புதுச்சேரி புதுச்சேரியில் 25 லடசம் ரூபாய் மதிப்பிளான 14 விலை உயர்ந்த இருசக்கர வாகனங்களை குறிவைத்து திருடிய தமிழகத்தை சேர்ந்த 3 வாலிபர்களை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
புதுச்சேரி நகரப்பகுதியில் சமீப காலமாக விலை உயர்ந்த இரு சக்கர வாகனங்கள் திருடு போவதாக தொடர் புகார்கள் வந்ததை அடுத்து போலீசார் தீவிர வாகன சோதனையிலும் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் இன்று அதிகாலை கனகசெட்டிகுளம் பகுதியில் காலாப்பட்டு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தபோது அவ்வழியாக ஒரே இருசக்கர வாகனத்தில் வந்த 3 பேரை போலீசார் நிறுத்தி விசாரணை நடத்தினர். அதில் அவர்கள் ஓட்டி வந்தது திருடப்பட்ட வாகனம் என்பது தெரியவந்தது.
இதைதொடர்ந்து அவர்களை காவல்நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தியதில், அவர்கள் தமிழக பகுதியை சேர்ந்த விக்னேஷ்(20) , தீனா(22) மற்றும் பரத்(20) என்பதும், இவர்கள் புதுச்சேரியில் விலை உயர்ந்த இருசக்கர வாகனங்களை குறிவைத்து திருடிச்சென்று அதனை தமிழக பகுதிகளில் விற்பனை செய்துள்ளது தெரியவந்தது. இதனையடுத்து அவர்களிடம் இருந்து ரூ.25 லட்சம் மதிப்பிலான 14 விலை உயர்ந்து இரு சக்கர வாகனங்களை பறிமுதல் செய்த போலீசார் கைது செய்யப்பட்ட மூவரையும் நீதிபதி வீட்டில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர்.
நடிகர் விஜய் முதலில் பத்திரிகையாளர்களைச் சந்திக்கட்டும், அதற்கு பிறகு நீங்கள் அவரிடம் கேள்வி கேளுங்கள் என நடிகர் விஷால் கூறியுள்ளார்.…
'சர்தார் 2' படப்பிடிப்பு நிறுத்தம் பொன்னியின் செல்வன் 2 படத்திற்கு பிறகு,நடிகர் கார்த்தி தொடர்ந்து பல புதிய திரைப்படங்களில் பணியாற்றி…
மொஹ்சின் கானின் சர்ச்சை கருத்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் மொஹ்சின் கான்,இந்திய அணியின் முன்னணி வீரர் விராட் கோலியை…
அரையிறுதியில் வருண் ஆடுவாரா சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் தற்போது இந்திய அணி அரையிறுதிக்கு தகுதிபெற்றுள்ள நிலையில் நாளை துபாயில் ஆஸ்திரேலியாவை…
சினிமாவில் அட்ஜெஸ்ட்மென்ட் புகார் ஒவ்வொரு நாளும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. கேரளா சினிமா உலகில் ஹேமா கமிட்டி கொடுத்த அறிக்கை…
தன்னைப் போன்று வெளியாகியுள்ள டீப்ஃபேக் வீடியோவை ரசிகர்கள் யாரும் பகிர வேண்டாம் என பாலிவுட் நடிகை வித்யா பாலன் கூறியுள்ளார்.…
This website uses cookies.