வேலூர் – காட்பாடி விருதம்பட்டு பகுதியில் நூதன முறையில் வேனில் மணல் கடத்தி வந்த இருவரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
வேலூர் மாவட்டம் காட்பாடி பகுதியில் நூதன முறையில் மணல் கடத்தி வருவதாக வேலூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணனுக்கு தகவல் கிடைத்துள்ளது.
ரகசிய தகவலின் அடிப்படையில் விருதம்பட்டு காவல்நிலைய உதவி ஆய்வாளர் ஆதர்ஷ், ராமமூர்த்தி மற்றும் போலீசார் காட்பாடி அடுத்த விருதம்பட்டு விஷ்ணு தியேட்டர் அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகம் அளிக்கும் வகையில் வந்த டாட்டா ஏஸ் வேனை நிறுத்தி போலீசார் சோதனை மேற்கொண்டனர். அதில், மேலோட்டமாக எம்சாண்ட் மண் தூவி அதற்கு அடியில் ஒரு யூனிட் பாலாற்று மணல் கடத்தி வந்தது தெரியவந்தது.
இதையடுத்து மணல் கடத்தலில் ஈடுபட்ட தோட்டப்பாளையம் பகுதியை சேர்ந்த ஜெயக்குமார், கலைவாணன் ஆகிய இருவரையும் கைது செய்து ஒரு யூனிட் மணல் உடன் டாட்டா ஏஸ் வாகனத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர். முதற்கட்ட விசாரணையில் சேண்பாக்கம் பாலாறு படுகையில் இருந்து இவர்கள் மணல் கடத்தலில் ஈடுபட்டது தெரியவந்தது. இச்சம்பவம் குறித்து விருதம்பட்டு போலீசார் வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை மேற்கொண்டனர்.
ஜெயிலர் 2 பட பெயரை சொல்லி மோசடி நடிகை ஷைனி சாரா,ரஜினிகாந்தின் மனைவி வேடத்தில் நடிக்க வாய்ப்பு என்று கூறி…
She can eat Rashmika for breakfast, Mrunal for Lunch.. #KayaduLohar - what a find! 💎💠…
மணிகண்டனுக்கு அடித்த ஜாக்பாட் வடசென்னை படத்தின் இரண்டாம் பாகத்திலிருந்து இயக்குனர் வெற்றிமாறன் மற்றும் நடிகர் தனுஷ் விலகியுள்ளதாக தகவல் கசிந்துள்ளது.…
புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் ப சிதம்பரம் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள வந்த போது செய்தியாளரிடம் பேசுகையில்,…
இந்த காலத்தில் சினிமாவில் மட்டுமல்ல எந்த துறையிலும் பெண்கள் கோலோச்ச அட்ஜெஸ்ட்மெண்ட் பெரிய தடையாகவே உள்ளது. இது குறித்து ஏராளமான…
தவெக அடுத்தகட்ட மாவட்டச் செயலாளர்கள் இன்று நியமனம் செய்யப்படுவதாக கூறப்படும் நிலையில், அதில் சில சிக்கல்கள் எழுந்துள்ளதாகத் தெரிகிறது. சென்னை:…
This website uses cookies.