காஞ்சிபுரம், உத்திரமேரூர் அருகே ஏரியில் மிதந்த 3 இளைஞர்களின் சடலங்கள் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் ஒன்றியம், காட்டாங்குளம் ஊராட்சிக்கு உட்பட்ட விழுதவாடி கிராமம் அருகே உள்ள ஏரிக்கரை தாங்கலில், மூன்று நபர்கள் முகம் எரிந்து இறந்த நிலையில் சடலமாக மிதப்பதாக, உத்திரமேரூர் போலீசாருக்கு தகவல் கிடைத்து உள்ளது.
இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த காஞ்சிபுரம் டிஎஸ்பி சங்கர் கணேஷ் மற்றும் உத்திரமேரூர் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணியினர், நீரில் மிதந்து கொண்டிருந்த அழுகிய சடலத்தை மீட்டனர். இதனிடையே, இறந்த நபர்கள் பழையசீவரம் கிராமத்தைச் சேர்ந்த விஷ்வா (17), சத்ரியன் (17) மற்றும் பரத் (17) ஆகிய மூன்று பேர் என்பது தெரிய வந்தது.
மேலும், மூவரும் வாலாஜாபாத் அருகே உள்ள பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வருவதாக கூறப்படுகிறது. இறந்த நபர்கள் மூன்று நாட்களுக்கு முன்பு இறந்து இருக்கலாம் எனத் தெரிய வந்துள்ளது. அதேநேரம், உத்திரமேரூர் அருகே குற்ற வழக்கில் தொடர்புடைய சிறுமையிலூர் கிராமத்தைச் சஞ்சய் என்பவர், பழையசீவரம் கிராமத்தை சேர்ந்த பரத் என்பவருடன் பிரச்னை செய்து வாங்குவாதம் செய்ததாகவும் சொல்லப்படுகிறது.
இதையும் படிங்க: கல்குவாரியில் நிர்வாணமாக கிடந்த பெண் சடலம்.. விசாரணையில் பகீர் தகவல்!
இது குறித்து உத்திரமேரூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து, சடலத்தை செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், இந்தச் சம்பத்தில் ஈடுபட்டுள்ள நபர்களை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
மனம் உடைஞ்ச சல்மான்கான் பாலிவுட் நடிகர் சல்மான் கான் கடந்த 35 ஆண்டுகளாக இந்திய சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கிறார்.…
மக்களவைத் தேர்தல் பிரசாரத்தின் போது முதல்வர் மு.க. ஸ்டாலின்,கோவையில் உலகத் தரம் வாய்ந்த சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியம் அமைக்கப்படும் என்று…
வீடீயோவை தேடி பார்ப்பவர்களுக்கு எச்சரிக்கை சமீபத்தில் சமூக வலைதளங்களில் நடிகை ஸ்ருதி நாராயணனைப் பற்றிய ஆபாச வீடியோ ஒன்று வெளியானது.…
விருதுநகர், மல்லாங்கிணறு பகுதியில் தாயுடன் தகாத உறவில் இருந்த நபரைக் குத்திக்கொலை செய்த மகன் உள்பட இருவரை போலீசார் கைது…
காசநோயால் அவதி தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகையாக 1980 மற்றும் 90-களில் விளங்கிய சுஹாசினி,தமிழ் மட்டுமின்றி தெலுங்கு,மலையாளம்,கன்னடம் ஆகிய மொழிப்படங்களிலும்…
காங்கிரஸ், திமுகவுக்கு விஜய் தண்ணீர் காட்ட வேண்டும், பாஜகவுக்கு அல்ல என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். டெல்லி:…
This website uses cookies.