கோவை ; பொள்ளாச்சி அருகே திப்பம்பட்டியில் அண்ணன் தலையில் கல்லை போட்டு கொலை செய்துவிட்டு தலைமறைவான தம்பியை போலீசார் தேடி வருகின்றனர்.
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள மூட்டாம்பாளையம் கிராமத்தை சேர்ந்த சேர்ந்தவர் அய்யாசாமி. இவரது மனைவி அம்சவேணி, இவர்களுக்கு ராமகிருஷ்ணன் (29), மோகன்ராஜ் (25) என்ற இரண்டு மகன்கள் உள்ளனர்.
இந்த நிலையில், ராமகிருஷ்ணன் அடிக்கடி தந்தையுடன் தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக கடந்த சில தினங்களுக்கு முன்பு அய்யாசாமி பொள்ளாச்சி அருகே உள்ள திப்பம்பட்டியில் உள்ள உறவினர் வீட்டில் தங்கியுள்ளார். இதனையடுத்து, தந்தையை சமாதானப்படுத்தி வீட்டுக்கு அழைத்து செல்வதற்காக இரண்டு மகன்களும் இன்று திப்பம்பட்டி உள்ள உறவினர் வீட்டிற்கு சென்று தந்தையை சமாதானப்படுத்தி வந்துள்ளனர்.
அப்போது, ராமகிருஷண்ணன், மோகன்ராஜ் இருவரும் திப்பம்பட்டி பகுதியில் சாலையோரத்தில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அந்த சமயம் இருவருக்கும் வாய் தகராறு ஏற்பட்டு அண்ணன் தலையில் கல்லை போட்டு கொலை செய்துவிட்டு, தம்பி மோகன்ராஜ் தப்பியோடியதாக கூறப்படுகிறது
பின்னர் இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த கோமங்கலம் காவல் நிலையம் போலீசார் ராமகிருஷ்ணன் உடலை மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் தலைமறைவான தம்பி மோகன்ராஜை போலீசார் தேடி வருகின்றனர்.
பட்டப் பகலில் சாலை ஓரத்தில் அண்ணன் தலையில் கல்லை போட்டு தம்பி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழகத்திற்கு அமித்ஷா வந்துள்ள நிலையில் அதிமுக - பாஜக கூட்டணியை உறுதி செய்துள்ளார். மேலும் தமிழக பாஜக தலைவராக உள்ள…
சூர்யா 45 ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா தற்போது தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதில் சூர்யாவுக்கு…
பேரழகி திரிஷா… ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள நிலையில்…
தமிழகத்தில் அடுத்த பாஜக தலைவர் யார் என்ற விவகாரம் சூடுபிடித்த நிலையில் இன்றுடன் அதற்கு ஓர் முற்றுப்புள்ளி வைத்தாவிட்டது. நேற்று…
இவ்வளவு இழுபறியா? 2020 ஆம் ஆண்டே வெற்றிமாறன் சூர்யாவை வைத்து ஒரு திரைப்படத்தை இயக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. மேலும் அத்திரைப்படம் “வாடிவாசல்”…
புதுக்கோட்டை மாநகராட்சிக்கு உட்பட்ட ஓட்ட குளத்தை சுமார் ஒன்பது புள்ளி அஞ்சு கோடி ரூபாய் மதிப்பில் தூர் வாரும் பணி…
This website uses cookies.