ராமேஸ்வரம் பெண்கள் உடை மாற்றும் அறையில் ரகசிய கேமராக்கள் மீட்கப்பட்டது தொடர்பாக பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரத்தில் உலகப் புகழ்பெற்ற ராமநாதசுவாமி திருக்கோயில் உள்ளது. இந்தக் கோயிலுக்கு, தமிழ்நாடு மட்டுமின்றி, நாடு முழுவதிலும் இருந்து நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.
அந்த வகையில், இந்தக் கோயிலின் அருகே உள்ள அக்னி தீர்த்தக் கடலில் நீராடும் பக்தர்கள், கடற்கரை அருகே உள்ள தனியார் உடைமாற்றும் அறைகளில் உடைகளை மாற்றிவிட்டு கோயிலுக்குச் சென்று வழிபடுவதை வழக்கமாக வைத்து உள்ளனர். இந்த நிலையில், புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த குடும்பத்தினர் கடலில் நீராடி விட்டு அதன் அருகில் இருந்த உடைமாற்றும் அறைக்குச் சென்றனர்.
அப்போது, அந்த இளம் பெண் அங்கு ஒட்டப்பட்டிருந்த டைல்ஸ்களை உற்று நோக்கிய போது சந்தேகம் அடைந்து உள்ளார். இதனையடுத்து, அதனை சோதனைச் செய்த போது ரகசிய கேமரா பொருத்தப்பட்டிருப்பது தெரிய வந்து உள்ளது. இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த அப்பெண், உடனடியாக காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இதனைத் தொடர்ந்து அங்கு சோதனை செய்த காவலர்கள், மூன்று அறைகளிலும் இருந்த ரகசிய கேமராக்களைக் கைப்பற்றினர். பின்னர், இது தொடர்பாக டீக்கடை உரிமையாளரான ராமேஸ்வரம் தம்பியான் கோட்டை பகுதியைச் சேர்ந்த ராஜேஷ் கண்ணா மற்றும் டீ மாஸ்டர் மீரான் மைதீன் ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: ‘பாலியல் குற்றவாளிகளின் கூடாரம் பாடசாலைகள்.. பேய் ஆட்சி’.. இபிஎஸ் கடும் விமர்சனம்!
இந்த விசாரணையில், ஆன்லைனில் ரகசிய கேமராக்களை வைத்து மறைத்து வைத்துள்ளார். இதன் மூலம், கடந்த சில மாதங்களாக இந்த அறையில் உடைமாற்றும் பெண்களின் அந்தரங்க வீடியோக்களைக் கொண்டு, வயர்லெஸ் கனெக்சன் மூலம் செல்போனில் பதிவிறக்கம் செய்து சேமித்து வைத்துள்ளார்.
மேலும், தற்போதைய நிலவரப்படி, இந்த கேமராக்கள் மூலம் 200க்கும் மேற்பட்ட வீடியோக்கள் கைப்பற்றபட்டு உள்ளதாகவும், இந்த வீடியோக்களை வேறு யாருக்கேனும் அனுப்பி உள்ளனரா என்பது குறித்து, கைது செய்யப்பட்ட இருவரது உறவினர்கள் மற்றும் நண்பர்களின் போனையும் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.
நடக்குமா? நடக்காதா? தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் சிலம்பரசன் நடிப்பதாக இருக்கும் திரைப்படத்தை முதலில் கமல்ஹாசன் தயாரிப்பதாக இருந்தது. ஆனால் ஒரு…
கறாரான இயக்குனர் இயக்குனர் பாலா மிகவும் கறாரான இயக்குனர் எனவும் அவர் நடிகர்களை அடித்து வேலை வாங்குவார் எனவும் ஒரு…
தமிழ்நாட்டில் அடுத்த வருடம் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. ஒரு வருடம் இருக்கும் நிலையில், எதிர்க்கட்சிகள் தேர்தலை சந்திக்க இப்போதே…
கியூட் நடிகை நஸ்ரியா 90ஸ் கிட்களின் கியூட் நடிகையாக வலம் வந்தவர்.“நேரம்” திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களிடையே இவர்…
உலக நாயகன் உலக நாயகனாக வலம் வந்த கமல்ஹாசன் இந்திய சினிமாவிற்கே ஒரு நடிப்பு பல்கலைக்கழகமாக திகழ்ந்தவர். 1980களில் சாக்லேட்…
ஆந்திர மாநிலம், சித்தூர் மசூதி மிட்டாவை சேர்ந்தவர் யாஸ்மின்பானு (23). பூதலப்பட்டு பகுதியை சேர்ந்தவர் சாய்தேஜ் (25). இவர்கள் இருவரும்…
This website uses cookies.