திருப்பத்துறை அடுத்த பெருமாபட்டு பகுதியை சேர்ந்த குணசேகரன் மகன் ராஜேஷ்குமார் இவர் நேற்று சமூக வலைதளங்களில் சாரைப்பாம்பை தோல் உரிப்பது போல் வீடியோ ஒன்றை பதிவு செய்திருந்தார். இதனை ஆதாரமாகக் கொண்டு திருப்பத்தூர் கோட்ட மாவட்ட வன அலுவலர் மகேந்திரன் உத்தரவின்படி திருப்பத்தூர் வனச்சரக அலுவலர் சோழராஜன் தலைமையில் வனவர் மற்றும் வனப்பணியாளர்கள் இந்த வீடியோ வைத்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், பெருமாபட்டு கிராமத்திற்கு சென்று ராஜேஷ்குமாரை கைது செய்து அழைத்து வந்து விசாரணை நடத்தினர். அதில், நடைபெற்ற விசாரணையில் சாரைப்பாம்பை தோலுரித்து அதனை சமைத்து கரியாக்கி சாப்பிட்டதை அவர் ஒப்புக்கொண்டார்.
எதற்காக இப்படி செய்தாய் என கேட்ட அதிகாரிகளிடம் அப்படி சாப்பிட்டால் உடல் பலம் பெறும் ஆண்மை அதிகரிக்கும்னு சொன்னாங்க, அதனால் பாம்பை தேடிப் பிடித்து அடித்து சாப்பிட்டேன் என கூறியதை கேட்டு அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். இதை அடுத்து அவரை திருப்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
முரட்டு நடிகர் வீசிய காதல் வலையில் சிக்கித் தவித்த பிரபல நடிகை சினிமாவை விட்டே ஒதுங்கிய விஷயம் குறித்து பிரபலம்…
சென்னை மெரினா கடலில் பெற்றோரின் திடீர் பிரிவால் மகள்கள் விபரீத முடிவை எடுக்கச் சென்ற சம்பவம் குறித்து போலீசார் விசாரணை…
கலவையான விமர்சனம்… எஸ்.யு.அருண் குமார் இயக்கத்தில் சீயான் விக்ரம் நடிப்பில் கடந்த வாரம் வெளியான “வீர தீர சூரன் பார்ட்…
காஞ்சிபுரத்தை சேர்ந்த சஞ்சீவி என்பவர் குடும்பத்துடன் காரில் திண்டுக்கல் சென்றுக்கொண்டிருந்த நிலையில் விழுப்புரம் புறவழிச் சாலையில் இருசக்கர வாகனத்தின் மீது…
சென்னை, விருகம்பாக்கத்தில் வழக்கறிஞர் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்பவம் தொடர்பாக தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்படுகிறது. சென்னை: சென்னையின் விருகம்பாக்கம்,…
மத்திய அரசின் பாதுகாப்பு கொடுப்பதற்காக விஜய்க்கும், பாஜகவுக்கும் எந்த உடன்பாடும் கிடையாது என அண்ணாமலை கூறியுள்ளார். கோயம்புத்தூர்: தமிழக பாஜக…
This website uses cookies.