புதுச்சேரி : புதுச்சேரியில் உள்ள கடைகளுக்கு பிரபல நிறுவனத்தின் பேரில் போலியாக டீத்தூள், சலவை பவுடர் சப்ளை செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
புதுச்சேரியில் உள்ள கடைகளில் பிரபல நிறுவனத்தின் பேரில் போலியாக டீத்தூள், சலவை பவுடர் மற்றும் பெருங்காயத்தூள் விற்பனை செய்யப்படுவது கடந்த சில வாரங்களுக்கு முன்பு கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக 3 கடை உரிமையாளர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, ரூ.1 லட்சம் மதிப்புள்ள போலி டீத்தூள் மற்றும் சலவை பவுடரை போலீசார் பறிமுதல் செய்தனர்.
மேலும் இந்த மோசடியில் தொடர்புடையவர்கள் குறித்து பெரியகடை காவல்நிலைய போலீசார் நடத்திய தொடர் விசாரணையில், அண்ணா நகரைச் சேர்ந்த கண்ணன் (38) என்ற வாலிபர் போலி டீத்தூள், சலவை பவுடர், பெருங்காயத்தூள் உள்ளிட்ட பொருட்களை புதுச்சேரியில் உள்ள கடைகளுக்கு மொத்தமாக சப்ளை செய்தது தெரியவந்தது.
இதனையடுத்து அவரை கைது செய்த போலீசார், அவரிடமிருந்து ரூபாய் 50 ஆயிரம் மதிப்புள்ள போலி டீத்தூள் உள்ளிட்ட பொருட்களை பறிமுதல் செய்து, அவரை காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர்.
இன்னும் 3 நாள்தான் மாமே… ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10…
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டத்தின் தெலுங்கு தேச கட்சியின் மாவட்ட தலைவர் அனந்த லட்சுமி. இவர் ஏற்கனவே காக்கிநாடா தொகுதியில்…
கோவையில் 17 மற்றும் 14 வயது சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுந்த புகாரின் பேரில், சர்ச் பாதிரியார் மீது…
சர்வதேச சந்தையில் சமையல் எரிவாயு விலை பொறுத்து சிலிண்டர் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. அந்த வகையில் சிலிண்டர் விலை தற்போது…
திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஹேமலதா இவருக்கு திருமணம் ஆகி கணவருடன் பிரிந்து வாழ்ந்து வரும்…
மரண வெயிட்டிங் மாமே ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10 ஆம்…
This website uses cookies.