சென்னை: அமைந்தகரை அருகே சாலை விபத்தில் காயமடைந்த இளைஞருக்கு உடனடியாக முதலுதவி அளித்து காப்பாற்றிய காவலர்களுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.
சென்னை அமைந்தகரை புல்லா அவென்யூ பெண்கள் மேல்நிலைப் பள்ளி அருகில் நேற்று இரவு அமைந்தகரை காவல்நிலைய காவலர்கள் பிரேமா, சரவணன், சிவராமன், கோவிந்தன் ஆகியோர் பணியில் ஈடுபட்டிருந்தனர். முகக்கவசம் அணியாமல் இருசக்கர வாகனத்தில் வரும் நபர்களை நிறுத்தி வழக்குப் பதிவு செய்து அபராதம் விதித்துக் கொண்டிருந்தனர்.
அப்போது டிபி சத்திரம் பகுதியைச் சேர்ந்த பாபு என்பவர் அங்கு உள்ள சாலையை கடந்துள்ளார். அப்போது அதிவேகமாக சென்ற அடையாளம் தெரியாத இருசக்கர வாகனத்தில் வந்த சபர் பாபு மீது மோதிவிட்டு நிற்காமல் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.
இதனை கண்ட காவலர்கள் உடனடியாக ஓடிச்சென்று மயக்க நிலையில் இருந்த பாபுவை மீட்டு சாலையோரம் தூக்கிச் சென்றனர். பாபு மூச்சுப் பேச்சு இல்லாமல் மயங்கிய நிலையில் இருந்ததால் காவலர் ஒருவர் பாபுவின் மார்பில் கையை வைத்து அமுக்கி முதலுதவி அளித்து பாபுவை முழிக்க வைத்து காப்பாற்றினார்.
இதுகுறித்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவிய நிலையில், சற்றும் தாமதிக்காமல் முதலுதவி அளித்து காப்பாற்றிய காவலர்களுக்கு வாழ்த்துகளும், பாராட்டுகளும் குவிந்து வருகிறது.
இன்னும் 3 நாள்தான் மாமே… ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10…
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டத்தின் தெலுங்கு தேச கட்சியின் மாவட்ட தலைவர் அனந்த லட்சுமி. இவர் ஏற்கனவே காக்கிநாடா தொகுதியில்…
கோவையில் 17 மற்றும் 14 வயது சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுந்த புகாரின் பேரில், சர்ச் பாதிரியார் மீது…
சர்வதேச சந்தையில் சமையல் எரிவாயு விலை பொறுத்து சிலிண்டர் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. அந்த வகையில் சிலிண்டர் விலை தற்போது…
திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஹேமலதா இவருக்கு திருமணம் ஆகி கணவருடன் பிரிந்து வாழ்ந்து வரும்…
மரண வெயிட்டிங் மாமே ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10 ஆம்…
This website uses cookies.