Categories: தமிழகம்

கைது செய்ய போன இடத்தில் கடி வாங்கிய போலீஸ் எஸ்ஐ : கடித்தது நாலு கால் நாய் அல்ல.. அரசு மருத்துவமனையில் அனுமதி…!!

பல்லடத்தில் கைது செய்ய போன இடத்தில் கடி வாங்கிய எஸ்.ஐ. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அறிவொளி நகர் பகுதியில் வசித்து வருபவர் ராஜாராம் என்ற பாபா பஹ்ரூதீன். இவருக்கு நவ்பியா பர்வின் என்கிற மனைவியும் கபீர் அகமது என்கிற ஆண் மற்றும் தவுளத் பேகம் என்கிற பெண் குழந்தையும் உள்ளனர்.

இந்நிலையில் பாபா பஹ்ரூதீனுக்கும் மனைவி நவ்பியா பர்வின் இருவருக்கும் கருத்து வேறுபாட்டால் சில ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.

இதனிடையே மனைவி நவ்பியா பர்வின் மாணிக்காபுரம் சாலையில் உள்ள தனியார் பனியன் நிறுவனத்தில் வேலை பார்த்து வருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ராஜாராம் என்ற பாபா பஹ்ரூதீன் மனைவி வேலை செய்யும் பனியன் நிறுவனத்திற்கு சென்று மேலாளர் சஞ்சய் குமாரிடம் தகாத வார்த்தைகளால் திட்டி தகராறில் ஈடுபட்டு கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து பனியன் நிறுவன மேலாளர் பல்லடம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரை பெற்ற பல்லடம் போலீசார் பாபா பஹ்ரூதீன் மீது வழக்கு பதிவு செய்து தேடிவந்தனர்.

இந்நிலையில் பாபா பஹ்ரூதீன் பல்லடத்தை அடுத்த ஆறுமுத்தாம் பாளையத்தில் இருப்பதாக தகவல் தெரிந்ததை அடுத்து அவரை கைது செய்ய பல்லடம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் கார்த்திகேயன் தலைமையில் போலீசார் அங்கு சென்றுள்ளனர்.

போலீசார் வருவதை அறிந்து ஆறுமுத்தாம்பாளையம்ஊராட்சி அலுவலகத்திற்கு சென்று அங்குள்ள அரசு அதிகாரிகள் மற்றும் ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

இதனை அடுத்து பல்லடம் காவல் உதவி ஆய்வாளர் கார்த்திகேயன் கைது நடவடிக்கையில் ஈடுபடும் போது திடீரென யாரும் எதிர்பாரத விதமாக பாபா பஹ்ரூதீன் உதவி ஆய்வாளர் கையை பிடித்து கடித்துள்ளார்.

இதனால் உதவி ஆய்வாளர் கையில் காயம் ஏற்பட்டது. இதனை அடுத்து பல்லடம் காவல் ஆய்வாளர் மணிகண்டன் தலைமையில் போலீசார் விரைந்து வந்து பாபா பஹ்ரூதீனை சுற்றி வளைத்து கைது செய்து விசாரணைக்கு அழைத்துச்சென்றனர்.

மேலும் கடித்ததால் பலத்த காயம் ஏற்பட்ட காவல் உதவி ஆய்வாளர் கார்த்திகேயன் சிகிச்சைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

கைது நடவடிக்கையில் ஈடுபட வந்த உதவி ஆய்வாளரின் கையை குற்றவாளி கடுமையாக கடித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

நீங்க வேற மாதிரி சார்…நாட்டின் உயரிய விருதை பெற்றுக்கொண்டார் அஜித்!

நினைத்ததை முடிப்பவர் அஜித்குமார் தமிழ் சினிமாவில் ஒரு டாப் நடிகராக வலம் வந்தாலும் அவருக்கு பைக் ஓட்டுவதிலும் கார் பந்தயங்களிலும்…

3 hours ago

பிளாக்கில் டிக்கெட் விற்பவர்களுக்கு முதல்வர் கனவு.. விஜய்யை மறைமுமாக சாடிய அமைச்சர்!

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் இந்தி திணிப்பு , நிதி பகிர்வில் பாரபட்சம் , தொகுதி மறுசீரமைப்பில் அநீதி போன்றவற்றை…

3 hours ago

கஞ்சா வைத்திருந்த பிரபல சினிமா இயக்குநர்கள்..வளைத்து வைளத்து கைது செய்யும் போலீசார்!

போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் எக்ஸைஸ் அதிகாரிகள் கொச்சியில் கோஷ்ரீ பாலம் அருகே நடத்திய சோதனையில் மலையாள சினிமா…

5 hours ago

வெற்றிமாறன் மேல் உள்ள பயத்தால் சூர்யா எடுத்த திடீர் முடிவு? அப்போ வாடிவாசலோட நிலைமை?

இவ்வளவு இழுபறியா? கடந்த 2022 ஆம் ஆண்டு முதலே வெற்றிமாறனின் “வாடிவாசல்” திரைப்படத்தை குறித்தான பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன. மூன்று…

5 hours ago

அடுத்தவ புருஷனை பங்கு போட்டது தப்புதான்.. ஆனா பாலு மகேந்திரா எனக்கு எல்லாமே கொடுத்தாரு ; நடிகை ஓபன்!

நடிகை மௌனிகா, சில படங்களில் நடித்த அவர் தற்போது சீரியல்களில் நடித்து வருகிறார். அவர் மறைந்த இயக்குநர் பாலுமகேந்திராவின் இரண்டாவது…

6 hours ago

ஜெயிலரை ஓவர் டேக் செய்யப்போகும் குட்  பேட் அக்லி! விரைவில் ஒரு தரமான சம்பவம்?

தாறுமாறு கலெக்சன் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமாரின் நடிப்பில் ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியான “குட் பேட் அக்லி”…

6 hours ago

This website uses cookies.