தமிழகம்

காவல்துறை அனுமதி மறுத்தால் நீதிமன்றம் சென்று மீண்டும் அதே இடத்தில் நடத்துவோம் : பாஜக பிரமுகர் எச்சரிக்கை!

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் காந்தி கலையரங்கத்தில் சட்ட மாமேதை அம்பேத்கரின் பிறந்த நாள் விழா, வக்ஃபு வாரிய சட்ட திருத்தம் குறித்தும், மும்மொழி கொள்கை குறித்தும் விளக்கம் அளிக்கும் விதமாக பாஜக சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற இருந்தது.

இந்நிலையில் இன்று நடைபெற இருந்த பொதுக்கூட்டத்திற்கு சட்டம் ஒழுங்கை காரணம் காட்டியும், வக்ஃபு வாரிய சட்ட திருத்தம் குறித்து நீதி மன்ற விசாரணை இருப்பதாலும் காவல்துறை அனுமதி மறுத்துள்ளது.

இதையும் படியுங்க: அஸ்திவாரம் தோண்டும் போதே அபசகுணம்.. புதிய கட்டிடத்துக்காக காவு வாங்கிய பழைய கட்டிடம்!

அதுபோல் இன்றைய கூட்டத்தில் கலந்து கொள்ள இருந்த பாரதிய ஜனதா கட்சியின் சிறுபான்மை அணியின் தேசிய செயலாளர் வேலூர் இப்ராஹிம் மதுரை புதூரில் பாஜக நிர்வாகி வீட்டில் தங்கி இருந்தார். அங்கு காவல்துறையினரால் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டார்.

இதுகுறித்து திண்டுக்கல் கிழக்கு மாவட்ட தலைவர் முத்துராமலிங்கம் பேட்டியளித்த போது, தமிழ்நாடு அரசின் காவல்துறை வக்ஃபு வாரிய சட்டம் குறித்து நீதிமன்றத்தில் விசாரணை இருப்பதை காரணம் காட்டி பாஜகவின் பொது கூட்டத்திற்கு அனுமதி மறுத்துள்ளது. நாங்கள் நீதிமன்றத்தின் அனுமதி பெற்று மீண்டும் இதே இடத்தில் பொதுக்கூட்டம் நடத்துவோம் என கூறினார்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

வடிவேலு கூட அப்படி ஆகிடுச்சு? மத்தவங்க இருந்ததுனால தப்பிச்சேன்- கவர்ச்சி நடிகை ஓபன் டாக்

வைகைப்புயல் மீது பிராது வைகைப்புயல் என்று அழைக்கப்படும் காமெடி நடிகர் வடிவேலு கோலிவுட்டின் டாப் காமெடி நடிகராக வலம் வந்த…

1 hour ago

அஸ்திவாரம் தோண்டும் போதே அபசகுணம்.. புதிய கட்டிடத்துக்காக காவு வாங்கிய பழைய கட்டிடம்!

கரூர், பஞ்சமாதேவி பகுதியில் பொன்னுச்சாமி என்பவர் புதியதாக கட்டி வரும் வீட்டிற்கு சுற்றுச்சுவர் கட்டுவதற்காக சிவாஜி, ராஜேந்திரன், மாயவன் ஆகிய…

1 hour ago

ஜிவி பிரகாஷை வம்புக்கு இழுக்கறியா? திவ்யபாரதியை ஒருமையில் திட்டிய பிரபலம்.. புது பஞ்சாயத்து ஆரம்பம்!

ஜிபி பிரகாஷ் - சைந்தவி பள்ளி பருவத்திலேயே காதலித்து வந்தனர். தொடர்ச்சியாக பல வருடமாக காதலித்து பெற்றோர் சம்மதத்துடன் திருமணமும்…

2 hours ago

கெரியருக்கே ஆப்பு வைத்த மேனேஜர்! ஸ்ரீகாந்த் பக்கத்துல சனியன் பாய் விரிச்சி படுத்திருக்கான் போல?

மேனேஜரால் வந்த வினை… நடிகர் ஸ்ரீகாந்த் தமிழ் சினிமாவில் அறிமுகமானபோது ஒரு நம்பிக்கை நட்சத்திரமாகவே வலம் வந்தார். ஒரு இளம்…

2 hours ago

பென்சிலுக்காக மாணவனை அரிவாளால் வெட்டிய 8ஆம் வகுப்பு மாணவன்.. சந்தி சிரிக்கும் சட்டம் ஒழுங்கு!

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் உள்ள ரோஸ்மேரி தனியார் பள்ளி இன்று வழக்கம் கோல செயல்பட தொடங்கியது. அந்த சமயம் 8ஆம்…

3 hours ago

This website uses cookies.