தமிழகம்

பாதி எரிந்த நிலையில் காவலர் சடலமாக மீட்பு.. மதுரையை கதிகலங்க. வைத்த சம்பவம்!

மதுரையில், பாதி எரிந்த நிலையில் தனிப்படை காவலர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மதுரை: மதுரை விமான நிலையம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையின் ஈச்சனேரி பகுதியில், பாதி எரிந்த நிலையில் சடலம் இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இந்தத் தகவலின் பேரில், சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதனிடையே, சடலமாக மீட்கப்பட்ட நபர், சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த தனிப்படை காவலர் மலையரசன் எனத் தெரிய வந்துள்ளது. மேலும், இது தொடர்பாக விசாரிக்கையில், இவரின் மனைவி சமீபத்தில் விபத்தில் சிக்கி, கடந்த மார்ச் 1 அன்று சிந்தாமணி பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

36 வயதாகும் காவலர் மலையரசன், விருதுநகர் மாவட்டத்தை பூர்வீகமாகக் கொண்டவர் ஆவார். மேலும், இவர் தற்போது சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் காவல் நிலையத்தில், தனிப்படைப் பிரிவில் காவலராக வேலை பார்த்து வந்துள்ளார்.

இதையும் படிங்க: பிரபல நடிகையின் வீட்டருகே பிரம்மாண்ட பங்களா கட்டும் அரசியல் கட்சி தலைவர்.. அப்படி எதுவும் இல்ல!

எனவே, அவரின் மரணத்தில் மர்மம் தொடர்வதால், போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், காவலர் எரித்துக்கொலை செய்யப்பட்டாரா? அல்லது மனைவி இறந்த விரக்தியில் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது அவருக்கு யாருடனும் முன்விரோதம் இருக்கிறதா? எனப் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Hariharasudhan R

Recent Posts

ரொம்ப கஷ்டம், அவர் இஷ்டத்துக்குதான் நடிப்பாரு- எல்லை மீறிப்போன முருகதாஸ் பட ஹீரோ?

அட்டர் பிளாப் பாலிவுட்டில் ஏ.ஆர்.முருகதாஸ் சல்மான் கானை வைத்து இயக்கிய திரைப்படம் “சிகந்தர்”. இதில் சல்மான் கானுக்கு ஜோடியாக ராஷ்மிகா…

4 minutes ago

இசைஞானியே! இது தர்மமா? போஸ்டர் வெளியிட்டு புலம்பும் அஜித் ரசிகர்கள்! அடப்பாவமே…

5 கோடி இழப்பீடு ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமாரின் நடிப்பில் கடந்த வாரம் வெளிவந்த “குட் பேட் அக்லி” திரைப்படம்…

1 hour ago

திமுகவும், கைக்கூலிகளும் வக்பு சொத்தை அபகரித்துள்ளனர் : பாஜக பரபரப்பு குற்றச்சாட்டு!

பாரதிய ஜனதா கட்சியின் சிறுபான்மை அணி தேசிய செயலாளர் வேலூர் இப்ராகிம் திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் நடைபெறும் வக்பு திருத்தச்…

1 hour ago

காவல்துறை அனுமதி மறுத்தால் நீதிமன்றம் சென்று மீண்டும் அதே இடத்தில் நடத்துவோம் : பாஜக பிரமுகர் எச்சரிக்கை!

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் காந்தி கலையரங்கத்தில் சட்ட மாமேதை அம்பேத்கரின் பிறந்த நாள் விழா, வக்ஃபு வாரிய சட்ட திருத்தம்…

2 hours ago

வடிவேலு கூட அப்படி ஆகிடுச்சு? மத்தவங்க இருந்ததுனால தப்பிச்சேன்- கவர்ச்சி நடிகை ஓபன் டாக்

வைகைப்புயல் மீது பிராது வைகைப்புயல் என்று அழைக்கப்படும் காமெடி நடிகர் வடிவேலு கோலிவுட்டின் டாப் காமெடி நடிகராக வலம் வந்த…

2 hours ago

This website uses cookies.