தூத்துக்குடி தாளமுத்து நகர் காவல் நிலையத்தில் கண்டிஷன் ஃபைலில் கையெழுத்திட வந்த நண்டு வியாபாரியை காவல் ஆய்வாளர் தாக்கிய சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
தூத்துக்குடி தாளமுத்து நகரை சேர்ந்தவர் ரவி. இவர் நண்டு வியாபாரம் செய்து வருகிறார். இவருக்கும், மற்றொரு நண்டு வியாபாரியான டென்னிஸ் என்பவருக்கும், தொழில் போட்டி காரணமாக தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால், டென்னிஸ் ரவி மீது தாளமுத்து நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இந்த புகாரின் அடிப்படையில் கடந்த 22ம் தேதி தாளமுத்து நகர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து ரவியை போலீசார் தேடி வந்துள்ளனர்.
இந்த நிலையில், ரவி தூத்துக்குடி நீதிமன்றத்தில் முன்ஜாமின் கேட்டு மனு தாக்கல் செய்துள்ளார். இதை தொடர்ந்து, தாளமுத்து நகர் காவல்நிலையத்தில் கண்டிஷன் ஃபைலில் கையெழுத்திட வேண்டும் என நிபந்தனை ஜாமின் வழங்கப்பட்டது.
இதனால், நேற்று காவல் நிலையத்திற்கு கண்டிஷன் ஃபைலில் கையெழுத்திட வந்த ரவியை காவல் ஆய்வாளர் மணிமாறன் என்பவர் ரவியை, ‘எப்படி முன்ஜாமின் பெறலாம்..?’ என மிரட்டி அவரை அடித்துள்ளார். இந்த வீடியோ காட்சிகள் வாட்ஸ் அப்பில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…
மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…
This website uses cookies.