தமிழகம்

என் கூட அட்ஜெஸ்ட்மென்ட் பண்ணு.. உன் கள்ளக்காதலனை ரிலீஸ் பண்றேன்.. பெண்ணை மிரட்டி உல்லாசமாக இருந்த காவலர்!

திருவள்ளூர் அருகே போலீஸாரால் கைது செய்யப்பட்ட கள்ளகாதலனை மீட்பதற்காக காவல் நிலையம் வந்த இளம் பெண்ணை மிரட்டி மூன்று மாதங்களாக உல்லாசம் அனுபவித்து வந்த வெள்ளவேடு காவல் நிலைய தலைமை காவலரை ஆயுதப்படைக்கு மாற்றி உள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் திருமழிசை அடுத்த பிராயம்பத்தை சேர்ந்தவர் கார்த்திக் வயது 31, த /பெ சண்முகம் கார் ஓட்டுனரான இவர் மீது பல்வேறு வழக்குகள் போலீஸ் நிலையத்தில் உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் கார்த்திக் ஏற்கனவே திருமணம் ஆன பெண்ணை அழைத்து வந்து காட்டுப்பாக்கம் செந்தூர்புரத்தில் தனியாக அறை எடுத்து 3 வருடங்களாக தங்க வைத்து உல்லாசமாக இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

கார்த்திக் வழிப்பறிக் கொள்ளையில் ஈடுபட்ட வழக்கு ஒன்றில் வெள்ளவேடு போலீசார் கைது செய்ததால் இந்தப் பெண் வெள்ளவேடு காவல் நிலையத்திற்கு கார்த்திகை மீட்பதற்காக வந்துள்ளார்.

அப்போது வெள்ளவேடு காவல்நிலையத்தில் குற்றப்பிரிவில் பணி புரியும் தலைமை காவலர் ஏசுதாஸ் என்பவர் அந்தப் பெண்ணிடம் உனது கள்ளக்காதலன் சீக்கிரமாக வெளியே வரவேண்டும் என்றால் அவர் மீது மேலும் வழக்கு பிரிவுகள் பதிவு செய்யாமல் இருப்பதற்கு தனக்கு நீ அட்ஜஸ்ட்மென்ட் செய்ய வேண்டும் எனக் கூறி மிரட்டியதாக கூறப்படுகிறது.

கள்ளக்காதலன் கார்த்திக்

இதனால் கார்த்திக் சிறையில் இருக்கும் வேலையில் தலைமை காவலர் ஏசுதாஸ் கள்ளக் காதலியுடன் அடிக்கடி உல்லாசம் அனுபவித்து வந்ததாக கூறப்படுகிறது.

கடந்த மூன்று மாதங்கள் சிறையிலிருந்து கார்த்திக் பிணையில் வெளியே வந்ததாக கூறப்படுகிறது.

கார்த்திக் பிணையில் வெளியே வந்த பின்னரும் கார்த்திக்கு தெரியாமல் அவர் வீட்டில் ஆள் இல்லாத நேரத்தில் தலைமை காவலர் அந்தப் பெண்ணிடம் சென்று உல்லாசம் ஈடுபட்டு வந்துள்ளார்.

மேலும் படிக்க: நர்சிங் கல்லூரி மாணவி காரில் கடத்தி சென்று கூட்டுப்பாலியல்.. ரயில் நிலையத்தில் நடந்த ஷாக்!

இந்நிலையில் கடந்த 4ஆம் தேதி இரவு காவலர் இயேசுதாஸ், கார்த்திக் இல்லாத நேரத்தில் கார்த்திக்கின் கள்ளக்காதலி இடம் உல்லாசம் அனுபவித்து வந்துள்ளார்.

ஒரு கட்டத்தில் கார்த்திக்கின் கள்ளக்காதலிக்கும் போலீசார் ஏசுதாஸ் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டு கள்ளக்காதலியை தலைமை காவலர் ஏசுதாஸ் தாக்கியதாக கூறப்படுகிறது.

வீடு புகுந்து போலீசார் இயேசுதாஸ் தன்னை தாக்கியதாக அவருடைய கள்ளக்காதலன் கார்த்திக்கிடம் அந்த பெண் செல்போன் மூலமாக பேசி வர வைத்துள்ளார்.

இதனால் அங்கு விரைந்து வந்த கார்த்திக் அங்கிருந்த தலைமை காவலர் இயேசுதாசை தாக்கியுள்ளார். காயமடைந்த இயேசுதாஸ் பூந்தமல்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளார்.

இந்நிலையில் கடந்த 21 ஆம் தேதி திருமழிசையில் உள்ள கார்த்தியின் வீட்டிற்கு அத்துமீறி நுழைந்த வெள்ளவேடு காவல்நிலைய காவலர்கள் இயேசுதாஸ், சரத், தாஸ் உள்ளிட்ட சுமார் 10 பேர் கொண்ட போலீசார் கார்த்தியை மறைவான ஓர் தனி இடத்திற்கு கூட்டி சென்று சரமாரி தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இதனால் பலத்த காயம் அடைந்த கார்த்தியை அங்கிருந்து பூவிருந்தவல்லி கூட்டி வந்து பூந்தமல்லி போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

காவலரை தாக்கியதாக கார்த்தி மீது வழக்கு பதிவு செய்த பூவிருந்தவல்லி போலீசார் பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர் செய்த நிலையில் நீதிபதியிடம் கார்த்திக் நடந்த சம்பவம் தெரிவிக்கவே கார்த்திக்கை பிணையில் நீதிபதி விடுவித்துள்ளார்.

மேலும் வெள்ளவேடு காவல் நிலைய தலைமை காவலர் ஏசுதாஸ் ஆவடி ஆயுதப்படை பிரிவுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

ஆனால் கார்த்திகை கடத்திச் சென்று தாக்கிய தலைமை காவலருக்கு உதவிக்கு வந்த 10 போலீசார் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் போலீசார்
பாதுகாத்து வைத்திருப்பதாகவும் அவர்கள் மீது நடவடிக்கை எடுத்திட வேண்டுமென பாதிக்கப்பட்ட கார்த்திக் கோரிக்கை விடுத்துள்ளார்.

சட்டத்தை காக்க வேண்டிய காவலர்களே சட்டத்துக்கு புறம்பாக நடந்திருப்பது இப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது…

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

Chair-அ கீழ வைடா டேய்- விஜய் மீட்டிங்கில் கொந்தளித்து கத்திய புஸ்ஸி ஆனந்த்! வைரல் வீடியோ

தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…

21 hours ago

சாதி, மதம் பார்த்து தலைவர்களை தேர்வு செய்யக்கூடாது : திருச்சி எம்பி துரை வைகோ பரபரப்பு பேச்சு!

மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…

21 hours ago

இயக்குநர் பாலா பேச்சை கேட்டு ஏமாந்துட்டேன்.. சினிமாவில் இருந்து விலகுகிறேன் : இளம் நடிகர் ஆதங்கம்!

இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…

22 hours ago

ராசி முக்கியம் பிகிலு? மூக்குத்தி அம்மன் 2 படத்தில் சுந்தர் சி பெயர் வந்ததுக்கு இப்படி ஒரு காரணமா?

சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…

22 hours ago

தவெகவை விட பலத்தை காட்ட வேண்டும்… பரபரப்பை கிளப்பிய அதிமுக மூத்த தலைவர்!

திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…

23 hours ago

என்ன இப்படி சண்டப்போட்டுக்குறாங்க- தக் லைஃப் படத்தில் இருந்து திடீரென லீக் ஆன காட்சி?

கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…

23 hours ago