திருப்பத்துறை அடுத்த பெருமாபட்டு பகுதியை சேர்ந்த குணசேகரன் மகன் ராஜேஷ்குமார் இவர் நேற்று சமூக வலைதளங்களில் சாரைப்பாம்பை தோல் உரிப்பது போல் வீடியோ ஒன்றை பதிவு செய்திருந்தார். இதனை ஆதாரமாகக் கொண்டு திருப்பத்தூர் கோட்ட மாவட்ட வன அலுவலர் மகேந்திரன் உத்தரவின்படி திருப்பத்தூர் வனச்சரக அலுவலர் சோழராஜன் தலைமையில் வனவர் மற்றும் வனப்பணியாளர்கள் இந்த வீடியோ வைத்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், பெருமாபட்டு கிராமத்திற்கு சென்று ராஜேஷ்குமாரை கைது செய்து அழைத்து வந்து விசாரணை நடத்தினர். அதில், நடைபெற்ற விசாரணையில் சாரைப்பாம்பை தோலுரித்து அதனை சமைத்து கரியாக்கி சாப்பிட்டதை அவர் ஒப்புக்கொண்டார்.
எதற்காக இப்படி செய்தாய் என கேட்ட அதிகாரிகளிடம் அப்படி சாப்பிட்டால் உடல் பலம் பெறும் ஆண்மை அதிகரிக்கும்னு சொன்னாங்க, அதனால் பாம்பை தேடிப் பிடித்து அடித்து சாப்பிட்டேன் என கூறியதை கேட்டு அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். இதை அடுத்து அவரை திருப்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…
சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…
ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…
எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…
தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…
பழனியில் தமிழக முன்னாள் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:-…
This website uses cookies.