புதுச்சேரி புதுச்சேரியில் 25 லடசம் ரூபாய் மதிப்பிளான 14 விலை உயர்ந்த இருசக்கர வாகனங்களை குறிவைத்து திருடிய தமிழகத்தை சேர்ந்த 3 வாலிபர்களை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
புதுச்சேரி நகரப்பகுதியில் சமீப காலமாக விலை உயர்ந்த இரு சக்கர வாகனங்கள் திருடு போவதாக தொடர் புகார்கள் வந்ததை அடுத்து போலீசார் தீவிர வாகன சோதனையிலும் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் இன்று அதிகாலை கனகசெட்டிகுளம் பகுதியில் காலாப்பட்டு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தபோது அவ்வழியாக ஒரே இருசக்கர வாகனத்தில் வந்த 3 பேரை போலீசார் நிறுத்தி விசாரணை நடத்தினர். அதில் அவர்கள் ஓட்டி வந்தது திருடப்பட்ட வாகனம் என்பது தெரியவந்தது.
இதைதொடர்ந்து அவர்களை காவல்நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தியதில், அவர்கள் தமிழக பகுதியை சேர்ந்த விக்னேஷ்(20) , தீனா(22) மற்றும் பரத்(20) என்பதும், இவர்கள் புதுச்சேரியில் விலை உயர்ந்த இருசக்கர வாகனங்களை குறிவைத்து திருடிச்சென்று அதனை தமிழக பகுதிகளில் விற்பனை செய்துள்ளது தெரியவந்தது. இதனையடுத்து அவர்களிடம் இருந்து ரூ.25 லட்சம் மதிப்பிலான 14 விலை உயர்ந்து இரு சக்கர வாகனங்களை பறிமுதல் செய்த போலீசார் கைது செய்யப்பட்ட மூவரையும் நீதிபதி வீட்டில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர்.
படுதோல்வியடைந்த படம் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சல்மான் கான் நடிப்பில் உருவான “சிக்கந்தர்” திரைப்படம் கடந்த மார்ச் மாதம் 30 ஆம்…
நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை தமிழக அரசு அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டியுள்ளது. அனைத்து கட்சிகளும் பங்கேற்று ஒரு…
பிரம்மாண்ட படைப்பு அட்லீ அல்லு அர்ஜுனை வைத்து இயக்கவுள்ள திரைப்படத்தின் அதிகாரப்பூர்வை அறிவிப்பு வீடியோ ஒன்றைல் இன்று சன் பிக்சர்ஸ்…
தடை செய் தடை செய்… தமிழ் சினிமா உலகில் பல திரைப்படங்களுக்கு பல காரணங்களுக்காக தடை விதிக்க வேண்டும் என…
தமிழக அரசு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை ஆளுநர் கிடப்பில் போட்டு வந்தார். இதனால் தமிழக அரசு - ஆளுநருக்கும் மோதல்…
This website uses cookies.