உத்தரப் பிரதேசத்தில் உள்ள ஒரு காவல் நிலையத்தில் எஸ்ஐ, பெண் சப் இன்ஸ்பெக்டருக்கு ஆபாச வீடியோ காண்பித்து பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டுள்ளார்.
லக்னோ: உத்தரப் பிரதேச மாநிலத்தின், மதுரா மாவட்டத்தில் மகோரா காவல் நிலையம் அமைந்துள்ளது. இங்கு சப் இன்ஸ்பெக்டராக மோகித் ராணா என்பவர் பணியாற்றி வருகிறார். இவர், அதே காவல் நிலையத்தில் பெண் சப் இன்ஸ்பெக்டராக பணிபுரியும் ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றதாக கூறப்படுகிறது.
அதாவது, சம்பவம் நடந்ததாக கூறப்படும் நாளில் இருவரும் பணியில் இருந்த நிலையில், மோகித் ராணா மது போதையில் இருந்துள்ளார். அப்போது, அந்தப் பெண் சப் இன்ஸ்பெக்டரின் அறைக்குச் சென்று அவரிடம் பாலியல் ரீதியாக அத்துமீற முயன்றுள்ளார். பின்னர், இது தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் சப் இன்ஸ்பெக்டர் உயர் அதிகாரியிடம் புகார் அளித்துள்ளார்.
இதனையடுத்து, இது குறித்து விசாரணை நடத்தியதில், மோகித் ராணா மீதான குற்றம் உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், தன்னை பாலியல் வன்கொடுமை செய்ய வருவதற்கு முன்பாக ஆபாசப் படங்களைக் காண்பித்து, அதை பார்க்குமாறு அந்த சப் இன்ஸ்பெக்டர் கட்டாயப்படுத்தியதாகவும் பாதிக்கப்பட்ட பெண் சப் இன்ஸ்பெக்டர் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: கனிமொழி கேள்விக்கு திமுக பதில் கூற முடியுமா? தடம் மாறிய தமிழிசை!
இந்த நிலையில், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விசாரணைக்கு உத்தரவிட்ட நிலையில், தன் செல்போனில் இருந்த ஆபாச வீடியோக்களை மோகித் அழித்ததோடு, தன்னுடைய ஸ்மார்ட் வாட்சையும் கழட்டி வெளியே வீசியுள்ளதும் தெரிய வந்துள்ளது. மேலும், அவரை போலீசார் தற்போது கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
சேலம், நாராயண நகர் முதல் குறுக்கு தெருவை சேர்ந்தவர் மாதவராஜ்(75). இவரது மனைவி பிரேமா(67). கணவன் மனைவி மட்டும் வீட்டில்…
டிராகன் திரைப்பட கதாநாயகி கயாது லோஹர் ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டத்தில் புகழ்பெற்ற வாயுலிங்கமான ஸ்ரீகாளஹஸ்திஸ்வரர், ஞானபிரசுன்னாம்பிகை தாயாரை தரிசனம்…
பிரியங்கா வசி திருமணம் குறித்து பிரபல பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் பல விஷயங்களை பேசியுள்ளார். மெட்ரோ மெயில் என்ற சேனலுக்கு…
தமிழக அரசின் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் 261 பயனாளிகளுக்கு வீடு கட்டிக் கொள்வதற்கு அரசு ஆணையினை உயர்…
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், தனித்து தான் வரும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவோம் என…
தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் ஜீடிமெட்லா பகுதியில் உள்ளகஜுலராமரம், பாலாஜி லேஅவுட்டில் சஹஸ்ரா மகேஷ் ஹைட்ஸ் எனும் அடுக்குமாடி குடியிருப்பில் வெங்கடேஸ்வர்…
This website uses cookies.