தூத்துக்குடி மாவட்டம் சூரங்குடி காவல் நிலையத்தில் விசாரணைக்கு சென்றவர் மீது உதவி ஆய்வாளர் தாக்குதல் நடத்தியதாக புகார் எழுந்துள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள எம் சண்முகபுரம் கிராமத்தைச் சேர்ந்த ஜெகநாதன் என்பவருக்கும், சூரங்குடி கிராமத்தைச் சேர்ந்த அழகு முருகேசன் என்பவருக்கும் நிலப் பிரச்சனை இருந்து வந்தது. இது தொடர்பாக அளிக்கப்பட்ட புகார் மீதான விசாரணை சூரங்குடி காவல் நிலைய உதவி ஆய்வாளர் சுந்தரம் தலைமையில் சூரங்குடி காவல் நிலையத்தில் நேற்று நடைபெற்றது.
விசாரணைக்காக அழகு முருகன் உடன் அழகு முருகனின் சகோதரர் ராஜகனி என்பவரும் விசாரணைக்கு வந்தார். அப்போது, காவல் உதவி ஆய்வாளர் சுந்தரம் மற்றும் ராஜகனி என்பவருக்கும் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டதாகவும், இதனால் ஆத்திரமடைந்த காவல் உதவி ஆய்வாளர் சுந்தரம் ராஜகனியை தள்ளி விட்டு தாக்கியதாகவும் கூறப்படுகிறது. இதில் ராஜகனி காயம் அடைந்து தற்போது தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுகுறித்து விளாத்திகுளம் டிஎஸ்பி ஜெயச்சந்திரன் தலைமையில் விசாரணை நடைபெற்று வருகிறது.
பிரதமர் மோடியை தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா திடீரென புகழ்ந்துள்ளது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. சமூக வலைதளம் ஒன்றுக்கு பிரமேலதா…
சர்ச்சையை கிளப்பிய வீடியோ “சிறகடிக்க ஆசை” என்ற பிரபலமான டிவி தொடரில் வித்யா என்ற கதாபாத்திரத்தின் மூலம் ரசிகர்களிடையே பிரபலமாக…
நடிகை சமந்தாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட நடிகர் நாகசைதன்யா பின்னாளில் பிரிந்தனர். அதற்கு பல காரணங்கள் சொல்லப்பட்டாலும், நாகர்ஜூனாவின்…
துருவ் விக்ரம் - அனுபமா ஜோடி… மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் “பைசன்” என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படம்…
திமுக கூட்டணியில் அங்கம் வகித்து வருகிறது மக்கள நீதி மையம். இக்கட்சியின் தலைவராக இருப்பவர் நடிகர் கமல்ஹாசன். கடந்த மக்களவை…
கோவை மாவட்டம் வால்பாறை அருகே கேரளா மாநிலம் மளுக்கப்பாறை எஸ்டேட் பகுதிக்கு அருகேயுள்ள அரிச்சல்பட்டிஎன்ற ஆதிவாசி கிராமத்தை சேர்ந்த தம்பான்…
This website uses cookies.