தமிழகம்

பெண்களை வீடியோ எடுத்த காவலர்.. கோவை பஸ் ஸ்டாப்பில் அதிர்ச்சி

கோவை பஸ் ஸ்டாப்பில் நின்றுகொண்டு பெண்களை வீடியோ எடுத்த போக்குவரத்து காவலரிடம் சாய்பாபா காலனி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கோயம்புத்தூர்: கோவை மாவட்டம், சாய்பாபா காலனி பேருந்து நிறுத்தம் அருகே நேற்று இரவு ஒரு நபர் தனது செல்போனில், அந்த வழியாகச் செல்லும் பெண்களை வீடியோ எடுத்துக் கொண்டிருந்துள்ளார்.

இதனை அங்கிருந்த பொதுமக்கள் கவனித்துள்ளனர். பின்னர், அந்த நபரைப் பிடித்து, எதற்காக வீடியோ எடுக்கிறாய் எனக் கேட்டுள்ளனர். அதற்கு அந்த நபர் சற்று முன்னுக்குப் பின் முரணாகப் பேசியுள்ளார்.

இதனால் சந்தேகம் அடைந்த பொதுமக்கள், அந்த நபரை சாய்பாபா காலனி காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். இதனையடுத்து, போலீசார் நடத்திய விசாரணையில், அவரது பெயர் பாலமுருகன் என்பதும், போக்குவரத்து காவலராக பணிபுரிவதும் தெரிய வந்துள்ளது.

இதையும் படிங்க : நெருங்கும் தீபாவளி.. உச்சத்தில் காற்று மாசுபாடு.. ஆட்டம் காணும் தலைநகரம்!

தொடர்ந்து அவரிடம் சாய்பாபா காலனி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், அவரது செல்போனை பறிமுதல் செய்த போலீசார், அதில் உள்ள வீடியோ குறித்தும் ஆய்வு செய்து வருகின்றனர்.

Hariharasudhan R

Recent Posts

அது ‘அதற்காக’ எடுக்கப்பட்ட வீடியோ.. விக்ரமன் மனைவி பரபரப்பு பேட்டி!

பெண் உடையுடன் குடியிருப்பில் பிக்பாஸ் விக்ரமன் ஓடிய வீடியோ வைரலான நிலையில், இதுகுறித்து அவரது மனைவி விளக்கம் அளித்துள்ளார். சென்னை:…

10 hours ago

யார் அந்த சூப்பர் முதல்வர்? காரசாரமான மக்களவை.. ஸ்டாலினுக்கு அண்ணாமலை 3 கேள்விகள்!

ஏழை எளிய மாணவர்களின் கல்வியில் அரசியல் செய்வது யார் என்று தமிழக மக்களுக்கு நன்கு தெரியும் என அண்ணாமலை முதல்வர்…

11 hours ago

பள்ளி மாணவருக்கு 6 இடங்களில் வெட்டு.. துண்டான விரல்.. ஸ்ரீவைகுண்டம் அருகே பரபரப்பு!

தூத்துக்குடி, ஸ்ரீவைகுண்டம் அருகே பேருந்தில் சென்று கொண்டிருந்த பள்ளி மாணவரை அரிவாளால் வெட்டிய கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். தூத்துக்குடி:…

13 hours ago

விஜயால் ஏ.ஆர்.முருகதாஸுக்கு வந்த பெரும் சிக்கல்.. இதுதான் முடிவு!

சல்மான் கான் - ராஷ்மிகா நடிப்பில் உருவாகியுள்ள சிக்கந்தர் படம் சர்கார் படத்தின் ரீமேக் அல்ல என இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ்…

14 hours ago

ஓட ஓட விரட்டி படுகொலை செய்யப்பட்ட பாஜக நிர்வாகி.. வயல்வெளியில் நடந்த கொடூர சம்பவம்!

ராணிப்பேட்டையில் பாஜக நிர்வாகி, தனது வயல்வெளியில் மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.…

14 hours ago

போக்சோ கைதி திடீர் மரணம்.. கோவை மத்திய சிறையில் அடுத்தடுத்து உயிரிழப்புகளால் அதிர்ச்சி!

கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த போக்சோ வழக்கு கைது மயங்கி விழுந்த நிலையில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.…

15 hours ago

This website uses cookies.