தமிழகம்

4 மாதங்களாக அழுகிக் கிடந்த தந்தை, மகள் சடலம்.. விசாரணையில் சிக்கிய மருத்துவர்!

ஆவடி திருமுல்லைவாயலில் அழுகிய நிலையில் கிடந்த தந்தை, மகள் குறித்து மருத்துவரிடம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

வேலூர்: வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சாமுவேல் சங்கர் (70). இவர் சிறுநீரகக் கோளாறால் பாதிக்கப்பட்ட நிலையில், தனது மகளுடன் திருவள்ளூர், ஆவடி அருகே உள்ள திருமுல்லைவாயலில் வீடு எடுத்து தங்கி சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்த நிலையில், கடந்த சில மாதங்களாக அவரது வீடு பூட்டியே இருந்துள்ளது.

இந்த நிலையில், வீட்டின் உள்ளிருந்து துர்நாற்றம் வீசுவதாக அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர். பின்னர், இந்தத் தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், கதவை உடைத்து பார்த்துள்ளனர். அப்போது, சாமுவேல் மற்றும் அவரது மகள் இருவரும் உயிரிழந்த நிலையில் சடலமாகக் கிடந்துள்ளனர்.

மேலும், அழுகிய நிலையில் இருந்த இருவரின் உடல்களையும் மீட்ட போலீசார், பிரேதப் பரிசோதனைக்காக கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனையடுத்து, இந்தச் சம்பவம் தொடர்பாக சாமுவேல் சங்கருக்கு டயாலிசிஸ் சிகிச்சை செய்து வந்த மருத்துவர் சாமுவேல் எபனேசர் என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: “பராசக்தி”பிரச்சனை ஓவர்…சூப்பர் டீலிங்கில் இரு தரப்பு படக்குழு…பெருமூச்சு விட்ட ரசிகர்கள்..!

இதன் முதற்கட்ட விசாரணையில், சில மாதங்களுக்கு முன்பு, சிகிச்சையின்போது சாமுவேல் சங்கர் இறந்துள்ளார். எனவே, இது தொடர்பாக அவரது மகள், மருத்துவர் எபனேசருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது, அவரை எபனேசர் தள்ளிவிட்டதில் அவரும் உயிரிழந்துள்ளார். இதனால் அச்சமடைந்த மருத்துவர், எபனேசர் வீட்டை பூட்டிவிட்டுச் சென்றதாக தெரிய வந்துள்ளது.

Hariharasudhan R

Recent Posts

நீங்க வேற மாதிரி சார்…நாட்டின் உயரிய விருதை பெற்றுக்கொண்டார் அஜித்!

நினைத்ததை முடிப்பவர் அஜித்குமார் தமிழ் சினிமாவில் ஒரு டாப் நடிகராக வலம் வந்தாலும் அவருக்கு பைக் ஓட்டுவதிலும் கார் பந்தயங்களிலும்…

7 hours ago

பிளாக்கில் டிக்கெட் விற்பவர்களுக்கு முதல்வர் கனவு.. விஜய்யை மறைமுமாக சாடிய அமைச்சர்!

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் இந்தி திணிப்பு , நிதி பகிர்வில் பாரபட்சம் , தொகுதி மறுசீரமைப்பில் அநீதி போன்றவற்றை…

7 hours ago

கஞ்சா வைத்திருந்த பிரபல சினிமா இயக்குநர்கள்..வளைத்து வைளத்து கைது செய்யும் போலீசார்!

போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் எக்ஸைஸ் அதிகாரிகள் கொச்சியில் கோஷ்ரீ பாலம் அருகே நடத்திய சோதனையில் மலையாள சினிமா…

8 hours ago

வெற்றிமாறன் மேல் உள்ள பயத்தால் சூர்யா எடுத்த திடீர் முடிவு? அப்போ வாடிவாசலோட நிலைமை?

இவ்வளவு இழுபறியா? கடந்த 2022 ஆம் ஆண்டு முதலே வெற்றிமாறனின் “வாடிவாசல்” திரைப்படத்தை குறித்தான பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன. மூன்று…

8 hours ago

அடுத்தவ புருஷனை பங்கு போட்டது தப்புதான்.. ஆனா பாலு மகேந்திரா எனக்கு எல்லாமே கொடுத்தாரு ; நடிகை ஓபன்!

நடிகை மௌனிகா, சில படங்களில் நடித்த அவர் தற்போது சீரியல்களில் நடித்து வருகிறார். அவர் மறைந்த இயக்குநர் பாலுமகேந்திராவின் இரண்டாவது…

9 hours ago

ஜெயிலரை ஓவர் டேக் செய்யப்போகும் குட்  பேட் அக்லி! விரைவில் ஒரு தரமான சம்பவம்?

தாறுமாறு கலெக்சன் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமாரின் நடிப்பில் ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியான “குட் பேட் அக்லி”…

10 hours ago

This website uses cookies.