Categories: தமிழகம்

சாலைகளில் படுத்திருக்கும் மாடுகளை திருடும் மர்ம கும்பல்: சிக்கிய சிசிடிவி காட்சி!

கள்ளக்குறிச்சி : திருக்கோவிலூரில் சாலைகளில் படுத்திருந்த 8 மாடுகளை மர்ம நபர்கள் திருடிச் செல்லும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் பேரூராட்சியானது நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. நகராட்சி ஆணையராக கீதா பொறுப்பேற்றார். இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு திருக்கோவிலூர் நகர் பகுதியில் இருசக்கர வாகனத்தில் வந்த ஒருவரின் மீது சாலையில் சுற்றித்திரிந்த பன்றி மோதியதில் விபத்துக்குள்ளான சிசிடிவி காட்சிகள் குறித்து தனியார் செய்தி தொலைக்காட்சியில் செய்தி ஒளிபரப்பப்பட்டது. அதன் எதிரொலியாக நகராட்சி ஆணையர் சாலைகளில் சுற்றித்திரியும் கால்நடைகளின் உரிமையாளர்கள் உடனடியாக அதனை அப்புறப்படுத்த வேண்டுமென்றும், மீறுபவர்கள் மீது ரூபாய் 5 ஆயிரம் அபராதமும் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்திருந்தார்.

இந்த நிலையில், இந்த அறிவிப்பு வெறும் வெற்று அறிவிப்பாக இருந்ததால் தொடர்ச்சியாக நகரில் உள்ள பல்வேறு சாலைகளில் மாடுகள் சுற்றி திரிந்தன. மேலும், இரவு நேரங்களில் சாலை ஓரங்களில் படுத்து உறங்கின. இந்தநிலையில், நகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் சாலையோரங்களில் படுத்து உறங்கிய மாடுகள் 8க்கும் மேற்பட்டவையை மர்மநபர்களால் இரவு நேரங்களில் வாகனங்களில் கட்டி ஏற்றி சென்றது தெரியவந்தது. இது குறித்து இப்பகுதி மக்கள் சிசிடிவி காட்சிகளுடன் திருக்கோவிலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் மர்ம நபர்களை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

KavinKumar

Recent Posts

ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்..!முக்கிய ஹீரோயினுடன் கேமியோ ரோலில் நடிக்கும் சமந்தா.!

மீண்டும் இணையும் அனுபமா – சமந்தா பிரவின் கந்த்ரேகுலா இயக்கத்தில் உருவாகியிருக்கும் "பரதா" திரைப்படத்தில் பிரபல நடிகை சமந்தா கேமியோ…

2 hours ago

கமலுக்கு பேரனாக நடித்த பான் இந்திய ஹீரோ..அப்பவே கலக்கி இருக்காரே.!

சிப்பிக்குள் முத்து படத்தில் அல்லு அர்ஜுன் நடிகர் கமல்ஹாசனுக்கு பேரனாக நடித்த ஒருவர் தற்போது பான் இந்திய ஹீரோவாக கலக்கி…

2 hours ago

மொக்க படத்தையும் WOW-னு சொல்லுறாங்க..சோசியல் மீடியாவால் ரசிகர்கள் ஏமாற்றம்..பிரபலம் பகீர்!

மர்மர் படம் – சர்ச்சையின் மையம் இந்தியாவின் முதல் Found Footage ஹாரர் படம் என விளம்பரப்படுத்தப்பட்ட மர்மர் திரைப்படம்…

4 hours ago

டாஸ்மாக்கில் ரூ.1000 கோடிக்கு மேல் ஊழல்.. சிக்கும் அரசு? அண்ணாமலையின் திடீர் அறிவிப்பு!

தமிழ்நாட்டில் டாஸ்மாக் மதுபான முறைகேடு தொடர்பாக அமலாக்கத்துறை அதிகாரிகள் சென்னையில் கடந்த வாரம் 3 நாட்களாக சோதனை நடத்தினர். சென்னையில்…

4 hours ago

புஷ்பா-2 கூட்ட நெரிசலில் சிக்கிய சிறுவனின் தற்போதைய நிலை..மருத்துவர்கள் சொன்ன தகவல்.!

மருத்துவமனை அறிக்கை – சிறுவனின் உடல்நிலை புஷ்பா 2 திரைப்படத்தின் பிரீமியர் காட்சியின்போது ஹைதராபாத் சந்தியா திரையரங்கில் ஏற்பட்ட கூட்ட…

5 hours ago

விஜய்யை பின்தொடரும் கீர்த்தி சுரேஷ்? திருமணத்திற்கு பின் சர்ச்சையை கிளப்பிய இயக்குநர்!

நடிகை கீர்த்தி சுரேஷ் மலையாள சினிமா உலகில் குழந்தை நட்சத்திர அறிமுகமனார். இவரின் தாயார் மேனகா, தமிழ், தெலுங்கு, மலையாளம்…

5 hours ago

This website uses cookies.