ஆவடி திருமுல்லைவாயலில் அழுகிய நிலையில் கிடந்த தந்தை, மகள் குறித்து மருத்துவரிடம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
வேலூர்: வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சாமுவேல் சங்கர் (70). இவர் சிறுநீரகக் கோளாறால் பாதிக்கப்பட்ட நிலையில், தனது மகளுடன் திருவள்ளூர், ஆவடி அருகே உள்ள திருமுல்லைவாயலில் வீடு எடுத்து தங்கி சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்த நிலையில், கடந்த சில மாதங்களாக அவரது வீடு பூட்டியே இருந்துள்ளது.
இந்த நிலையில், வீட்டின் உள்ளிருந்து துர்நாற்றம் வீசுவதாக அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர். பின்னர், இந்தத் தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், கதவை உடைத்து பார்த்துள்ளனர். அப்போது, சாமுவேல் மற்றும் அவரது மகள் இருவரும் உயிரிழந்த நிலையில் சடலமாகக் கிடந்துள்ளனர்.
மேலும், அழுகிய நிலையில் இருந்த இருவரின் உடல்களையும் மீட்ட போலீசார், பிரேதப் பரிசோதனைக்காக கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனையடுத்து, இந்தச் சம்பவம் தொடர்பாக சாமுவேல் சங்கருக்கு டயாலிசிஸ் சிகிச்சை செய்து வந்த மருத்துவர் சாமுவேல் எபனேசர் என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: “பராசக்தி”பிரச்சனை ஓவர்…சூப்பர் டீலிங்கில் இரு தரப்பு படக்குழு…பெருமூச்சு விட்ட ரசிகர்கள்..!
இதன் முதற்கட்ட விசாரணையில், சில மாதங்களுக்கு முன்பு, சிகிச்சையின்போது சாமுவேல் சங்கர் இறந்துள்ளார். எனவே, இது தொடர்பாக அவரது மகள், மருத்துவர் எபனேசருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது, அவரை எபனேசர் தள்ளிவிட்டதில் அவரும் உயிரிழந்துள்ளார். இதனால் அச்சமடைந்த மருத்துவர், எபனேசர் வீட்டை பூட்டிவிட்டுச் சென்றதாக தெரிய வந்துள்ளது.
சினிமாவுக்கு முழுக்கு போட உள்ள விஜய் தனது கடைசி படம் ஜனநாயகன் என அறிவித்துள்ளார். மேலும் அரசியலில் தனது முழு…
வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை திடீர் உயர்ந்துள்ளது சாமானிய மக்களுக்கு ஷாக்கை கொடுத்துள்ளது. பொதுத்துறையை சேர்ந்த எண்ணெய் நிறுவனக்ள் 14.20…
கிங்ஸ்டன் பட விழாவில் எஸ் தாணு பேச்சு தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக தன்னுடைய பயணத்தை தொடங்கி தற்போது பல படங்களில்…
பீல் பண்ண ஷ்ரேயா கோஷல் இந்தியாவின் புகழ்பெற்ற பாடகியாக இருப்பவர் ஷ்ரேயா கோஷல்,இவர் ஹிந்தி மொழியை தாய்மொழியாக கொண்டிருந்தாலும் தமிழ்,தெலுங்கு,மலையாளம்…
பட்டையை கிளப்பும் அஜித் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடிப்பில் உருவாகியுள்ள குட் பேட் அக்லி படத்தின் டீசர் வெளியாகி…
சீர்காழி குழந்தை பாலியல் துன்புறுத்தல் சம்பவத்தில் 16 வயது சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளான். இந்த சம்பவம் குறித்து மாவட்ட ஆட்சியர்…
This website uses cookies.