ஆவடி திருமுல்லைவாயலில் அழுகிய நிலையில் கிடந்த தந்தை, மகள் குறித்து மருத்துவரிடம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
வேலூர்: வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சாமுவேல் சங்கர் (70). இவர் சிறுநீரகக் கோளாறால் பாதிக்கப்பட்ட நிலையில், தனது மகளுடன் திருவள்ளூர், ஆவடி அருகே உள்ள திருமுல்லைவாயலில் வீடு எடுத்து தங்கி சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்த நிலையில், கடந்த சில மாதங்களாக அவரது வீடு பூட்டியே இருந்துள்ளது.
இந்த நிலையில், வீட்டின் உள்ளிருந்து துர்நாற்றம் வீசுவதாக அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர். பின்னர், இந்தத் தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், கதவை உடைத்து பார்த்துள்ளனர். அப்போது, சாமுவேல் மற்றும் அவரது மகள் இருவரும் உயிரிழந்த நிலையில் சடலமாகக் கிடந்துள்ளனர்.
மேலும், அழுகிய நிலையில் இருந்த இருவரின் உடல்களையும் மீட்ட போலீசார், பிரேதப் பரிசோதனைக்காக கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனையடுத்து, இந்தச் சம்பவம் தொடர்பாக சாமுவேல் சங்கருக்கு டயாலிசிஸ் சிகிச்சை செய்து வந்த மருத்துவர் சாமுவேல் எபனேசர் என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: “பராசக்தி”பிரச்சனை ஓவர்…சூப்பர் டீலிங்கில் இரு தரப்பு படக்குழு…பெருமூச்சு விட்ட ரசிகர்கள்..!
இதன் முதற்கட்ட விசாரணையில், சில மாதங்களுக்கு முன்பு, சிகிச்சையின்போது சாமுவேல் சங்கர் இறந்துள்ளார். எனவே, இது தொடர்பாக அவரது மகள், மருத்துவர் எபனேசருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது, அவரை எபனேசர் தள்ளிவிட்டதில் அவரும் உயிரிழந்துள்ளார். இதனால் அச்சமடைந்த மருத்துவர், எபனேசர் வீட்டை பூட்டிவிட்டுச் சென்றதாக தெரிய வந்துள்ளது.
தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த முறை தமிழகத்தில் பாஜக ஆட்சியமைக்க அதிமுகவுடன் கூட்டணி வைக்க…
குட் பேட் அக்லி வருகிற 10 ஆம் தேதி ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி”…
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த லத்தேரி பகுதியைச் சேர்ந்த கார்த்தி (வயது 38) அவருடைய மனைவி வனிதா. இவர் தனியார்…
ராக்ஸ்டார் அனிருத் கோலிவுட்டின் ராக்ஸ்டாராக வலம் வரும் அனிருத் Gen Z மற்றும் 2K கிட்ஸின் மனம் கவர்ந்த இசையமைப்பாளராவார்.…
அமெரிக்க அதிபர் டிரம்பின் பரஸ்பர வரி விதிப்பு மற்றும் கடுமையான விசா குடியேற்ற கொள்கைகள் இந்திய ஐடி துறையை பதம்…
சூர்யா 45 “ரெட்ரோ” திரைப்படத்தை தொடர்ந்து சூர்யா தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்து வருகிறார். ஆர்ஜே பாலாஜி இயக்கி…
This website uses cookies.