தமிழகம்

திடீரென புதைக்கப்பட்ட உடல்.. பெண்ணின் பரபரப்பு வாக்குமூலம்

கோயம்புத்தூர்: கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே உள்ள ஜமீன் கொட்டாம்பட்டி ஊராட்சி என்பது வஞ்சிபுரம் ரங்கசமுத்திரம், ஆவல் சின்னாம்பாளையம், பாலமநல்லூர் என ஆறு கிராமங்கள் கொண்ட ஊர் ஆகும். இங்கு பெரும்பாலும் கூலித் தொழிலாளர்களே அதிக அளவில் உள்ளனர். இந்த நிலையில், நேற்றைய முன்தினம் (நவ.4) நள்ளிரவு பாலமநல்லூர் கிராமத்தில் உள்ள சுடுகாட்டில் குழி தோண்டி, அதில் சடலம் புதைக்கப்பட்டு உள்ளது.

இதனையடுத்து, காலை நேரத்தில் அவ்வழியாகச் சென்ற பொதுமக்கள் இதனை பார்த்து உள்ளனர். அதேநேரம், சுடுகாட்டில் கிராமத்தில் இறக்கும் நபர்களை சுடுகாட்டில் தற்போது புதைக்கப்படுவதில்லை என்றும், பொள்ளாச்சி பகுதியில் உள்ள மின் மயானங்களில் தகனம் மற்றும் எறியூட்டப்படுவதாகவும் கிராமத்தினர் தெரிவிக்கின்றனர். எனவே, அவ்வூரைச் சேர்ந்த ஒருவர் இது குறித்து போலீசுக்கு தகவல் கொடுத்து உள்ளார்.

இந்தத் தகவலின் பேரில் ஆனைமலை காவல் நிலைய கண்காணிப்பாளர் ஸ்ரீமதி உத்தரவின் பேரில், ஆனைமலை ஆய்வாளர் தாமோதரன் மற்றும் கோட்டூர் உதவி காவல் ஆய்வாளர் நாகராஜ் தலைமையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உள்ளனர். இந்த விசாரணையில், அருகில் உள்ள தனியார் காயர் கம்பெனியில் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த 5க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

இதில் மங்கல தேவி (74) என்ற மூதாட்டி, கடந்த ஒரு மாத காலமாக உடல் நலம் சரியில்லாமல், பொள்ளாச்சி அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். பின்னர், காயர் கம்பெனி வீட்டில் தங்கி இருந்து உள்ளார். இதனையடுத்து, நேற்றைய முன்தினம் உடல் நலக்குறைவால் உயிரிழந்துள்ளார். இதனைத் தொடர்ந்து, காயர் கம்பெனி உரிமையாளர் முருகநாதன் ஊர் தலைவர்களிடம் கூறிவிட்டு, நேற்று நள்ளிரவு உயிரிழந்த மூதாட்டியின் உடலை பாலமநல்லூர் கிராமத்தில் இருக்கும் சுடுகாட்டில் புதைத்துச் சென்றதாக உயிரிழந்த மூதாட்டியின் உறவினர் லட்சுமி சாந்தா போலீசாரிடம் தெரிவித்து உள்ளார்.

மேலும், உயிரிழந்த மூதாட்டியின் உடலை பீகார் மாநிலத்திற்கு தங்களால் கொண்டு செல்ல முடியாது எனவும், எனவே இங்கேயே உடலை அடக்கம் செய்ய அனுமதிக்க வேண்டுமென கோரிக்கை விடுத்ததன் பேரில், சுடுகாட்டில் மூதாட்டியின் சடலத்தை புதைத்ததாக போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இதையும் படிங்க : ஆரம்பிப்போமா.. மீண்டும் மெல்ல உயரத் தொடங்கும் தங்கம் விலை

Hariharasudhan R

Recent Posts

இலங்கை தமிழர்களை கொச்சைப்படுத்தும் சூர்யா? திடீரென சர்ச்சையை கிளப்பிய பிரபலம்!

சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…

6 hours ago

7 மணி நேர வேலை… 2 நாள் விடுமுறை : சாம்சங் ஊழியர்கள் மீண்டும் போராட்டம்!

சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…

7 hours ago

ஆளுநருக்கு திடீர் மாரடைப்பு… மருத்துவமனைக்கு நேரில் சென்ற முதலமைச்சர்..!!

ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…

7 hours ago

ஆ ஊனா அமெரிக்கா கிளம்பிடுறாரே இந்த மனுஷன்? கமல்ஹாசன் திடீர் பயணத்துக்கு இதுதான் காரணமா?

எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…

7 hours ago

அரசு நிகழ்ச்சிக்கு ஹெலிகாப்டரில் வந்த அமைச்சர்கள்.. அடுத்த நிமிடமே விபத்து : அதிர்ச்சி வீடியோ!

தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…

7 hours ago

பொன்முடி பேசுனது தப்புதான்.. ஆனா . பெரியாரை விட மோசம் இல்ல.. காங்., மூத்த தலைவர் வக்காளத்து!

பழனியில் தமிழக முன்னாள் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:-…

7 hours ago

This website uses cookies.