புதுச்சேரியில் முதல்முறையாக சுற்றுலாவினர்கள் கடல் அழகை ரசிக்கும் வகையில் பயணிகள் படகு சேவை இன்று தொடங்கியது.
சர்வதேச சுற்றுலா நகரமான புதுச்சேரியில் வெளிநாட்டினர் மற்றும் வெளிமாநிலத்தவர்கள் அதிகம் விரும்பும் புதுச்சேரியின் பல்வேறு கடற்கரைகளை கடலில் இருந்து பார்க்கும் வகையில் படகு சேவை திட்டம் தொடங்கியது. அதன்படி, முதல்முறையாக சொகுசு படகு மூலம் பயணிகளை அழைத்துக்கொண்டு கடலில் இருந்து புதுச்சேரி நகரின் அழகை காணும் வகையில், முதல் சொகுசு படகு பயணம் எக்ஸ்போ கிரவுண்ட்டில் இருந்து 40 பயணிகளை ஏற்றிக்கொண்டு புறப்பட்டது.
படகில் பயணிக்கும் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் பல்வேறு ஏற்பாடுகளை செய்துள்ளார்கள். புதுச்சேரி அரசு சுற்றுலாத்துறையுடன் இணைந்து தனியார் அமைப்பு ஏற்பாடு செய்துள்ள இந்த படகில் பயணிக்க ரூ.500 கட்டணமாக வசூலிக்கப்படுகின்றது.
இந்த படகு புதுச்சேரியின் பாரம்பரிய கடற்கரை, பாண்டி மெரினா, பாரடைஸ், நீளம், ரூபி உள்ளிட்ட பல்வேறு கடற்கரைகள் வழியாக பயணித்து நல்லவாடு வரை 3 மணி நேரம் பயணித்து சுற்றுலாவினர்கள் அதன் அழகை காணும் வசதி செய்யப்பட்டுள்ளது. தினமும் காலை மாலை என இரண்டு தடவை இயக்கப்படும் இந்த படகில் பயணிக்க முன் பதிவு அவசியமாகின்றது. வார இறுதி நாட்களில் பல்வேறு மாநிலத்திலிருந்து புதுச்சேரிக்கு வரும் சுற்றுலாவினர்களுக்கு இந்த படகு பயணம் வெகுவாக கவரும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தல் சமயத்தில் வேலூர் தொகுதியில் வருமான வரித்துறை நடத்திய சோதனையில் திமுக வேட்பாளர் கதிர்ஆனந்த் சார்பாக…
நடிகர் ஆர்யா தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் ஒரு நாயகன். கதைக்காக உடல்களை வருத்தி நடித்து பெயர்…
இழப்பீடு கேட்டு நோட்டீஸ் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்த “குட் பேட் அக்லி” திரைப்படத்தில் பல காட்சிகளில் தமிழ்…
திண்டுக்கல் சுற்றுலா மாளிகையில் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் பேட்டி அளித்தார், அப்போது ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிட…
வெற்றி இயக்குனர் கடந்த 30 வருடங்களுக்கும் மேலாக கோலிவுட்டில் சுந்தர் சி வெற்றி இயக்குனராக வலம் வருகிறார். இவர் இயக்கிய…
குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, பல திரைப்படங்களில் நடித்து வந்தவர் ரவீனா தாஹா. தொடர்ந்து சீரியல்களில் கமிட் ஆனார். இவர் ஜீ…
This website uses cookies.