தமிழகம்

இரவு 11 மணிக்கு நடுவீட்டில் குதித்த கும்பல்.. கண்ணிமைக்கும் நேரத்தில் நிகழ்ந்த கொடூரம்!

சிவகாசியில், வீட்டில் இருந்த நபரைக் கொலை செய்த கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். பழிக்குப் பழியாக இக்கொலை நடந்திருக்கலாம் எனத் தெரிகிறது.

விருதுநகர் : விருதுநகர் மாவட்டம், சிவகாசி அடுத்த ஆலாவூரணியைச் சேர்ந்தவர் பெருமாள் மகன் சுரேஷ் (27). இவர் கூலித் தொழிலாளி. இவருக்கு திருமணமான நிலையில், மனைவியுடன் சிவகாசி – விளாம்பட்டி சாலையில் உள்ள முனீஸ் நகரில் வசித்து வந்தார்.

இந்த நிலையில், நேற்று இரவு 11 மணி அளவில் சுரேஷ், வழக்கம் போல் வீட்டில் இருந்துள்ளார். அப்போது, அங்கு வந்த மர்ம நபர்கள், சுரேஷை சரமாரியாக வெட்டியுள்ளனர். இவ்வாறு கண்ணிமைக்கும் நேரத்தில் வெட்டியதில் சுரேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

பின்னர், தகவலறிந்து வந்த மாரனேரி போலீசார், சுரேஷின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும், கொலை செய்யப்பட்ட சுரேஷ், கடந்த ஆண்டு திருத்தங்கல் சத்யா நகரைச் சேர்ந்த குணசேகரன் என்பவர் கொலை செய்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளியே வந்துள்ளார்.

இதையும் படிங்க: நான் முதலமைச்சரானதில் இருந்தே.. செங்கோட்டையன் குறித்து இபிஎஸ் திட்டவட்டம்!

எனவே, குணசேகரன் கொலைக்கு பழிக்குப்பழியாக அவரது தம்பி மதனகோபால், சுரேஷை வெட்டி கொலைக் செய்துள்ளதும் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. இருப்பினும், முழுமையான விசாரணைக்குப் பின்னரே முழு விவரமும் தெரிய வரும் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Hariharasudhan R

Recent Posts

பாதி சம்பளம்.. மீதி பங்கு : லாபத்தில் பங்கு கேட்கும் நயன்தாரா!

தமிழ் சினிமாவில் உச்ச நடிகையாக உள்ளவர் நடிகை நயன்தாரா. தென்னிந்திய சினிமாவில் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்த அவர்…

1 hour ago

ரூ.500 கோடி வசூல்.. குட் பேட் அக்லி செய்யப் போகும் சாதனை!

அஜித் குமார் நடிப்பில் சமீபத்தில் வெளியான விடாமுயற்சி படம் படுதோல்வியடைந்தது. இதனால் அஜித் ரசிகர்கள் அடுத்த படமான குட் பேட்…

2 hours ago

நான் முதலமைச்சரானதில் இருந்தே.. செங்கோட்டையன் குறித்து இபிஎஸ் திட்டவட்டம்!

அதிமுகவை யாராலும் உடைக்கவும், முடக்கவும் முடியாது என்று, செங்கோட்டையன் குறித்த கேள்விக்கு எடப்பாடி பழனிசாமி பதில் அளித்துள்ளார். சென்னை: இன்றைய…

2 hours ago

ரீ ரிலீஸ் பட்டியலில் யாரும் எதிர்பாரா படம்.. பக்கா Theater mode Release!

ஆர்ய - சந்தானம் கலக்கல் காம்போவில் வெளியான பாஸ் (எ) பாஸ்கரன் படம் மார்ச் 21ம் தேதி ரீரிலீஸ் செய்யப்பட…

3 hours ago

நடிகர் மம்மூட்டிக்கு கேன்சர்? நடிப்பதில் இருந்து விலகல்? மலையாள சினிமாவில் பரபரப்பு..!!!

மம்மூட்டி நடித்திருக்கும் பசூக்கா திரைப்படம் ஏப்ரல் 10ஆம் தேதி ரிலீஸ் ஆக இருக்கிறது. இதனை தாண்டி தனது அடுத்தடுத்த படங்களையும்…

3 hours ago

விடிந்தால் கல்யாணம்.. மாயமான மணமகன் வீட்டார் : காவல்நிலையத்தில் காத்திருந்த ஷாக்!

திருவள்ளூர் அடுத்த கொப்பூர் கிராமத்தை சேர்ந்தவர் சரத்குமார் என்கிற ஷாம் (31). இவர் தனியார் நிறுவனம் நடத்தி வருகிறார்.இவருக்கும் திருவள்ளூர்…

4 hours ago

This website uses cookies.