தமிழகம்

டீ குடிக்கச் சென்ற மாணவி.. சென்னை ஐஐடி கேண்டீனில் அருவருக்கத்தக்க சம்பவம்!

சென்னை ஐஐடி கேண்டீனில் டீ குடிக்கச் சென்ற மாணவியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக பணியாளரை போலீசார் கைது செய்துள்ளனர்.

சென்னை: சென்னை ஐஐடியில் படிக்கும் மாணவி ஒருவர், வளாகத்தில் உள்ள கேண்டீனில் டீ குடிப்பதற்காகச் சென்றுள்ளார். அப்போது, அந்த மாணவியிடம் கேண்டீனில் பணியாற்றி வந்த உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த ஸ்ரீராம் என்பவர் பாலியல் தொல்லை அளித்ததாகத் தெரிகிறது.

எனவே, இது குறித்து ஐஐடி மாணவி நேரடியாக போலீசில் புகார் அளித்துள்ளார். இந்தப் புகாரின் பேரில், சென்னை ஐஐடிகேண்டீனில் பணியாற்றி வரும் ஸ்ரீராமை போலீசார் கைது செய்துள்ளனர். இதனைத் தொடர்ந்து, ஸ்ரீராமிடம் கோட்டூர்புரம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்ரனர்.

முன்னதாக, சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டார். இந்தச் சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், எதிர்தரப்பு அரசியல் கட்சிகள் தொடர்ச்சியாக போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

குறிப்பாக, மாணவி புகாரில் குறிப்பிட்ட சார் என்பது யார் என்பதைக் கேட்கும் வகையில் ‘யார் அந்த சார்’ என்ற கேள்வியை அதிமுக தொடர்ந்து எழுப்பி வருகிறது. இதனிடையே, இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் விளக்கம் அளித்தார்.

இதையும் படிங்க: சென்னையைத் தொடர்ந்து புதுச்சேரி.. பல்கலை வளாகத்தில் கூட்டு பாலியல் வன்கொடுமை முயற்சி?

அதுமட்டுமல்லாமல், தமிழ்நாட்டில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளுக்கு கடுமையான தண்டனைகளை அளிக்கும் வகையில் சட்டத் திருத்தம் கொண்டு வரப்பட்டது. பெண்களைப் பின் தொடர்ந்தாலே 5 ஆண்டுகள் வரை சிறை வைக்கும் வகையில் சட்டமும் கொண்டு வரப்பட்டுள்ளது.

Hariharasudhan R

Recent Posts

காதலரை பிரிந்தார் நடிகை தமன்னா.. இதுக்கும் அவருதான் காரணமா? இன்ஸ்டா பதிவால் பரபர!

20 வருடங்களாக முன்னணி நடிகையாக உள்ளார் நடிகை தமன்னா. வாய்ப்பு இல்லாமல் வாய்ப்பை உருவாக்கி வருகிறார். காரணம் ஒரு படத்திற்கு…

5 hours ago

பிரபல நடிகரின் மனைவியை உருகி உருகி காதலித்த ரகுவரன் : வெறுத்துப் போய் குடிக்கு அடிமையான அவலம்!

நடிகர் ரகுவரன் தமிழ் சினிமாவின் சிறந்த வில்லன் என பெயர் பெற்றவர், எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் கச்சிதமாக செய்து முடிப்பவர்.…

6 hours ago

படுக்கைக்கு அழைத்த நண்பர்கள்.. அஜித், விஜயுடன் நடித்த நடிகையின் பரிதாப நிலை!

உதவி கேட்டதால் படுக்கைக்கு நண்பர்களே அழைத்த அவலம் தமிழ் சினிமா நடிகைக்கு ஏற்பட்டுள்ளது. ஜெமினி படம் மூலம் தமிழ் சினிமாவில்…

7 hours ago

சித்தப்பா முதல் படுத்த படுக்கையாக உள்ள முதியவர் வரை.. 15 வயது சிறுமிக்கு கொடூரம்!

நீலகிரி, ஊட்டியில் 15 வயது சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த சித்தப்பா, உறவுக்கார அண்ணன் ஆகியோரை போலீசார் கைது…

7 hours ago

வசூலில் மிரட்டிய டிராகன் ஓடிடியில் ரிலீஸ்… தேதி அறிவிப்பு!

அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ஏஜிஎஸ் தயாரிப்பில் வெளியானது திரைப்படம் டிராகன். பிரதீப் ரங்கநாதன், காயடு லோகர், அனுபமா உட்பட பலர்…

7 hours ago

நாங்க எப்போ சொன்னோம்? நழுவிச் சென்ற பிரேமலதா.. அண்ணாமலை சொன்ன ‘நச்’

தேமுதிகவுக்கு ராஜ்ய சபா சீட் குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை என கூட்டணியில் உள்ள அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி…

8 hours ago

This website uses cookies.