கோவை மாநகர போலீசில் போலீசார் ரோந்து செல்வதற்காக பைக், ஸ்கூட்டர்கள், ஜீப்கள் உள்ளன. குற்ற சம்பவங்களை தடுப்பதற்காக இந்த வாகனங்களில் மாநகரில் இரவு முழுவதும் போலீசாா் ரோந்து சுற்றி வருகின்றனர்.
இந்நிலையில், தற்போது போலீசாருக்கு சிறிய தெருக்களில் கூட ஆட்டோவில் சென்று ரோந்து செல்ல வசதியாக புதிதாக நவீன வசதிகளுடன் கூடிய 2 பேட்டரி ஆட்டோக்கள் வாங்கப்பட்டு உள்ளன.
அதில் ஒன்று முழுவதும் மூடிய நிலையிலும், மற்றொன்று டிரைவர் அமரும் இடம் மட்டும் மூடிய நிலையில் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த நவீன பேட்டரி ஆட்டோவில் போக்குவரத்தை ஒழுங்கு படுத்தவும் முடியும்.
அதில் ஒலிப்பெருக்கி, சைரன்கள் வைக்கப்பட்டுள்ளன. மேலும் அந்த ஆட்டோக்களில் உங்கள் பாதுகாப்பே எங்கள் குறிக்கோள், அவசர போலீஸ் எண், பெண்கள் புகார் தெரிவிக்கும் எண், மாணவர்கள், குழந்தைகள் புகார் எண்கள் தெரிவிக்கப்பட்டு உள்ளன.
இதுகுறித்த அதிகாரிகள் கூறுகையில், ” போலீசாரின் ரோந்து பணிக்காக வாங்கப்பட்ட இந்த பேட்டரி ஆட்டோக்கள் ஒரு முறை சார்ஜ் செய்தால் 75 கி.மீட்டர் வரை இயக்க முடியும். சிறிய தெருக்களில் கூட இரவு நேரத்தில் ரோந்து சென்று குற்றங்களை தடுக்க உதவியாக இருக்கும்”. என்றனர்.
தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…
மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…
This website uses cookies.