தமிழகம்

சூடுபிடிக்கும் டிஜிட்டல் அரஸ்ட்.. பின்னணியில் சீனர்கள்.. நடப்பது என்ன?

டிஜிட்டல் அரஸ்ட் தொடர்பாக ஏற்கனவே ஒருவர் கைது செய்யப்பட்ட நிலையில், தற்போது மேலும் 4 பேர் கைது செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

சென்னை: சென்னை, திருவான்மியூரைச் சேர்ந்த ஓய்வுபெற்ற மத்திய அரசு அதிகாரி ஒருவரிடம், மும்பை போலீசில் இருந்து பேசுவதாகக் கூறி, ‘டிஜிட்டல் அரஸ்ட்’ மோசடி நடத்தி, 88 லட்சம் ரூபாய் பணத்தை மோசடி செய்த வழக்கில், அஸ்ஸாம் மாநிலத்தைச் சேர்ந்த பிரதீம் போரா என்பவர் கைது செய்யப்பட்டார்.

இதனையடுத்து, அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், கடந்த செப்டம்பர் 4ஆம் தேதி ஒரே நாளில் 3.82 கோடி ரூபாய் மோசடி செய்திருப்பதும், அந்தப் பணத்தை 178 வங்கிக் கணக்குகளுக்கு அனுப்பி இருப்பதும் தெரிய வந்துள்ளது. எனவே, 178 வங்கி கணக்குகளையும் கண்டறிந்த சென்னை சைபர் கிரைம் போலீசார், அதை மீட்பதற்கு உரிய நடவடிக்கையில் ஈடுபட்டு உள்ளனர்.

மேலும், அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அஸ்ஸாம், கவுகாத்திக்குச் சென்று போலீசார் விசாரணை நடத்தினர். மேலும், பிரதீம் போரா உடன் இணைந்து டிஜிட்டல் அரஸ்ட் மோசடியில் ஈடுபட்டதாக துருபாஜோதி மஜிம்தார் (25), ஸ்வராஜ் பிரதான் (22), பிரசாந்த் கிரி (21) மற்றும் பிரஞ்ரல் ஹசாரிகா (28) ஆகிய 4 பேரை கைது செய்து உள்ளனர்.

தொடர்ந்து இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், டெல்லி, கொல்கத்தா, கேரளா, ஜெய்ப்பூர், மும்பை மற்றும் கோவா ஆகிய இடங்களில் உள்ள தங்களது முகவர்கள் மூலம், பொதுமக்களின் செல்போன் எண்கள் உள்ளிட்ட விவரங்களைப் பெற்றிருப்பதும், அந்த விவரங்கள் மூலம் பொதுமக்களை ஏமாற்றியும், மிரட்டியும் பணம் பெற்றுள்ளதும் தெரிய வந்துள்ளது.

இதையும் படிங்க: மனைவியை காரோடு எரித்துக் கொன்ற கணவர்.. நடுரோட்டில் பயங்கரம்!

மேலும், அந்தப் பணத்தை கம்போடியா, வியட்நாம், தைவான் மற்றும் பாங்காங் ஆகிய நாடுகளில் வசிக்கும் தங்களது சீன முதலாளிகளுக்கு அனுப்பி இருப்பதும், இதற்கான கமிஷன் தொகையை இவர்கள் பெற்றிருப்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதனையடுத்து, விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது.

Hariharasudhan R

Recent Posts

அமைச்சர் பொன்முடியின் பதவி பறிப்பு.. முதலமைச்சர் ஸ்டாலின் அதிரடி உத்ததரவு!

திமுகவில் வனத்துறை அமைச்சராக இருப்பவர் பொன்முடி. இவர் மீது ஏராளமான சர்ச்சைகள் உள்ளது. இவர் பேசும் பேச்சு எப்போதும் சர்ச்சையை…

3 minutes ago

திமுக அமைச்சர் பொன்முடியின் ஆபாச பேச்சு… கொந்தளித்த கனிமொழி எம்பி : என்ன நடந்தது?

திமுகவில் வனத்துறை அமைச்சராக இருப்பவர் பொன்முடி. இவர் மீது ஏராளமான சர்ச்சைகள் உள்ளது. இவர் பேசும் பேச்சு எப்போதும் சர்ச்சையை…

23 minutes ago

அதிமுகவில் இருந்து கனத்த இதயத்துடன் வெளியேறுகிறேன்…. கோவை மாவட்ட முக்கிய பிரமுகரின் திடீர் அறிவிப்பு!!

கோவை அதிமுகவில் முக்கிய பிரமுகராக கண்டறியப்படுபவர் வடவள்ளி இன்ஜினியர் சந்திரசேகர். இவர் எம்ஜிஆர் இளைஞரணிச் செயலாளர் பொறுப்பில் பதவி வகித்து…

13 hours ago

ஸ்மார்ட் மீட்டரில் மிகப்பெரிய ஊழல்? ஆதாரங்களுடன் தயாராகும் அண்ணாமலை!

தமிழ்நாட்டில் மாத மாதம் கணக்கெடுக்கும் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்படும் என ஆட்சிக்கு வரும் போது 2021ல் திமுக வாக்குறுதியளித்தது. இது…

15 hours ago

ரசிகர் மன்றத் தலைவர் எடுத்த படம் மாதிரி இருக்கு- GBU-வை கண்டபடி கலாய்த்த பிரபலம்

ரசிகர்களுக்கான படம் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்த “குட் பேட் அக்லி” திரைப்படம் இன்று வெளியான நிலையில் இத்திரைப்படத்தை…

16 hours ago

கவுண்டமணியின் காரை இடிக்க வந்த வடிவேலுவின் கார்! இப்படியெல்லாம் நடந்துருக்கா?

வடிவேலு மீதான புகார்கள் வடிவேலு மிகப் பெரிய காமெடி நடிகராக வளர்ந்த பிறகு அவர் தனது சக நடிகர்களை மதிக்க…

17 hours ago

This website uses cookies.