Categories: தமிழகம்

வேலை வெட்டிக்கு போகாததால் தகராறு : மனைவியை கொலை செய்து தலைமறைவான கணவனை கைது செய்த போலீசார்!!

கோவை : வேலைக்கு செல்லாமல் பொழுதை கழித்ததால் ஏற்பட்ட தகராறில் மனைவியை சரமாரியாக வெட்டிக் கொலை செய்த கணவரை போலீசார் கைது செய்தனர்.

கோவை சிங்காநல்லூர் வரதராஜபுரம் நேரு பூங்கா வீதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர் கணேசன் (வயது 55). இவர் சிங்காநல்லூர் திருச்சி சாலை சந்திப்பில் உள்ள ஒரு பேக்கரில் டீ மாஸ்டராக வேலை செய்து வந்தார்.

இவருடைய மனைவி பொன்னுத்தாய் (வயது 46). இவர்களுக்கு மதன்குமார் (வயது 24), அருண்குமார் (வயது 18) ஆகிய 2 மகன்கள் உள்ளனர். மதன்குமார் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இளைய மகன் அருண்குமார் சின்னவேடம்பட்டியில் உள்ள ஒரு கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.

இந்த நிலையில் கணேசனுக்கும் அவருடைய மனைவி பொன்னுத்தாயிக்கும் இடையே குடும்ப தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கணேசன் கடந்த 2 வாரமாக சரிவர வேலைக்கு செல்லவில்லை என்று கூறப்படுகிறது. நேற்றும் வழக்கம்போல் கணேசன் வேலைக்கு செல்லவில்லை. இதனால் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது.

இதில் ஆத்திரம் அடைந்த கணேசன் வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து பொன்னுத்தாயை சரமாரியாக வெட்டினார். இதில் படுகாயம் அடைந்த பொன்னுத்தாய் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார்.

பின்னர் கணேசன் அங்கு இருந்து தப்பி சென்றார். இதற்கிடையே வெளியே சென்று விட்டு வீடுதிரும்பிய மகன் மதன்குமார்,அங்கு தாய் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்து கதறினார்.

அப்போது அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் அங்கு வந்தனர். இதுகுறித்து சிங்காநல்லூர் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி தலைமறைவாக இருந்த கணேசனை கைது செய்தனர். அவரிடம் இருந்து கொலைக்கு பயன்படுத்திய அரிவாளையும் கைப்பற்றினர். குடும்ப தகராறில் மனைவியை கணவர் வெட்டி கொலை செய்யப்பட்ட பயங்கர சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

நீங்க வேற மாதிரி சார்…நாட்டின் உயரிய விருதை பெற்றுக்கொண்டார் அஜித்!

நினைத்ததை முடிப்பவர் அஜித்குமார் தமிழ் சினிமாவில் ஒரு டாப் நடிகராக வலம் வந்தாலும் அவருக்கு பைக் ஓட்டுவதிலும் கார் பந்தயங்களிலும்…

14 hours ago

பிளாக்கில் டிக்கெட் விற்பவர்களுக்கு முதல்வர் கனவு.. விஜய்யை மறைமுமாக சாடிய அமைச்சர்!

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் இந்தி திணிப்பு , நிதி பகிர்வில் பாரபட்சம் , தொகுதி மறுசீரமைப்பில் அநீதி போன்றவற்றை…

14 hours ago

கஞ்சா வைத்திருந்த பிரபல சினிமா இயக்குநர்கள்..வளைத்து வைளத்து கைது செய்யும் போலீசார்!

போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் எக்ஸைஸ் அதிகாரிகள் கொச்சியில் கோஷ்ரீ பாலம் அருகே நடத்திய சோதனையில் மலையாள சினிமா…

16 hours ago

வெற்றிமாறன் மேல் உள்ள பயத்தால் சூர்யா எடுத்த திடீர் முடிவு? அப்போ வாடிவாசலோட நிலைமை?

இவ்வளவு இழுபறியா? கடந்த 2022 ஆம் ஆண்டு முதலே வெற்றிமாறனின் “வாடிவாசல்” திரைப்படத்தை குறித்தான பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன. மூன்று…

16 hours ago

அடுத்தவ புருஷனை பங்கு போட்டது தப்புதான்.. ஆனா பாலு மகேந்திரா எனக்கு எல்லாமே கொடுத்தாரு ; நடிகை ஓபன்!

நடிகை மௌனிகா, சில படங்களில் நடித்த அவர் தற்போது சீரியல்களில் நடித்து வருகிறார். அவர் மறைந்த இயக்குநர் பாலுமகேந்திராவின் இரண்டாவது…

17 hours ago

ஜெயிலரை ஓவர் டேக் செய்யப்போகும் குட்  பேட் அக்லி! விரைவில் ஒரு தரமான சம்பவம்?

தாறுமாறு கலெக்சன் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமாரின் நடிப்பில் ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியான “குட் பேட் அக்லி”…

17 hours ago

This website uses cookies.