ராணிப்பேட்டையில் போலீஸ் ஸ்டேஷன் மீது பெட்ரோல் குண்டு வீசிய சம்பவ விசாரணையில், போலீசார் ஒருவரை சுட்டுப் பிடித்துள்ளனர்.
ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டத்தின் சிப்காட் காவல் நிலையம் மீது இன்று அதிகாலை நேரத்தில், மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசினர். அப்போது, காவல் நிலையத்தின் நுழைவாயில் இரும்பு கேட் மூடப்பட்டிருந்ததால், பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
இச்சம்பவம் பரபரப்புக்கு உள்ளாகி, எதிர்கட்சிகளின் கடும் விமர்சனத்தைச் சந்தித்த நிலையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விவேகானந்த சுக்லா உத்தரவின் பேரில் இரண்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டன. இந்த தனிப்படை போலீசார், காவல் மர்ம நபர்கள் குறித்து தீவிரமாக விசாரித்து வந்தனர்.
இந்த விசாரணையில், அந்தப் பகுதியைச் சேர்ந்த 10 நபர்களை விசாரணை வளையத்திற்குள் கொண்டு வந்த தனிப்படை போலீசார், அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தினர். மேலும், சிப்காட் காவல் நிலைய உதவி ஆய்வாளர் முத்தீஸ்வரன் தலைமையிலான போலீசாரும் விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில், காவேரிப்பாக்கம் அருகே போலீசார் தனிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது, ஹரி என்பவரை போலீசார் பிடிக்க முற்பட்டுள்ளனர். ஆனால் அவர், காவல் உதவி ஆய்வாளர் முத்தீஸ்வரனை கத்தியால் வெட்டிவிட்டு தப்பி ஓடியுள்ளார்.
இதையும் படிங்க: விஜய பார்க்கனும்’.. 4வது மாடியில் நின்று மிரட்டல்.. காவலர் காயம்.. சென்னையில் பரபரப்பு!
இதனையடுத்து, தப்பி ஓடிய ஹரியை போலீசார் கால் முட்டியில் சுட்டுப் பிடித்தனர். தொடர்ந்து, ஹரியால் தாக்கப்பட்ட காவல் உதவி ஆய்வாளர் முத்தீஸ்வரனுக்கும், காலில் துப்பாக்கிக் குண்டு பாய்ந்து காயம் அடைந்த ஹரி ஆகிய இருவருக்கும் வாலாஜா அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெறும் நிலையில், தவெக தலைவர் விஜய் தீவிரமாக களப்பணியாற்றி வருகிறார். அண்மையில் தவெக…
ஃபேவரைட் நடிகை தற்போதைய இளைஞர்களை கவரும் நடிகைகளில் முன்னணி வரிசையில் நிற்பவர் மாளவிகா மோகனன். இவர் மலையாளத்தில் முன்னணி நடிகையாக…
விஜய் டிவியை ஹாட்ஸ்டார் ஜியோவுடன் இணைந்தது எல்லோரும் அறிந்த விஷயம். ஜியோ ஹாட்ஸ்டராக ஸ்டீரிமிங் ஆகி வருகிறது. கலர்ஸ் நிறுவனத்துக்கு…
டாஸ்மாக் கடைகளில் பாட்டிலுக்கு 10 ரூபாய் கூடுதலாக வசூலிப்பதன் மூலம் ஆண்டுக்கு 5 ஆயிரத்து 400 கோடி ரூபாயை வாரி…
தென்னிந்தியாவின் டாப் நடிகை நடிகை சமந்தா தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் மிகவும் பிசியான நடிகையாக வலம் வருகிறார். இவரது…
கோவை மாவட்டம் சூலூர் அருகே மாட்டு கொட்டகையை காலி செய்வதில் ஏற்பட்ட தகராறில், இளம்பெண்ணை ராஜேந்திரன் என்பவர் அரிவாளால் வெட்டி…
This website uses cookies.