இரவு 11 மணிக்கு நடுவீட்டில் குதித்த கும்பல்.. கண்ணிமைக்கும் நேரத்தில் நிகழ்ந்த கொடூரம்!
Author: Hariharasudhan17 March 2025, 4:58 pm
சிவகாசியில், வீட்டில் இருந்த நபரைக் கொலை செய்த கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். பழிக்குப் பழியாக இக்கொலை நடந்திருக்கலாம் எனத் தெரிகிறது.
விருதுநகர் : விருதுநகர் மாவட்டம், சிவகாசி அடுத்த ஆலாவூரணியைச் சேர்ந்தவர் பெருமாள் மகன் சுரேஷ் (27). இவர் கூலித் தொழிலாளி. இவருக்கு திருமணமான நிலையில், மனைவியுடன் சிவகாசி – விளாம்பட்டி சாலையில் உள்ள முனீஸ் நகரில் வசித்து வந்தார்.
இந்த நிலையில், நேற்று இரவு 11 மணி அளவில் சுரேஷ், வழக்கம் போல் வீட்டில் இருந்துள்ளார். அப்போது, அங்கு வந்த மர்ம நபர்கள், சுரேஷை சரமாரியாக வெட்டியுள்ளனர். இவ்வாறு கண்ணிமைக்கும் நேரத்தில் வெட்டியதில் சுரேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

பின்னர், தகவலறிந்து வந்த மாரனேரி போலீசார், சுரேஷின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும், கொலை செய்யப்பட்ட சுரேஷ், கடந்த ஆண்டு திருத்தங்கல் சத்யா நகரைச் சேர்ந்த குணசேகரன் என்பவர் கொலை செய்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளியே வந்துள்ளார்.
இதையும் படிங்க: நான் முதலமைச்சரானதில் இருந்தே.. செங்கோட்டையன் குறித்து இபிஎஸ் திட்டவட்டம்!
எனவே, குணசேகரன் கொலைக்கு பழிக்குப்பழியாக அவரது தம்பி மதனகோபால், சுரேஷை வெட்டி கொலைக் செய்துள்ளதும் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. இருப்பினும், முழுமையான விசாரணைக்குப் பின்னரே முழு விவரமும் தெரிய வரும் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.