திருச்சி ; காவல்துறையினரை தாக்கம் முயற்சி செய்யும் குற்றவாளிகளுக்கு திருச்சியில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவம் ஒரு எச்சரிக்கை என்று திருச்சி மாநகர காவல் ஆணையர் சத்யபிரியா பேட்டி தெரிவித்துள்ளார்.
திருச்சியில் இரண்டு ரவுடிகள் விசாரணைக்காக அழைத்து சென்ற போது தப்பிக்க முயன்றதால் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டு அவர்கள் பிடிக்கப்பட்டனர். இந்நிலையில் சம்பவ இடத்தில் திருச்சி மாநகர காவல்துறை ஆணையர் சத்திய பிரியா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது :- சுடப்பட்ட குற்றவாளிகள் இருவர் மீதும் பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது. அவர்கள் இருவரும் தேடப்படும் குற்றவாளிகளாக இருந்தனர். இந்நிலையில் திருச்சியில் நடந்த ஒரு கொள்ளை சம்பவம் தொடர்பாக அவர்கள் இருவரும் இன்று விசாரணைக்காக அழைத்து வரப்பட்டனர்.
விசாரணைக்காக கைது செய்து குற்றவாளிகளை போலீசார் அழைத்துச் செல்லும் பொழுது போலீசாரை தாக்கும் குற்றவாளிகளுக்கு இச்சம்பவம் ஒரு எச்சரிக்கை. இந்த துப்பாக்கி சூடு சம்பவம் திட்டமிட்டு நடத்தப்பட்டது அல்ல. குற்றவாளிகள் திருடிய நகைகளை மறைத்து வைத்திருந்த இடத்தில், அதனை மீட்பதற்காக வந்த பொழுது குற்றவாளிகள் போலீசாரை அரிவாளால் தாக்கி விட்டு தப்பிக்க முயன்றதால், துப்பாக்கியால் சுட வேண்டிய நிலை ஏற்பட்டது.
இது போன்ற பல்வேறு கொலை மற்றும் கொள்ளை வழக்குகள் நிலுவையில் இருக்கும் குற்றவாளிகளை கைது செய்து வழக்குகளை முடித்து வைக்க வேண்டும் என்கிற நோக்கில் தான் காவல்துறையினரும் தீவிரமாக புலன் விசாரணை செய்கிறார்கள். ஆனால் தங்களது உயிருக்கு தற்காப்பு ஏற்படுத்திக் கொள்வதற்காக அவர்களை சுட வேண்டிய சூழல் காவல் துறையினருக்கும் உருவாகிறது.
கஞ்சா போன்ற போதை பொருட்கள் தொடர்பான வழக்குகளில் தொடர்ந்து கைதாகும் குற்றவாளிகளின் மீது இது போன்ற நடவடிக்கை இருக்குமா என்கிற கேள்விக்கு ? இது அவர்களுக்கும் ஒரு எச்சரிக்கை என்று எடுத்துக் கொள்ளலாம் என தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் காவல்துறையினரை சந்தித்து விசாரணை மேற்கொண்டு நலம் விசாரித்தார். அதனை தொடர்ந்து மருத்துவரிடம் அவர் நிலை குறித்து விசாரணை செய்தார்.
தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…
மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…
This website uses cookies.