தமிழகம்

தாயே மகளுக்கு செய்த கொடூரத்தின் உச்சம்.. நீலகிரியில் அதிர்ச்சி!

நீலகிரியில், மகளை பாலியல் தொல்லை அளிப்பதற்கு தந்தைக்கு அனுமதித்ததாக தாய் உள்பட இருவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

நீலகிரி: நீலகிரி மாவட்டம், குன்னூர் பகுதியில் 40 வயதான பெண் ஒருவர் வசித்து வருகிறார். இவருக்கு ஏற்கனவே இரண்டு திருமணம் ஆகியதில் இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். ஆனால், கருத்து வேறுபாடு காரணமாக இரண்டு கணவர்களையும் அப்பெண் பிரிந்துள்ளார்.

இதனையடுத்து, மூன்றாவதாக ஒருவரை திருமணம் செய்துள்ளார். தொடர்ந்து, இவர்கள் இருவரும் அதே பகுதியில் கூலி வேலைக்குச் சென்று வருகின்றனர். மேலும், இந்தப் பெண்ணுக்கு 8ஆம் வகுப்பு படிக்கும் ஒரு 13 வயது மகள் உள்ளார். இந்த நிலையில், இந்தச் சிறுமி கடந்த பிப்ரவரி 25ஆம் தேதி வீட்டில் தனியாக இருந்துள்ளார்.

அப்போது, வளர்ப்புத் தந்தையான மூன்றாவது கணவர், சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது. அது மட்டுமல்லாமல், இதனை வெளியே சொல்லக்கூடாது என்றும் அவர் சிறுமியை மிரட்டியுள்ளார். எனவே, தனது தாய் வீட்டிற்கு வந்ததும் நடந்த விவரங்களைக் கூறி சிறுமி கதறி அழுதுள்ளார்.

ஆனால் இதனைக் கேட்ட தாய், இது குறித்து வெளியே சொல்ல வேண்டாம் எனக் கூறியதால் அதிர்ச்சி அடைந்துள்ளார். எனவே, அந்த சிறுமி தன் பள்ளி ஆசிரியர் மூலமாக 1098 என்ற குழந்தைகள் நல உதவி எண்ணுக்கு தொடர்பு கொண்டு புகார் அளித்துள்ளார்.

இதையும் படிங்க: நடிகர் சிவாஜி கணேசனின் வீட்டை ஜப்தி செய்ய ஐகோர்ட் உத்தரவு – உண்மையென்ன?

இதன் பேரில், குழந்தைகள் நல அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து, குன்னூர் அனைத்து மகளிர் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து, சிறுமியின் வளர்ப்பு தந்தை மற்றும் தாயார் இருவரையும் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

Hariharasudhan R

Recent Posts

சமந்தா செய்த காரியம்; சுதா கொங்கரா மனதில் ஏற்பட்ட சோகம்! அடப்பாவமே

டாப் நடிகை தென்னிந்தியாவின் டாப் நடிகையாக சமீப காலமாக வலம் வருகிறார் சமந்தா. தற்போது தெலுங்கில் “மா இன்டி பங்காரம்”…

4 minutes ago

பிரபலத்தின் மகனுடன் திருமணம்… சில்க் ஸ்மிதா குறித்து நடன இயக்குநர் ஓபன்!

சிலிக் ஸ்மிதா என்று சொன்னால் இளைஞர்களின் நாடி நரம்பெல்லாம் சிலிர்த்துவிடும். பழகுவதற்கு இனிமையா நபர் என பிரபலங்கள் போற்றப்படும் சிலிக்…

10 minutes ago

Chair-அ கீழ வைடா டேய்- விஜய் மீட்டிங்கில் கொந்தளித்து கத்திய புஸ்ஸி ஆனந்த்! வைரல் வீடியோ

தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…

2 days ago

சாதி, மதம் பார்த்து தலைவர்களை தேர்வு செய்யக்கூடாது : திருச்சி எம்பி துரை வைகோ பரபரப்பு பேச்சு!

மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…

2 days ago

இயக்குநர் பாலா பேச்சை கேட்டு ஏமாந்துட்டேன்.. சினிமாவில் இருந்து விலகுகிறேன் : இளம் நடிகர் ஆதங்கம்!

இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…

2 days ago

ராசி முக்கியம் பிகிலு? மூக்குத்தி அம்மன் 2 படத்தில் சுந்தர் சி பெயர் வந்ததுக்கு இப்படி ஒரு காரணமா?

சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…

2 days ago

This website uses cookies.