தர்மபுரி ; தர்மபுரியைச் சேர்ந்த காவலர் ஒருவர் அரசின் 7.5 இடஒதுக்கீட்டை பயன்படுத்தி அவரது மருத்துவராகும் கனவு நினைவாகியுள்ளது.
பென்னாகரம் அருகே உள்ள முதுகம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த மாணிக்கம் – இன்பவள்ளி எனும் விவசாயக் கூலித் தொழிலாளிகளின் மகன் சிவராஜ். இவர் கடந்த 2016ம் ஆண்டு பென்னாகரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 12ம் வகுப்பில் 915 மதிப்பெண்கள் பெற்றார். மருத்துவராக வேண்டும் என்னும் ஆசை இருந்தும், தனது மதிப்பெண்கள் அதற்கு தடையாக இருந்தது.
இதையடுத்து, பிஎஸ்சி படித்து முடித்த சிவராஜ், தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் நடத்திய தேர்வில் வெற்றி பெற்று, ஆவடி பட்டாலியனில் 3 ஆண்டுகளாக காவலராக பணியாற்றி வருகிறார்.
இந்த நிலையில், மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு தமிழக அரசு கொண்டு வந்த 7.5 % இடஒதுக்கீட்டை பயன்படுத்தி மீண்டும் மருத்துவராகும் ஆசை சிவராஜுக்கு எழுந்தது. இதையடுத்து, வறுமையின் சூழலிலும், போலீஸ் வேலைக்கு மத்தியிலும், நீட் தேர்வுக்கு ஆயத்தமானார்.
தனியார் கோச்சிங் சென்டருக்கு சென்று நீட் தேர்வுக்கு ஆயத்தமாகும் நிலை இல்லாததால், தனது நண்பர்கள் கொடுத்து உதவிய புத்தகங்களின் மூலம் நீட் தேர்வுக்கு தயாரானார். கடந்த ஆண்டு நடந்த நீட் தேர்வில் பங்கேற்கு 290 மதிப்பெண்கள் மட்டுமே பெற்ற சிவராஜ், தனது விடாமுயற்சியை கைவிடாமல் இந்த முறையும் தேர்வு எழுதினார். இதன்மூலம், 400 மதிப்பெண்களை பெற்று அசத்தினார்.
இந்த நிலையில், அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5% இடஒதுக்கீட்டில் விண்ணப்பித்திருந்த சிவராஜுக்க மருத்துவக் கல்லூரியில் நடந்த கலந்தாய்வில் கிருஷ்ணகிரி மாவட்ட அரசு மருத்துவ கல்லூரியில் படிப்பதற்கான இடம் கிடைத்துள்ளது.
கனவை தொலைத்து கிடைத்த வேலையை செய்த போதும், விடாப்பிடியாக தனது கனவை துரத்திச் சென்று மருத்துவராகும் காவலர் சிவராஜ் அனைத்து இளைஞர்களுக்கும் முன்னுதாரணம் ஆவார்.
நடக்குமா? நடக்காதா? தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் சிலம்பரசன் நடிப்பதாக இருக்கும் திரைப்படத்தை முதலில் கமல்ஹாசன் தயாரிப்பதாக இருந்தது. ஆனால் ஒரு…
கறாரான இயக்குனர் இயக்குனர் பாலா மிகவும் கறாரான இயக்குனர் எனவும் அவர் நடிகர்களை அடித்து வேலை வாங்குவார் எனவும் ஒரு…
தமிழ்நாட்டில் அடுத்த வருடம் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. ஒரு வருடம் இருக்கும் நிலையில், எதிர்க்கட்சிகள் தேர்தலை சந்திக்க இப்போதே…
கியூட் நடிகை நஸ்ரியா 90ஸ் கிட்களின் கியூட் நடிகையாக வலம் வந்தவர்.“நேரம்” திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களிடையே இவர்…
உலக நாயகன் உலக நாயகனாக வலம் வந்த கமல்ஹாசன் இந்திய சினிமாவிற்கே ஒரு நடிப்பு பல்கலைக்கழகமாக திகழ்ந்தவர். 1980களில் சாக்லேட்…
ஆந்திர மாநிலம், சித்தூர் மசூதி மிட்டாவை சேர்ந்தவர் யாஸ்மின்பானு (23). பூதலப்பட்டு பகுதியை சேர்ந்தவர் சாய்தேஜ் (25). இவர்கள் இருவரும்…
This website uses cookies.