமுதி போலீசார் தனி ஆயுதப்படை காவலர் இளையராஜா மீது வழக்கு பதிந்து, கைது செய்தார்.
இந்த நிலையில், காவலர் இளையராஜாவை மாவட்ட காவல்துறைப்பாளர் தங்கதுரை அவர்கள் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார்.
திருச்சி மாவட்டம், முசிறி தாலுகா, தா.பேட்டை அடுத்த வாளசிராமணி கிராமத்தை சேர்ந்தவர் சக்திவேல் (43) டிப்ளமோ டெக்ஸ்டைல் இன்ஜினியரிங் படித்துவிட்டு…
ரவீனா தாஹா 2009 ஆம் ஆண்டு சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மிகவும் பிரபலமான சீரீயலான “தங்கம்” தொடரில் குழந்தை நட்சத்திரமாக…
ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் இறந்த நெல்லூர் மாவட்டம் காவலியை சேர்ந்த மதுசூதன் ராவ் சோமிசெட்டியின் உடலுக்கு துணை…
புதுமைனா கமல்ஹாசன்தான்! சினிமாத்துறையை பொறுத்தவரை கமல்ஹாசன் பல நவீன தொழில்நுட்பங்களை அறிமுகம் செய்துள்ளார். இது பலருக்கும் தெரிந்த செய்திதான். ஆனால்…
தெலங்கானா மாநிலம் குமுரம்பீம் ஆசிபாபாத் மாவட்டம் ஜெய்னூர் மண்டலம், அடேசரா பழங்குடியினர் கிராமத்தைச் சேர்ந்த ரம்பாபாய் - பத்ருஷாவ் தம்பதியினரின்…
அடுத்த படத்துக்கு யார் இயக்குனர்? அஜித்குமார் நடிப்பில் வெளியான “குட் பேட் அக்லி” திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை…
This website uses cookies.