Categories: தமிழகம்

40 ஆண்டுகளாக தமிழக மக்களை அரசியல் கட்சிகள் ஏமாற்றி வருகிறது : விழுப்புரம் நா.த.க வேட்பாளர் மு.களஞ்சியம் விமர்சனம்!

40 ஆண்டுகளாக தமிழக மக்களை அரசியல் கட்சிகள் ஏமாற்றி வருகிறது : விழுப்புரம் நா.த.க வேட்பாளர் மு.களஞ்சியம் விமர்சனம்!

விழுப்புரத்தில் நாம் தமிழர் கட்சியின் விழுப்புரம் லோக்சபா தொகுதி வேட்பாளர் அறிமுக கூட்டம் நடைபெற்றது. விழுப்புரம் தொகுதி வேட்பாளராக திரைப்பட இயக்குநர் மு.களஞ்சியம் அறிமுகம் செய்து வைக்கப்பட்டார்.

இதனை யடுத்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது: எங்கள் கட்சியின் கொள்கை, தத்துவத்துக்கு நெருக்கமாக அமைந்த கரும்பு விவசாயி சின்னத்தை திட்டமிட்டு பறித்துள்ளனர். எங்களுக்கு சின்னம் முக்கியமல்ல, சீமான் தான் அடையாளம்.

திட்டமிட்டு எங்கள் வளர்ச்சியை தடுக்கும் விதத்தில், சின்னத்தை பறித்தவர்களுக்கு, இந்த லோக்சபா தேர்தலில் மக்கள் பாடம் புகட்டுவர். பிற கட்சிகளை போல் நாங்கள் தேர்தலுக்காக கூட்டணி பேசவில்லை, செலவுக்கான தொகையை கேட்கவில்லை.

மக்களை நம்பி தனித்து போட்டியிடுகிறோம். எங்கள் வேட்பாளர்கள் அரசியல் பின்ணணியோ, பணக்காரர்களோ இல்லை. சாதாரண ஏழை, எளிய குடும்பத்தை சேர்ந்தவர்கள். நானும் கூலி தொழிலாளி குடும்பத்தை சேர்ந்தவன்.

சென்னையிலும், தென் மாவட்டங்களிலும் மழை வெள்ளத்தின்போது, ஆளும் கட்சி அமைச்சர்கள், எம்.பி., எம்.எல்ஏக்கள் போவில்லை. எதிர்கட்சி தரப்பினரும் போகவில்லை. சீமான் தான், 25 நாள்கள் மக்களுடன் இருந்து உதவிகளை செய்தார்.

நாம் தமிழர் கட்சி கூட்டத்துக்கு அதிகளவில் மக்கள் கூடுகின்றனர். பிற கட்சியை போல் பணம் கொடுத்து கூட்டம் சேர்க்கவில்லை. தமிழகத்தில் மூன்றாவது பெரிய கட்சியாக நாம் தமிழர் கட்சி வளர்ந்துள்ளது. அந்த இடத்தை பிடிக்க விரும்பினால், மக்களுக்காக இறங்கி பாடுபட வேண்டும், அதை விடுத்து சின்னத்தை பறிப்பது போன்ற செயல் சரியல்ல.

தமிழகத்தில் அரசியல் கட்சிகள் கூட்டணி வைத்து 40 ஆண்டுகாலமாக ஏமாற்றி வருகிறது. அவர்களிடமிருந்து மக்களை மீட்கவே நாங்கள் பணியாற்றுகிறோம். தனித்து நிற்பதால் மக்கள் மனதில் இடம் பிடிப்போம். இப்போது மூன்றாவது இடம், படிப்படியாக முதலிடத்தை பிடிக்க உழைக்கிறோம் என்றார்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

காதலரை பிரிந்தார் நடிகை தமன்னா.. இதுக்கும் அவருதான் காரணமா? இன்ஸ்டா பதிவால் பரபர!

20 வருடங்களாக முன்னணி நடிகையாக உள்ளார் நடிகை தமன்னா. வாய்ப்பு இல்லாமல் வாய்ப்பை உருவாக்கி வருகிறார். காரணம் ஒரு படத்திற்கு…

7 hours ago

பிரபல நடிகரின் மனைவியை உருகி உருகி காதலித்த ரகுவரன் : வெறுத்துப் போய் குடிக்கு அடிமையான அவலம்!

நடிகர் ரகுவரன் தமிழ் சினிமாவின் சிறந்த வில்லன் என பெயர் பெற்றவர், எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் கச்சிதமாக செய்து முடிப்பவர்.…

8 hours ago

படுக்கைக்கு அழைத்த நண்பர்கள்.. அஜித், விஜயுடன் நடித்த நடிகையின் பரிதாப நிலை!

உதவி கேட்டதால் படுக்கைக்கு நண்பர்களே அழைத்த அவலம் தமிழ் சினிமா நடிகைக்கு ஏற்பட்டுள்ளது. ஜெமினி படம் மூலம் தமிழ் சினிமாவில்…

9 hours ago

சித்தப்பா முதல் படுத்த படுக்கையாக உள்ள முதியவர் வரை.. 15 வயது சிறுமிக்கு கொடூரம்!

நீலகிரி, ஊட்டியில் 15 வயது சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த சித்தப்பா, உறவுக்கார அண்ணன் ஆகியோரை போலீசார் கைது…

9 hours ago

வசூலில் மிரட்டிய டிராகன் ஓடிடியில் ரிலீஸ்… தேதி அறிவிப்பு!

அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ஏஜிஎஸ் தயாரிப்பில் வெளியானது திரைப்படம் டிராகன். பிரதீப் ரங்கநாதன், காயடு லோகர், அனுபமா உட்பட பலர்…

9 hours ago

நாங்க எப்போ சொன்னோம்? நழுவிச் சென்ற பிரேமலதா.. அண்ணாமலை சொன்ன ‘நச்’

தேமுதிகவுக்கு ராஜ்ய சபா சீட் குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை என கூட்டணியில் உள்ள அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி…

10 hours ago

This website uses cookies.