தமிழகம்

தமிழக மக்களுக்கு துரோகம் செய்த திமுக.. பொன்.ரா விளாசல்!

தமிழக மக்களுக்கு இதுமாதிரியான துரோகங்களை செய்துவிட்டு மும்மொழிக் கொள்கை பற்றி முதல்வர் பேசுவதாக பொ.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

கோயம்புத்தூர்: கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தின் கோப்ரட்டீவ் காலனி பகுதியில், பாஜக சார்பில் 2025 மத்திய பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. கோவை வடக்கு மாவட்டத் தலைவர் கரு.மாரிமுத்து தலைமையில் நடைபெற்ற இந்த பொதுக் கூட்டத்தில், மத்திய முன்னாள் இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

அப்போது பேசிய அவர், “தமிழகத்தில் காமராஜர் ஆட்சிக் காலத்தில் முதன் முதலாக 6,000 பள்ளிகள் திறக்கப்பட்டது. அதன் பின்னர் அவரது ஆட்சி முடியும்போது, அது 30 ஆயிரம் பள்ளிகளாக உயர்ந்தது. தடுக்கிவிட்டால் அரசுப் பள்ளி என இருந்தது. அதற்குப் பின்னர், 1967இல் திமுக ஆட்சியில் எத்தனை அரசுப் பள்ளிகள் செயல்பட்டன, எவ்வளவு மாணவர்கள் பயின்றார்கள், எத்தனை ஆசிரியர்கள், பணியாற்றினார்கள் தற்போது அது எந்த அளவுக்கு குறைந்துள்ளது ஏன்?

மாணவர்கள் தனியார் பள்ளியை நோக்கிச் சென்றார்கள் என தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் வெள்ளை அறிக்கை வெளியிடத் தயாரா? மேலும், தற்போதையச் சூழலில் அரசுப் பள்ளிகளில் நான்கு மாணவர்கள் படிக்கக்கூடிய நிலைமை ஏற்பட்டுள்ளது.

இது ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் கூட இல்லை. தனியார் பள்ளிகளுக்கு இணையாக ஏன் அரசுப் பள்ளிகள் மேம்படுத்தப்படவில்லை? இதனால் எத்தனை அரசுப் பள்ளிகள் இன்று மூடப்பட்டுள்ளது? இதற்கு தமிழக முதல்வர் என்ன சொல்லப் போகிறார்? தமிழக மக்களுக்கு இதுமாதிரியான துரோகங்களை செய்துவிட்டு மும்மொழிக் கொள்கை பற்றி பேசுகிறார்.

இதையும் படிங்க: மீண்டும் தலைதூக்கும் தங்கம் விலை.. இன்றைய நிலவரம் என்ன?

சென்னையில் மவுண்ட் ரோடு பக்கம் வந்தால் திரும்ப மாட்டீர்கள் என ஒரு முதல்வர் சொல்வது, முதல்வர் பதவிக்கே அவர் அருகதையில்லை. முதல்வர் ஸ்டாலின் கொலை மிரட்டல் விடுத்த குற்றவாளி. தமிழகத்தில் திமுகவுக்கு எதிராகப் பேசினால் கொலை செய்யவும் தயாராகிவிட்டது. 2026-இல் தமிழகத்தில் பாஜக தலைமையில் ஆட்சியைப் பிடிப்போம், திமுகவைத் தோற்கடிப்போம்” என்றார்.

Hariharasudhan R

Recent Posts

இலங்கை தமிழர்களை கொச்சைப்படுத்தும் சூர்யா? திடீரென சர்ச்சையை கிளப்பிய பிரபலம்!

சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…

8 hours ago

7 மணி நேர வேலை… 2 நாள் விடுமுறை : சாம்சங் ஊழியர்கள் மீண்டும் போராட்டம்!

சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…

9 hours ago

ஆளுநருக்கு திடீர் மாரடைப்பு… மருத்துவமனைக்கு நேரில் சென்ற முதலமைச்சர்..!!

ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…

9 hours ago

ஆ ஊனா அமெரிக்கா கிளம்பிடுறாரே இந்த மனுஷன்? கமல்ஹாசன் திடீர் பயணத்துக்கு இதுதான் காரணமா?

எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…

9 hours ago

அரசு நிகழ்ச்சிக்கு ஹெலிகாப்டரில் வந்த அமைச்சர்கள்.. அடுத்த நிமிடமே விபத்து : அதிர்ச்சி வீடியோ!

தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…

10 hours ago

பொன்முடி பேசுனது தப்புதான்.. ஆனா . பெரியாரை விட மோசம் இல்ல.. காங்., மூத்த தலைவர் வக்காளத்து!

பழனியில் தமிழக முன்னாள் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:-…

10 hours ago

This website uses cookies.