தமிழகம்

அடுத்தடுத்து மாயமான இளைஞர்கள் கொன்று புதைப்பு.. வெளியான பகீர் தகவல்!

கடலூரில் மாயமான இரண்டு இளைஞர்களை சக நண்பர்களே அடித்துக் கொன்று புதைத்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

கடலூர்: கடலூர் மாவட்டம், எம்.புதூர் மற்றும் டி.புதூர் ஆகிய கிராமங்களைச் சேர்ந்தவர்கள் சரண்ராஜ் மற்றும் அப்புராஜ். இந்த இளைஞர்கள் இருவரும், கடந்த மாதம் இறுதியில் காணாமல் போனதாக, அவர்களது பெற்றோர் திருப்பாதிரிப்புலியூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

இந்தப் புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில், இளைஞர்கள் இரண்டு பேர் காணாமல் போன விவகாரத்தில், அவர்களது நண்பர்களுக்கு தொடர்பு இருப்பதாக போலீசாருக்கு தெரிய வந்துள்ளது. இதன் பேரில், காணாமல் போன இளைஞர்களின் நண்பர்கள் ஐந்து பேரிடம் போலீசார் கிடுக்குப்பிடி விசாரணை நடத்தி உள்ளனர்.

இந்த விசாரணையில், அப்புராஜ் மற்றும் சரண்ராஜ் ஆகிய இருவரையும் கொன்று புதைத்தது பெரிய வந்துள்ளது. அது மட்டுமல்லாமல், நெய்வேலி என்எல்சி அருகே உள்ள பூமங்கலம் என்ற பகுதியில் இருவரது உடல்களையும் புதைத்ததாக நண்பர்கள் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: கையிலும் காலிலும் விலங்கா..? நிர்வாகிகள் விலகல்.. சீமான் காட்டமான பதில்!

இதனையடுத்து, கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் தலைமையில் சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார், அங்கு புதைக்கப்பட்ட இருவரது உடல்களையும் தோண்டி எடுத்தனர். மேலும், கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Hariharasudhan R

Recent Posts

அதிமுகவை முந்தும் தவெக.. கூட்டணி கட்டாயத்தில் இரட்டை இலை? பரபரப்பு சர்வே!

சி வோட்டர் நடத்திய கருத்துக்கணிப்பில் விஜய், 18 சதவீத வாக்குகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது தமிழக அரசியலில் கவனம் பெற்றுள்ளது.…

53 minutes ago

மட்டம் தட்டிய பத்திரிகையாளர்..கொந்தளித்த CSK பயிற்சியாளர்..என்ன நடந்தது.?

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் பத்திரிக்கையாளர் சந்திப்பில் ஏற்பட்ட ஒரு கேள்வியின் காரணமாக கடும்…

59 minutes ago

நிமிடத்திற்கு ஒரு கோடியா..ஐபிஎல் விட அதிக சம்பளம் வாங்கிய டேவிட் வார்னர்.!

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் தனது சினிமா அறிமுகத்திலேயே அவர் வாங்கி இருக்கும் சம்பளம் ரசிகர்களை ஆச்சரியப்படுத்தி உள்ளது.தெலுங்கு…

2 hours ago

விரைவில் இபிஎஸ் – அண்ணாமலை சந்திப்பு? மத்தியில் ஒலித்த குரல்.. பரபரக்கும் அரசியல் களம்!

அதிமுக உடனான கூட்டணி குறித்த பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும், சரியான நேரம் வரும்போது, அதை தெரியப்படுத்துவோம் என்றும் அமித்ஷா கூறியுள்ளார்.…

3 hours ago

ஊரு விட்டு ஊரு வந்து பெண்ணை தீக்கிரையாக்கிய கொடூரம்.. தூத்துக்குடியில் பரபரப்பு!

தூத்துக்குடி அருகே காதலை கைவிட்டுச் சென்ற இளம்பெண்ணை தீக்கிரையாக்கி கொன்ற இளைஞர் உள்பட இருவரை போலீசார் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி:…

4 hours ago

தோனியை நீக்குங்க..படு மோசம் CSK ரசிகர்கள்..இப்படியெல்லாமா பண்ணுவாங்க.!

தோனி களமிறங்குவாரா? ரசிகர்கள் எதிர்பார்ப்பு.! ஐபிஎல் 2025 சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள்…

4 hours ago

This website uses cookies.