இளைஞரிடம் 10 லட்சம் பணம் பறித்த வழக்கில் சாட்சியங்களை கலைக்க முயன்றதாக முன்னாள் பெண் காவல் ஆய்வாளரை சினிமா பாணியில் சேசிங் செய்து பிடித்து அழைத்து சென்ற காவல்துறையினர்.
கடந்த 2021 ஆம் ஆண்டு சிவகங்கை மாவட்டம் இளையான்குடியைச் சேர்ந்த அர்சத் என்பவரிடம் நாகமலை புதுக்கோட்டை காவல்நிலையத்தில் ஆய்வாளராக பணி புரிந்த பெண் ஆய்வாளர் வசந்தி என்பவர் 5 கூட்டாளிகளுடன் சேர்ந்து ரூ. 10 லட்சம் பணம் பறித்ததாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். இதைத் தொடர்ந்து, அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இதனிடையே, முன்னாள் ஆய்வாளர் வசந்தி நிபந்தை ஜாமினில் வெளியில் உள்ளார். இந்நிலையில் வழக்கின் சாட்சியான விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவல்லிபுத்தூர் பகுதியை சேர்ந்த ஒருவரை மிரட்டி சாட்சியை கலைக்கும் முயற்சியில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது.
இதையடுத்து, இன்று மதுரை சிலைமான் மற்றும் ஊமச்சிகுளம் காவல்துறையினர் மதுரை அவுட்போஸ்ட் காமராசர் பல்கலைக்கழக கல்லூரி அருகே காரில் சென்றபோது, முன்னாள் ஆய்வாளர் வசந்தியை சினிமா பாணியில் சேசிங் செய்து மடக்கிபிடித்து கைது செய்து ஊமச்சிகுளம் காவல்நிலையத்தில் விசாரணைக்காக வைத்துள்ளனர். பின்னர், புகார் அளிக்கப்பட்டுள்ள ஸ்ரீவல்லிபுத்தூர் காவல்துறையினரிடம் ஒப்படைக்கவுள்ளனர்.
ரவீனா தாஹா 2009 ஆம் ஆண்டு சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மிகவும் பிரபலமான சீரீயலான “தங்கம்” தொடரில் குழந்தை நட்சத்திரமாக…
ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் இறந்த நெல்லூர் மாவட்டம் காவலியை சேர்ந்த மதுசூதன் ராவ் சோமிசெட்டியின் உடலுக்கு துணை…
புதுமைனா கமல்ஹாசன்தான்! சினிமாத்துறையை பொறுத்தவரை கமல்ஹாசன் பல நவீன தொழில்நுட்பங்களை அறிமுகம் செய்துள்ளார். இது பலருக்கும் தெரிந்த செய்திதான். ஆனால்…
தெலங்கானா மாநிலம் குமுரம்பீம் ஆசிபாபாத் மாவட்டம் ஜெய்னூர் மண்டலம், அடேசரா பழங்குடியினர் கிராமத்தைச் சேர்ந்த ரம்பாபாய் - பத்ருஷாவ் தம்பதியினரின்…
அடுத்த படத்துக்கு யார் இயக்குனர்? அஜித்குமார் நடிப்பில் வெளியான “குட் பேட் அக்லி” திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை…
தமிழகத்துக்கு அடுத்த வருடம் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் அரசியல் கட்சிகளிடையே கூட்டணி, தேர்தல் வியூகம் என அடுத்தடுத்து…
This website uses cookies.