கோவை : மேட்டுப்பாளையத்தில் காவலர் ஒருவருக்கு உணவு உண்ணும் போது தொண்டையில் உணவு குழாய் அடைத்து உயிருக்கு போராடிய நிலையில் துரிதமாக செயல்பட்டு காவல் உதவி ஆய்வாளர் ஒருவர் அவரை காப்பாற்றினார்
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் நகராட்சி அலுவலகத்தில் கடந்த 21ஆம் தேதி கவுன்சிலர்கள் மன்ற கூட்ட அரங்கில் உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வந்தனர். அதற்காக போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்
மதிய நேரம் என்பதால் காவலர்களுக்கு உணவு வழங்கப்பட்டது. அந்த உணவை காவலர் அபுதாகிர் சாப்பிடும் போது அவர் உணவு குழாய் பகுதியான தொண்டையில் திடீரென உணவு சிக்கிக்கொண்டது.
இதனால் என்ன செய்வதென தெரியாமல் உயிருக்கு போராடிய நிலையில் அங்கு இருந்த மேட்டுப்பாளையம் காவல் உதவி ஆய்வாளர் தாமோதரன் அவர்களிடம் ஓடி சென்று காப்பாற்று மாறு செய்வதை காட்டியுள்ளார்.
உடனடியாக சுதாரித்த உதவி ஆய்வாளர் தாமோதரன் அவரை தூக்கி குளுக்கி முதலுதவி செய்து அவரின் உயிரைக் காப்பாற்றியுள்ளார். இந்தச் சம்பவம் மேட்டுப்பாளையம் நகராட்சி அலுவலகத்தில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது
தற்போது அந்த காட்சியை வெளியிட்ட நகராட்சி அதிகாரிகள் துரிதமாக செயல்பட்ட உதவி ஆய்வாளர் தாமோதரன் அவர்களை பாராட்டியுள்ளனர். அது குறித்து வீடியோ சமூக வலைதளங்களிலும் வெளியாகி நிலையில் காவல் உதவி ஆய்வாளரை பொதுமக்களும் பாராட்டி வருகின்றனர்.
தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…
மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…
This website uses cookies.