புதுச்சேரியில் மனைவி மீது பெட்ரோல் ஊற்றி கொளுத்திய கணவரை சிசிடிவி கேமிராவில் பதிவான காட்சிகளை கொண்டு போலிசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
புதுச்சேரி வில்லியனூர் ஒட்டாம்பாளையம் பகுதியை சேர்ந்தவர்கள் கணேஷ் – அழகு மீனா தம்பதியினர். இதில் இரண்டு பேரும் இரண்டாம் திருமணம் செய்து கொண்டவர்கள் எனக் கூறப்படுகிறது. இவர்களுக்கு 6 வயதில் ஒரு குழுந்தை உள்ளது. இதில் அழகு மீனா நகர பகுதியான சின்ன மணி கூண்டு அருகே உள்ள ஒரு அழுகு நிலையத்தில் பணிபுரிந்து வருகிறார். கணேஷ் பெயிண்டராக உள்ளார்.
இந்நிலையில் இன்று மதியம் அழகு மீனா பணி புரியும் அழகு நிலையத்திற்கு சென்ற கணேஷ், மீனா மீது பெட்ரோல் ஊற்றி கொளுத்தி உள்ளார். இதில் வலியால் மீனா அலறிய உடன் கணேஷ் அங்கிருந்து தப்பி சென்றுவீட்டார். தொடர்ந்து அருகே இருந்தவர்கள் கை, முகம் மற்றும் தோளில் தீக்காயம் ஏற்பட்ட மீனாவை மீட்டு புதுச்சேரி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இது குறித்து ஒதியஞ்சாலை போலிசார் வழக்கு பதிவு செய்து மனைவி மீது பெட்ரோல் ஊற்றி கொலை செய்ய முயற்சித்த கணவர் கணஷை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
படுதோல்வியடைந்த படம் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சல்மான் கான் நடிப்பில் உருவான “சிக்கந்தர்” திரைப்படம் கடந்த மார்ச் மாதம் 30 ஆம்…
நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை தமிழக அரசு அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டியுள்ளது. அனைத்து கட்சிகளும் பங்கேற்று ஒரு…
பிரம்மாண்ட படைப்பு அட்லீ அல்லு அர்ஜுனை வைத்து இயக்கவுள்ள திரைப்படத்தின் அதிகாரப்பூர்வை அறிவிப்பு வீடியோ ஒன்றைல் இன்று சன் பிக்சர்ஸ்…
தடை செய் தடை செய்… தமிழ் சினிமா உலகில் பல திரைப்படங்களுக்கு பல காரணங்களுக்காக தடை விதிக்க வேண்டும் என…
தமிழக அரசு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை ஆளுநர் கிடப்பில் போட்டு வந்தார். இதனால் தமிழக அரசு - ஆளுநருக்கும் மோதல்…
This website uses cookies.